23 நவம்பர் 2020

டத்தோ சசிகலா மலேசியப் போலீஸ் துணை இயக்குநராக நியமனம்

கோலாலம்பூர், நவ.21-

மலேசியத் தலைமைப் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக டத்தோ சசிகலா பதவி உயர்வு பெற்றுள்ளார். மலேசியப் போலீஸ் தலைமையகம் இன்று அறிவித்தது. அரச மலேசிய போலீஸ் படையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மலேசியப் போலீஸ் தலைமையகமான புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநராக டத்தோ சசிகலாதேவி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார். அரச மலேசிய போலீஸ் படையில் மொத்தம் 9 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

போலீஸ்ப்படை கல்லூரியின் விசாரணை அறிவியல் ஆய்வுத் துறைத் தலைவராக இருந்த டத்தோ எஸ். ஏ. சி. முனுசாமி ரெங்கசாமி தற்போது போலீஸ்ப்படை கல்லூரி நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் தொழில் பிரிவுக்கு உதவி இயக்குநராக இருந்த டத்தோ சசிகலா தற்போது குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநராகப் பொறுப்பேற்று இருப்பது மிகப் பெரிய சாதனை என வர்ணிக்கப் படுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக