24 பிப்ரவரி 2021

மலாக்காவிற்கு பரமேஸ்வரா வைத்த பெயர் அமலாக்கா

மலாக்கா வரலாற்றில் சருகு மானுக்கும் நாய்களுக்கும் நடந்த மோதல் கதை. மலேசியாவில் பலருக்கும் தெரிந்த கதை. அந்த மோதல் கதை நடக்கும் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். இதுவும் அனைவருக்கும் தெரிந்த கதை.

அவர் அந்த இடத்திற்குப் பெயர் வைக்கும் போது அமலாக்கா என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பலருக்கும் தெரியாத கதை.

நெல்லிக் காய்க்கு ஆங்கிலத்தில் Amalacca என்று பெயர். தமிழில் அமலாக்கா.

ஆங்கிலத்தில் வேறு பெயர்கள்:

1. Cicca emblica (L.) Kurz
2. Diasperus emblica (L.) Kuntze
3. Dichelactina nodicaulis Hance
4. Emblica arborea Raf.
5. Emblica officinalis Gaertn.
6. Phyllanthus glomeratus Roxb. ex Wall. nom. inval.
7. Phyllanthus mairei H.Lév.
8. Phyllanthus mimosifolius Salisb.
9. Phyllanthus taxifolius D.Don

Phyllanthus Pectinatus

அமலாக்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் என்று சொல்கிறார்கள். தவறு. அது தமிழ்சொல். இதன் மூலச் சொல அமல் அக்கம்.

அமல் என்றால் அதிகாரம்; நிலம், தொழில், வியாபாரம்

அக்கம் என்றால் தானியம்; கயிறு; மரம்;  

Source: அக்கம் - https://ta.wiktionary.org/s/1tx4

ஆக அமலாக்கா என்பது ஒரு தமிழ்ச்சொல். அந்த மலாக்கா எனும் தமிழ்ச் சொல்லே மலாக்காவிற்கு வைக்கப் பட்டது. ஆக மலாக்காவிற்கு பரமேஸ்வரா வைத்த பெயர் அமலாக்கா.

கடையெழு வள்ளல்கள். பேகன்; பாரி; காரி; ஆய்; அதியமான்; நள்ளி; ஓரி.  அவர்களில் ஒருவர் அதியமான். குறுநில மன்னர். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

Phyllanthus Emblica

அவருக்கு சாகா வரம் தரும் நெல்லிக் கனியை ஔவையார் பரிசிலாகத் தந்தார். “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்த நெல்லிக் கனியை; தான் உண்பதை விட ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.

பரமேஸ்வரா தன்னுடன் வந்தவர்களிடம் ‘இந்த மரத்தின் பெயர் என்ன’ என்று கேட்டு இருக்கிறார். அமலாக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். ஆக அவர் சாய்ந்து இருந்த மரத்தின் பெயரையே வைத்தார். மரத்தின் பெயர் அமலாக்கா மரம்.

எல்லாம் சரி. பரமேஸ்வரா பார்த்ததும் சரி. பேர் வைத்ததும் சரி. ஆனால் இப்போது மலாக்கா மரம் என்று சொல்கிறார்களே; அது உண்மையிலேயே மலாக்கா மரம் தானா. இல்லவே இல்லீங்க.

What tree did Parameswara really see in Malacca - Forest Research Institute Malaysia
Source: www.frim.gov.my › cms › fin › file

Malacca Tree

அசல் மலாக்கா மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus - அசல் நெல்லி மரம்

அதைப் பற்றித் தான் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மலாக்கா மரத்தின் சமஸ்கிருதச் சொல் அமலக்கா. அல்லது அமலங்கா (Amalaki). உண்மையிலேயே அதுதான் அசல் நெல்லி மரம்.

Amalaki, also called “Indian Gooseberry,” is called “The Mother” in Ayurveda due to its support of the entire body/mind and immune system.

Source: https://organicindiausa.com/amalaki/



Phyllanthus Emblica

அதன் அறிவியல் பெயர் Phyllanthus Pectinatus. இந்த மரம் தான் மலாக்காவின் பூர்வீக மரம். மலாக்காவின் அடையாள மரம். உலகமே ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது.

ஆனால் Phyllanthus Pectinatus எனும் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டு; தவறாக எடுத்துக் கொண்டு Phyllanthus Emblica என்று இப்போது அழைக்கிறார்கள்.

Phyllanthus Emblica - கருநெல்லி

ஆங்கிலத்தில் Phyllanthus என்றால் நெல்லி. இந்த நெல்லிகளில் பல வகை உள்ளன.

1. அருநெல்லி - phyllanthus acidus

2. கீழாநெல்லி - phyllanthus niruri

3. கருநெல்லி - phyllanthus reticulatus

4. நெல்லி - phyllanthus emblica

5. கீழா நெல்லி - phyllanthus praternus (2)

6. கீழ்க்காய் நெல்லி - phyllanthus niruri

7. அருநெல்லி - phyllanthus distichus

8. அரநெல்லி - phyllanthus acidus

9. மேலாநெல்லி - phyllanthus maderaspatensis

இந்தப் பட்டியல் நீளும். இருப்பினும் மலாக்கா வரலாற்றில் சர்ச்சைக்கு உரிய நெல்லிகள் இரு வகை.

Phyllanthus Emblica 2

முதலாவது: Phyllanthus Pectinatus. இதற்கு அமலங்கா (Amla) என்று பெயர். சாதாரண நெல்லி. இதுதான் அசல் மலாக்கா மரம்.

இரண்டாவது: Phyllanthus Emblica. இதற்கு கருநெல்லி என்று பெயர். phyllanthus reticulatus என்று மற்றொரு பெயரும் உண்டு. இது அசல் மலாக்கா மரம் அல்ல.

Amalaki - Amla literally means "sour"; it is the Hindi word for a fruit tree (Emblica officinalis or Phyllanthus emblica) that grows throughout India, Malaysia, Indonesia and bears sour-tasting gooseberry-like fruits. Amla is also known by the Sanskrit name "Amalaki." (1)

சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கார்லஸ் லீனஸ் (Carolus Linnaeus). இவர் 1753-ஆம் ஆண்டு; Phyllanthus Pectinatus எனும் அமலக்காய்க்கு Emblica என்று பெயர் வைத்தார். அது கருநெல்லியின் பெயராகும்.

1890-ஆம் ஆண்டில் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Joseph Dalton Hooker) என்பவர் அமலங்காய்களை பேராக், மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பார்த்து இருக்கிறார். குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்.

Phyllanthus Pectinatus 1

கருநெல்லி மரங்கள் (Phyllanthus Emblica) தடிப்பான இலைகளைக் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதியில் காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். ஆனால் நெல்லி மரங்கள் (Phyllanthus Pectinatus) மெல்லிய கூர்மையான இலைகளைக் கொண்டவை. மேலே கிளைகளிலேயே காய்க்கும்.

கருநெல்லி பழத்தின் விதைகள் கூர்மையான முக்கோண அமைப்பு கொண்டவை.

ஆனால் நெல்லி பழத்தின் விதைகள் வட்ட வடிவமானவை. இவற்றின் மலர் அமைப்புகளிலும் மரப்பட்டை தோற்றங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.

கருநெல்லி மரங்கள் இந்தியா, பர்மா, தாய்லாந்து, இந்தோ-சீனா மற்றும் தென் சீனா முழுவதும் இயற்கையாகக் காணப்படும் தாவர இனம்.

கருநெல்லி மரங்கள் மலாய் தீபகற்பத்தில் நடப்பட்ட தோட்ட மரங்களாக வளர்கின்றன. காடுகளில் வளர்வது இல்லை.

Phyllanthus Emblica

தமிழ் மலர் - 25.06.2020

சுருக்கமாகச் சொல்லலாம். நெல்லி மரங்கள் மலாயா தீபகற்பத்தின் உண்மையான வன மரங்களாகும். குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் காடுகளில் அதிகமாகக் காணப் படுன்றன. மலாக்கா ஆயர் குரோ வனப்பூங்காவில் இந்த மரங்களை நிறையவே பார்க்கலாம்.

இருப்பினும் கால ஓட்டத்தில் Amalaka என்பது Emblica என மாற்றம் கண்டது. அந்த வகையில் கருநெல்லி மரத்தைத் தான் மலாக்கா மரம் என்று இப்போது சொல்கிறார்கள்.

அதே அந்தக் கருநெல்லி மரங்களை மலாக்கா முழுமைக்கும் இப்போது நட்டு வைத்து அழகு பாக்கிறார்கள். ஆக நெல்லி மரத்திற்குப் பதிலாகக் கருநெல்லி மரத்தை மலாக்கா மரமாக மாற்றிப் போட்டு வரலாற்றையும் மாற்றி விட்டார்கள். என்ன செய்வது?

மலாக்காவுக்கு இப்போது தேவையானது என்ன தெரியுங்களா. மலாக்கா பூந்தோட்டங்களை அழகு படுத்தும் தோட்டக்காரர்கள் அல்ல. அதன் தாவரவியல் பூங்காக்களை நல்ல முறையில் நிர்வகிக்க நல்ல அறிவார்ந்த தாவரவியலாளர்கள் தான்.

மலாக்காவின் அடையாளச் சின்னமாக இருவகையான மரங்கள் இருக்கின்றன. இதை மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பரமேஸ்வரா பார்த்த மரம் தவறாக அடையாளம் காணப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

Malacca Tree - Phyllanthus Pectinatus

உண்மையாகப் பார்த்தால் நெல்லி மரம் தான் மலாக்கா மரம். கருநெல்லி மரம் என்பது மலாக்கா மரம் அல்ல. ஆக பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரம் நெல்லி மரம். கருநெல்லி மரம் அல்ல.

When the Swedish founder of modern plant classification, Carolus Linnaeus, gave this tree its scientific name in 1753, he Latinised amalaka’ to emblica’ and placed it within the genus Phyllanthus. Hence the melaka tree became known in science as Phyllanthus emblica. Phyllanthus emblica is now planted all over Malacca as the state’s iconic foundation tree.

Malacca may have to accept that it has two iconic foundation trees: the tree that Parameswara saw and misidentified, and the tree it got mistaken for. (2)

இதுவும் ஒரு வரலாற்றுச் சிதைவு தான். மறுபடியும் சொல்கிறேன்.  பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus எனும் நெல்லி மரம்.

அந்த மரத்திற்குப் பதிலாக Phyllanthus Emblica எனும் கருநெல்லி மரத்தின் பெயரைச் சூட்டி வரலாற்றைத் திரித்து விட்டார்கள். வேதனையாக இருக்கிறது.

Malacca Tree Phyllanthus Pectinatus

இதைப் பற்றி மலாக்கா மாநிலச் சுற்றுப் பயணக் கழகத்திற்கும்; மலாக்கா சுற்றுச்சுழல் பராமரிப்புக் கழகத்திற்கும் மூன்று நான்கு முறை கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். ஆண்டுகள் கடந்து விட்டன.

மலாக்காவில் முதலமைச்சர்கள் வருகிறார்கள். போகிறார்கள். மலாக்கா புலாவ் பெசார் தீவில் புதைந்து கிடக்கும் புதையலைத் தேடுவதில் மட்டும் கோடிக் கோடியாய்ச் செலவழித்துச் சாதனையும் செய்கிறார்கள்.

ஆனாலும் மலாக்காவின் அசல் மலாக்கா மரத்தைக் கண்டுபிடிக்கத் தவறி விட்டார்களே. மலாக்கா மரத்தின் உண்மைத் தனம் இன்று வரையிலும் மாறவே இல்லை.

அந்த வகையில் மலாக்கா வரலாற்றுக்கும் ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே  கொரோனா வந்து விட்டது போலும். இப்போது மூச்சுவிட முடியாமல் திணறிப் போய் மூர்ச்சையாகும் நிலையில் முடங்கிப் போய்க் கிடக்கிறது போலும்.

பாவம் மலாக்கா மரம். அதற்குச் சோதனை மேல் சோதனைகள் இல்லை. வேதனை மேல் வேதனைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.02.2021

சான்றுகள்:

1. https://www.banyanbotanicals.com/…/livi…/herbs/amalaki-amla/

2. https://www.worldheritage.com.my/blog/2011/11/09/what-tree-did-parameswara-see-while-resting-besides-the-river/

3. https://www.thestar.com.my/business/business-news/2011/11/05/what-tree-did-parameswara-really-see-in-malacca

4. https://www.nparks.gov.sg/florafaunaweb/flora/3/0/3062


 

1 கருத்து: