30 நவம்பர் 2020

ஜொகூர் மூவார் பஞ்சூர் லனாட்ரோன் தோட்டம்: படங்கள்

1840 - 1880-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் இந்த நாட்டில் குடியேறி விட்டார்கள். இந்த நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு முன்னோடிகளாக விளங்கி உள்ளார்கள். இந்த வரலாற்று உண்மை ஆவணச் சான்றுகளுடன் முன் வைக்கப்படுகின்றது.

நீங்கள் பார்க்கும் படங்கள் 1881-ஆம் ஆண்டில் இருந்து 1903-ஆம் ஆண்டு வரை ஜொகூர், மூவார், பஞ்சூர், லனாட்ரோன் தோட்டத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் படங்கள். ஆர்னால்ட் ரைட் (Arnold Wright) என்பவர் எடுத்த படங்கள்.

லனாட்ரோன்  நீண்ட லயன் வீடுகள். 1881-ஆம் ஆண்டில் கட்டப்பட்டவை.
Line houses built in 1881 for Lanadron plantation workers.

Tamils ​​migrated to this country since 1840's. They are one of the forerunners for the infrastructures in this country. This historical fact is put forward with documentary evidences.

ரப்பர் பால் உறைய வைத்து கிரீப் பாலாக வெட்டப் படுவதற்கு 1903-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தொழிற்சாலை.
Factory built in 1903 to make crepe rubber sheets.


ஜொகூர் லனாட்ரோன் காபி தோட்டம். 1881-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்தக் காபி தோட்டம் தான் பின்னர் காலங்களில் லனாட்ரோன் ரப்பர் தோட்டம் (Lanadron Estate, Panchor, Muar, Johore) என மாற்றம் கண்டது.

லனாட்ரோன் தோட்டத் தொழிற்சாலையின் முகப்புத் தோற்றம்.
1903-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
Facade view of the Lana
dron plantation factory. Factory built in 1903.


லனாட்ரோன் தோட்டத் தொழிலாளர்கள். முதன்முதலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களுடன் ஜாவானிய தொழிலாளர்களும் தமிழர் கங்காணிகளும்
Lana
dron plantation workers. The first batch of Tamils who were brought here. They are accompanied by Javanese workers and Tamil Kanganis.


The pictures here are black and white pictures taken from 1881 to 1903 in Johor, Muar, Panchur, Lanadron estate. Pictures taken by Arnold Wright.


லனாட்ரோன் தோட்ட நிர்வாகியின் பங்களா வீடு.
Lana
dron Estate Manager's Bungalow.


லனாட்ரோன் தோட்ட இரயில் பாதையில் ரப்பர் தொட்டிகள்.
Rubber tanks on the Lanadron plantation railway track.

இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பின்னர் வந்து குடியேறியவர்கள் சிலர்; தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது தவறு. நியாயம் நிலைக்க வேண்டும் என்பதற்காக வரலாற்று ஆவணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

பல மாதத் தேடல்களுக்குப் பின்னர் இந்தப் படங்கள் மீட்கப் பட்டன. மலாயா தமிழர்களைக் குறி வைக்கும் இனவாதத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் தொடரும். 

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.11.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக