30 மார்ச் 2021

கிள்ளான் நெடுஞ்செழியன் எளிமையின் வழமை

 தமிழ் மலர் - 28.03.2021

திருக்குறள். காலத்தில் அழியாத கலைநெறிக் கருவூலம். ஞாலத்தில் மறையாத மொழிநீதிக் கருவூலம். மனிதச் சிந்தனைகளின் வாழ்வியல் தத்துவம். அந்த வாழ்வியல் தத்துவத்தில் வாழ்வாதார அணிகலனாய்ப் பரிணமிக்கும் ஒரு பொற் குவியல். பரிமேழகம் பார்த்துப் பரிவட்டம் கட்டிப் பாரிஜாதம் பார்க்கும் தலைவாசல். ஒவ்வொரு தமிழர்க் குடும்பத்திலும் சத்தியம் பேச வேண்டிய ஒப்பற்ற வாழ்வியல் விழுமியம்.

இப்படிச் சொல்பவர் ஒரு திருக்குறள் புகழேந்தி அல்ல. திருக்குறள் செம்மல் அல்ல. திருக்குறள் முனைவரும் அல்ல. மாறாக மலேசிய நாட்டில் வாழும் ஒரு சாமானியத் தமிழர். நெடுஞ்செழியன் எனும் பெயரில் நெடும் காலமாய்ப் பயணிக்கும் ஒரு சாமானிய மனிதர்.

தமிழ் இனத்திற்கும்; தமிழ் மொழிக்கும்; தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சத்தம் இல்லாமல் யுத்தம் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்து வரும் ஒரு சாதாரண மனிதர்.

பல் மருத்துவராகத் தொழில் சேவைகள் செய்தாலும் பாமரர்கள் போற்றும் மனிதநேயச் சேவைகளைச் செய்து வருகிறார். ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக தமிழ் மொழி - தமிழ்ப்பள்ளிச் சேவைகள். பலருக்கும் தெரியாத உண்மை.

அவரின் சேவைப் பின்புலன்களைப் பார்க்கும் போது மலைப்பு ஏற்படவில்லை. வியப்பு ஏற்படவில்லை. வாழ்த்த வேண்டிய மனித உணர்வுகள் என்றே தோன்றுகிறது. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிச் சிறப்பு செய்ய வேண்டும்.

இடையில் சின்ன ஒரு செருகல் வந்து போகிறது. சொல்ல வேண்டிய நிலைமை. தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பத்து பாக்கெட் மெகி; பத்து பாக்கெட் மீகூன்; பத்து கிலோ அரிசி; பத்து ரிங்கிட் ஆங் பாவ். அதிகம் இல்லை. இரண்டு மூன்று நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சின்ன ஓர் உபசரிப்பு. இருந்தாலும் பத்து பேரைக் கூப்பிட்டு; பத்து படங்களைப் பிடித்து; பத்திரிகையில் போட்டு படம் காட்டும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு சிலர்தான். எல்லோரும் அல்ல.

அதே மண்ணில் ஆர்ப்பாட்டம் இல்லாமல்; ஆரவாரம் இல்லாமல்; எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்; மிக அமைதியாகச் சிலரும் பலரும் பயணிக்கின்றார்கள். அப்படிப்பட நல்ல உள்ளங்கள் விளம்பரங்கள் தேடுவது இல்லை. வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை.

அதே சமயத்தில் அசல் உண்மையான சேவகர்களைப் பலருக்கும் தெரிவதும் இல்லை. இருக்கிற இடம் தெரியாமல் வாழ்கின்ற அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதும் குறைவு. வெளிச்சம் கிடைப்பதும் குறைவு.

அந்த விளம்பரம் வெளிச்சங்களை அவர்கள் நாடிப் போவது இல்லை போலும். அப்படிப்பட்டவர்களை நாம் தான் தேடிப் போக வேண்டும். அந்தப் பட்டியலில் பயணிப்பவர்களில் ஒருவர்தான் பூச்சோங் பல் மருத்துவர் நெடுஞ்செழியன். டாக்டர் நெடு என்று அழைக்கிறார்கள்.

அனைத்துக அளவில் மருத்துவத் துறை வழியாக இவர் அறியப் பட்டாலும்; சத்தம் இல்லாமல் சலனமான வெளிச்சத்தில் சாதித்து வருகிறார். இவர் மலாயாத் தமிழர்களின் வாரிசு. ஒரு மலேசியத் தமிழர். வாழ்த்துகிறோம்.

இவரின் தமிழ்ச் சேவைகள்; தமிழார்ந்த உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இவர் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவர்.
 
டாக்டர் நெடுஞ்செழியன் ஒரு தமிழ்மொழிச் சேவையாளர். தமிழினப் பற்றாளர். தமிழ் மொழியை உயிருக்கும் மேலாய்க் கருதும் ஒரு தமிழர்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எளிமையான வழமையில் தமிழ் வளர்க்கும் இவரின் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். மலேசியாவில் நல்ல தமிழ்ச் சேவைகள் செய்து வருகிறார். அவரைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும்; அடையாளப் படுத்த வேண்டும் என்று நினைத்தது உண்டு. அதற்கும் சரியான நேரம் காலம் சரியாக அமைய வேண்டும் அல்லவா.

சில தினங்களுக்கு முன்னர் பூச்சோங்கில் அமைந்து இருக்கும் அவருடைய பல் மருத்துவகத்தில் சந்தித்தேன். ஏற்கனவே அலைபேசியில் பேசியது உண்டு. கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.  

எளிமையானத் தோற்றம். இயல்பான பழகுமுறை. சொற்களில் அழுத்தங்கள். உச்சரிப்புகளில் தெளிவு. உவமானங்களில் உயிர்ப்புகள். சுய விளம்பரத்தைத் தவிர்க்கும் பாங்கு. பலரையும் கவர்ந்து இருக்கலாம். என் கணிப்பு சரியாக அமையும்.

அவருடைய மருத்துவகத்தில் ஐந்து பணியாளர்கள். ஒருவர் மருத்துவர். பெயர் விக்னேஸ்வரி. பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் போகச் சொல்லி மலேசியச் சுகாதார அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பயணம்.

மேலும் நான்கு பணியாளர்கள். பெயர்கள் வேண்டாமே. வாடிக்கையாளர்களை இனிதாக வரவேற்று இனிதாகப் பேசி இனிதாகச் சேவை செய்கிறார்கள். தனியார் மருத்துவகம் என்பதற்காக அல்ல. அவர்களின் இயல்பான சேவை நற்பண்புகள்.  

வரவேற்பு அறையில் சந்திப்பு. முதல் அறிமுகம். அவர் சொல்கிறார். மனிதனாகப் பிறந்தாலே பற்பல வேதனைகள்; பற்பல சோதனைகள்; பற்பல அவலங்கள். அத்தகைய மனித வாழ்க்கையை இனிமையாக்கி அலங்கரிப்பது எளிமையான விசயங்கள் தான் ஐயா.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள்; நம்மைச் சார்ந்த நல்ல நல்ல நிகழ்வுகள்தான் நம்முடைய மனங்களை அழகு செய்கின்றன. இப்படி அழகாகத் தமிழ் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழில் பேசுவது அவமானம் அல்ல. அது நம் அடையாளம்!

'பேசு தமிழா பேசு’ எனும் பேச்சுப் போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உயர்க்கல்வி மாணவர்களிடையே நடைபெற்று வரும் “பேசு தமிழா பேசு” போட்டியின் நீதிபதிகளில் ஒருவராகப் பயணித்தவர் டாக்டர் நெடுஞ்செழியன். இது போன்று பல தமிழ் மேடை நிகழ்ச்சிகளில் நடுவராகப் பயணித்து உள்ளார்.

எளிமையை நாம் ஏளனமாகப் பார்க்கக் கூடாது. புறக்கணிக்கக் கூடாது. அந்த எளிமையை நம் வாழ்க்கையுடன் அணைத்து மகிழ வேண்டும். மனித வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எளிமை என்றும் இனிமையாக இருக்கும். இது மிகையில்லை. சத்தியமான உண்மை என்று சொல்கிறார். அந்த எளிமையில் தான் பூச்சோங் நெடுஞ்செழியன் என்பவரும் நிற்கின்றார்.

முதலில் அவரின் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். இருவருமே இனிய தமிழ் எங்கள் தமிழ் என்று வாழ்ந்தவர்கள். எளிமைத் தமிழில் இனிமை கண்டவர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். தகப்பனாரின் பெயர் வேங்கு. தாயாரின் பெயர் வள்ளியம்மை.

தமிழ் நாவல்களைப் படிப்பது என்றால் அவர்களுக்கு அலாதியான ஆர்வம். சாண்டில்யன்; கல்கி; அகிலன்; டாக்டர் மு.வ; நா. பார்த்தசாரதி; ஜெயகாந்தன்; ஜானகி ராமன்; கி.வ.ஜெகநாதன்; ரமணி சந்திரன்; பாலக்குமரன்; ஜெயமோகன்; ராஜம் கிருஷ்ணன்; சுஜாதா போன்றோரின் நாவல்களைச் சேகரித்து தங்கள் பிள்ளைகளையும் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த நாவல்களைச் சின்ன வயதிலேயே படித்ததினால் தான் நெடுஞ்செழியன் இன்று தமிழ் மொழிப் பயன்பாட்டில் சிறந்து விளங்குகிறார் என்று சொல்லலாம்.

இவருடைய தந்தையார் ஒரு தமிழாசிரியர். ஷா ஆலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவருடைய தாயார் தந்தையார் மூலமாக மட்டும் அல்ல. பாட்டியின் மூலமாகவும் டாக்டர் நெடுஞ்செழியன் தமிழை வளர்த்துக் கொண்டார்.

இராமயணத்தில் ஒவ்வொரு காண்டமாக அவரின் பாட்டி சொல்லிக் கொடுத்து இருக்கிறார். பாலகாண்டம்; அயோத்தியா காண்டம்; ஆரண்ய காண்டம்; கிட்கிந்தா காண்டம்; சுந்தர காண்டம்; யுத்த காண்டம் என்று எல்லாக் காண்டங்களையும் காட்சி காட்சியாகப் பாட்டி சொல்லுவாராம்.

டாக்டர் நெடுஞ்செழியன் சொல்கிறார். எடுத்துக்காட்டாக அயோத்தியா காண்டம். இராமனுக்கும், சீதைக்கும் காட்டில் நடந்த வனவாசம் காதை. அந்தக் கதையைச் பாட்டி சொல்லும் போது எங்களுக்கு அந்த வனவாசக் காட்சி அப்படியே தெரியும். அப்படி உயிரோட்டமாய்க் கதையைச் சொல்வார்.

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. இது ஓர் இதிகாசக் காப்பியம் என்பதை நினைவில் கொள்வோம். டாக்டர் நெடுஞ்செழியன் எப்படி விவரிக்கிறார் என்று பார்ப்போம்.

’திரௌபதி காட்டில் உட்கார்ந்து இருப்பாங்க... வெளியே ஒரு புள்ளிமான் ஓடிக் கொண்டு இருக்கும்... அந்த மானைப் பிடித்துத் தரச் சொல்லுவாங்க... பீமன் ஒரு பலசாலி. அவர்தான் மானைப் பிடிக்க முதலில் போவார்.

அந்த மான் எங்கே எங்கேயோ ஓடும். மானை விரட்டி விரட்டி பீமனுக்குத் தாகம் எடுத்துவிடும். குடிப்பதற்கு தண்ணீர் தேடுவார். அப்போது குயிலும் மயிலும் கத்தும் சத்தம் கேட்கும். ஒரு குளிர்ந்த இடத்தில் தான் குயிலும் மயிலும் கத்தும். ஆக அங்கே தண்ணீர் இருக்கும் என்பதைப் பீமன் உணர்ந்து கொண்டார்.

அங்கே ஒரு சின்ன தடாகம். பீமன் தண்ணீர் குடிக்கப் போகிறார். அப்போது அங்கே இருந்த குயிலும் மயிலும் பீமனிடம் கேள்விகள் கேட்கின்றன. ‘ஏய் மானிடா... எங்களுடைய மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு தண்ணீர் குடி. இல்லை என்றால் இறந்து போவாய்.

முதல் கேள்வி: வாடாத பயிர் எது? இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது?

கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தாகத்தினால் பீமன் தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார். அடுத்து அர்சுணன், நகுலன், சகதேவன் அனைவருக்கும் அதே நிலைமை. தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார்கள்.

கடைசியாகத் தர்மம் வருகிறார். மூத்தவர். நிதானமாக நடந்து கொள்கிறார். அவர் மூன்று கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லிவிட்டுத் தண்ணீர் குடிக்கிறார். அப்போது குயிலும் மயிலும் சேர்ந்து சொல்கின்றன. நாங்கள் தான் சித்ர குப்தன்; எமதர்மன்.  உங்களைக் அந்த இடத்தில் இருந்து இங்கே கொண்டு வந்து காப்பாற்றுவதற்காகத் தான் மானை அனுப்பி வைத்தோம் என்று சொல்கின்றன.   

இது கதை. இதில் முக்கியமானது குயிலும் மயிலும் கேட்ட கேள்விகள் தான். முதல் கேள்வி: வாடாத பயிர் எது? உங்களுக்குத் தெரியுமா. சொல்லுங்கள் பார்ப்போம். பரவாயில்லை. நானே சொல்கிறேன்.

வாடாத பயிர் அருகம்புல். அதுதான் வாடாத பயிர். இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? தாய்மை அடைதல். தாய்மை ஒரு சுமை தான். ஆனாலும் வருத்தம் இல்லாத சுமை தானே. எந்தத் தாயாவது தன் குழந்தையைச் சுமை என்று சொல்வாளா?

அடுத்து மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது? இதற்கான பதில் பிறப்பு இறப்பு. புரிகிறதா. பிறப்பும் இறப்பும் தான் உலகத்திலேயே அதிசயம் என்று மகாபாரதம் சொல்கிறது. உண்மைதான். பிறப்பதும் ஓர் அதிசயம். இறப்பதும் ஓர் அதிசயம்.

பூச்சோங் டாக்டர் நெடுஞ்செழியனுக்கு சின்ன வயது. ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் பாட்டி அந்தக் கதையைச் சொன்னார். இப்போது அவருடைய வயது 50-ஐ தாண்டி விட்டது. இருப்பினும் நன்றாக நினைவில் வைத்து இருந்து இப்போதும் சொல்லிக் காட்டுகிறார்.

நேற்று நடந்தை இன்று மறந்துவிடும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருப்பினும் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி சொன்ன கதையை மறக்காமல் இன்றும் நினைவில் வைத்து இருக்கிறார். பாராட்ட வேண்டும். சின்ன வயதில் கற்றது சிலை மேல் எழுத்து என்று சொல்வார்கள். உண்மை.

அது மட்டும் அல்ல. அவருடைய பாட்டி எப்போதும் புத்தகம் கையுமாக இருப்பாராம். எங்கே எப்போதும் கையில் ஒரு புத்தகம் இருக்குமாம். புத்தகப் பாட்டி என்று பட்டம் கொடுக்கலாம். அவரிடம் இருந்து தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நெடுஞ்செழியனுக்கு வந்ததாகவும் சொல்கிறார்.

இப்போது எல்லாம் இணையத்தைப் பார்த்துப் படிக்கிறோம். அப்போது புத்தகத்தைப் பார்த்துப் படித்தோம். உலகம் ரொம்பவும் மாறி விட்டது. இருந்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தைச் சின்னப் பிள்ளைகளிடம் வழக்கப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்காமல் போய் விடுவார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நூல்களைப் படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் நினைவாற்றல் கூடுகிறது. சிந்திக்கும் திறன் கூடுகிறது. விவாதிக்கும் திறமை விரிவடைகிறது. இணையம் என்பது உயிர்க் காற்று. ஆனால் நூல் என்பது உயிர்மண் என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன்.

இன்று (28.03.2021) காலை 10 மணிக்கு மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் ‘அமுதே தமிழே’ எனும் இலக்கிய நிகழ்ச்சி. பொன்மணியாள் பொன் கோகிலம் படைக்கும் அற்புதமான இலக்கிய நிகழ்ச்சி. பொன் கோகிலம் மலாயா தமிழ் உலகிற்கு கிடைத்த மற்றும் ஒரு பொன் கலசம். அந்த நிகழ்ச்சியில் அரு.சு. ஜீவானந்தன் கதைகள் எனும் தலைப்பில் டாக்டர் நெடுஞ்செழியன் இலக்கிய உரை ஆற்றுகிறார்.  கேட்டுப் பாருங்கள்.

பார்த்தால் அவரா இவர் என்று ஐயம் எழும். கேட்டால் அந்த மனிதரா என்று குழப்பமும் ஏற்படும். அவ்வளவு எளிமையாகப் பழகுகிறார். தமிழ் மொழியைப் பற்றியும் தமிழினம் பற்றியும் நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார். நாளைய கட்டுரையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2021

சான்றுகள்:

1. Sang Kancil Foundation Malaysia - https://www.hati.my/yayasan-sang-kancil-malaysia/

2. Yayasan Sang Kancil Malaysia - https://www.facebook.com/yayasanskm/

3. Nedu The Dentist Klinik Pergigian Puchong - https://www.whatclinic.com/dentists/malaysia/kuala-lumpur/bukit-jalil/nedu-the-dentist-klinik-pergigian-puchong

4. Nedunchelian Vengu - University of Malaya Department of Oral Pathology & Oral Medicine & Periodontology Nedunchelian Vengu

பேஸ்புக் பதிவுகள்

Venogobaal Kuppusamy: நல்லோரை நயம்பட அறிமுகம் செய்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி! இருவருக்கும் நன்றியும் நல்வாழ்த்துகளும்!

Muthukrishnan Ipoh >>> Venogobaal Kuppusamy: நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை... ஒருவர் பண்புடையாராக இருப்பின் மழை பொழியும். உயிர்கள் தழைக்கும்.

Devendran Ravi: வாழ்த்துக்கள் ஐயா

Arni Narendran: Vaazthugal from Mumbai 🙏🌿

Muthukrishnan Ipoh >>> Arni Narendran: நன்றிங்க

Sheila Mohan: வாழ்த்துகள் சார்...

Kala Balasubramaniam:

Arojunan Veloo: மகிழ்ச்சி; வாழ்த்துகள் டாக்டர்!

Letchumanan Nadason:

Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: அவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Balamurugan Balu:

Velan Mahadevan:

Sharma Muthusamy:

Arichanderan Manickavasakar:

Isham Balqis: Vaalthukkal sir

R Muthusamy Rajalingam: விளம்பர வெளிச்சம் அற்று, தமிழ்ப் பணி ஆற்றும், அவருக்கு வாழ்த்துகள். சிறப்பான ஆக்கம் ஐயா.

Muthukrishnan Ipoh >>> R Muthusamy Rajalingam: ஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பயணிக்கின்றார்... எவர் ஒருவர் தாம் செய்த நல்காரியங்களைப் பற்றி வெளியே சொல்லாமல் இருக்கின்றாரோ அவரை நன்மக்களின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும்.

Kumar Murugiah Kumar's: வாழ்க அவர் தமிழ் உணர்வோடு, வாழ்த்துகள் பாராட்டுகள் ஐயா!

Muthukrishnan Ipoh >>> Kumar Murugiah Kumar's: தமிழ் மொழிக்குச் சேவை செய்பவர்களை அடையாளப்படுத்த வேண்டியது நம் கடமை ஐயா..

Kumar Murugiah Kumar's >>> Muthukrishnan Ipoh: எல்லாம் இறைவனின் சித்தம் ஐயா ! தொடருங்கள் ஐயா !

Muthukrishnan Ipoh: இலை மறைக் காயாக வாழும் ஒரு தமிழர்... அறிமுகம் செய்வது நல் வழக்கம்.

Sheila Mohan: வாழ்த்துகள் சார்..

தேவிசர சரவணக்குமார்:
அருமை.... வாழ்த்துகள்

Raghawan Krishnan: Fantastic.

Sara Rajah: வாழ்த்துகள் அய்யா

தேவிசர சரவணக்குமார்:

Oviyar Mugil:


Isham Balqis: Vaalthukkal sir






24 மார்ச் 2021

கடாரத்து மண்ணில் கால்பதித்த போதி தர்மர்

தமிழ் மலர் - 24.03.2021

போதி தர்மர் கடாரத்து மண்ணில் கால்பதித்த பின்னர்தான் சீனாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு அப்போது கி.பி.500-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்கள்; தமிழர் அல்லாத இதர இந்தியர்கள்; பூர்வீக மக்களுடன் பழகி இருக்கிறார். அவர் குனோங் ஜெராய் மலையில் சில வாரங்கள் தியானம் செய்ததாகவும் சொல்லப் படுகிறது.


சான்றாக ஓர் உள்நாட்டுத் தகவலை முன்வைக்கிறேன். அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவில் வாழ்ந்த மக்களுக்குச் சீலாட் தற்காப்புக் கலையைப் போதி தர்மர் அறிமுகப் படுத்தியதாகத் தகவல்.

2006-ஆம் ஆண்டில் சீலாட் துவா - வாழ்க்கையின் மலாய் நடனம் (Silat Tua - The Malay Dance of Life) எனும் நூலில் எழுதப்பட்டு உள்ளது. ஜைனல் ஆபிடின் ஷேக் அவாப் மற்றும் நைகல் சுட்டன் (Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton) ஆகிய இருவர் எழுதிய நூல்.

கடாரத்திற்கு வடக்கே தாய்லாந்து நாட்டுப் பகுதியில் அமைந்து இருந்த பட்டாணி எனும் இடத்தில் போதி தர்மர் சீலாட் கலையைச் சொல்லிக் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்கள். அந்தக் கலை நீண்ட காலமாக பினாங்கில் இரகசியமாக இருந்ததாகவும் பின்னர் சுமத்திராவிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது அந்தக் காலத்தில் (கி.பி. 500) கடாரத்தில் வாழ்ந்த மக்களிடம் போதி தர்மர் வர்மக் கலையைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம் அல்லவா?

(Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1)

முன்பு காலத்தில் பருவக் காற்றை நம்பி பாய்மரக் கப்பல்களில் பயணம் செய்தார்கள். கடாரத்து மண்ணில் கால் பதிக்கும் பயணிகள்; அடுத்த பருவக் காற்று சாதகமாக அமையும் வரையில் காத்து இருக்க வேண்டும். எப்படியும் சில மாதங்கள் பிடிக்கலாம்.

அந்த இடைவெளிக் காலத்தில் தான் போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களுடன் பழகி இருக்கிறார். வர்மக் கலையின் அடிப்படைக் கல்வியைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம்.


அவருடைய சீனப் பயணத்தின் நோக்கம் என்பது சீனாவில் புத்த மதத்தைப் பரப்புவது ஆகும். ஆக அவரைப் புத்த மதப் பரப்புரையாளராகவும் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் கடாரத்தில் புத்த மதப் பரப்புரைகளைச் செய்து இருக்கலாம். கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் புத்த மதம் நன்றாகவே வேரூன்றி விட்டது. அதுவும் போதி தர்மருக்குச் சாதகமாக அமைந்து போனது.

போதி தர்மர் கடாரத்தில் கால் வைக்கும் போது தென்கிழக்கு ஆசியா நாடுகளில் புத்த மதம் ஆழமாகச் சார்ந்து விட்டது. அருகாமையில் இருந்த தாம்பிரலிங்கா அரசும் ஒரு புத்த மத அரசாகும். இந்த அரசு கம்போடிய அரசாங்கத்துடன் நல்ல முறையில் நட்புறவு பாராட்டி வந்தது. சரி.

(Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India)


ஒரு செருகல். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ராமர் பாலத்தையும் கடிக்கிறார்கள். கடித்துக் கதைகள் சொல்கிறார்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆக போதி தர்மரைப் பற்றி இப்போதே எழுதி வைக்க வேண்டும். முடிந்தால் காபிரைட் எடுத்து வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போதி தர்மரையும் அல்லாக்காகத் தூக்கிக் கொண்டு போய் ராமர் பாலத்தில் கடாசி விட்டுப் போகலாம். யாரையும் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அடிக்கடி வயிற்றெரிச்சல். கொட்டிக் கொள்கிறேன்.

ஒரு சில ஆதிக்க வர்க்கத்தினரின் பிழைப்புக்காக ஒரு சமூகம் கிணற்றுத் தவளைகளாக வார்க்கப் படுகின்றது எனும் வயிற்றெரிச்சல். வேறு என்னங்க சொல்வது. விடுங்கள். நமக்கு ஊர் பொல்லாப்பு வேண்டாமே.

போதி தர்மர் என்பவர் ஒரு பல்லவர். தமிழர் இனத்தைச் சார்ந்தவர். அதனால் இந்தக் கட்டுரையின் வழி அவருக்குச் சிறப்பு செய்யலாம் என்பது நம்முடைய மானசீகமான மரியாதையும்கூட. சரிங்களா.

அதற்கு முன் பல்லவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். பல்லவர்கள் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். இவர்கள் இலங்கைக்கு அடுத்து இருக்கும் மணிபல்லவத் தீவில் இருந்து வந்தவர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அது எல்லாம் இல்லை. பல்லவர்கள் என்பவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். இருந்தாலும் பல்லவர்கள் நெடுங்காலம் தமிழ்நாட்டில் இருந்ததால் இறுதிக் கட்டத்தில் தமிழர்களாகவே மாறிப் போனார்கள். தமிழர்களாகவே வாழ்ந்தும் காட்டினார்கள். அதுதான் உண்மை.


இந்தப் பல்லவர்கள் தமிழ் நாட்டில் நிறைய குகைக் கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள். மகாபலிபுரத்தைத் தோற்றுவித்தவர்களும் இவர்கள் தான். பல்லவர்கள் காலம் தமிழகத்தின் கட்டடக் கலைக்குப் புகழ் தேடித் தந்த காலமாகும்.

அவர்களின் குடைவரைக் கோயில்களை மறக்க முடியுமா. இல்லை மாமல்லபுரத்துச் சிற்பங்களைத் தான் மறக்க முடியுமா. அவர்கள் உருவாக்கிய குடைவரைக் கோயில்களை இன்றைக்கும் உலக மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அதைப் பார்த்து நாமும் மயங்கிப் போகிறோம்.

போதி தர்மர் எந்த ஆண்டு சீனாவிற்குச் சென்றார். மிகச் சரியான தகவல்கள் இன்று வரையிலும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இரு வெவ்வேறான கருத்துகள் சொல்லப் படுகின்றன.

சீனாவை லியூ சோங் வம்சாவளியினரின் (Liu Song Dynasty) ஆட்சிக் காலத்தில் போதி தர்மர் அங்கு போய் இருக்கலாம். இது ஒரு கருத்து. லியூ சோங் வம்சாவளியினர் சீனாவை கி.பி. 420-ஆம் ஆண்டில் இருந்து 479-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.


அடுத்து லியாங் வம்சாவளியினரின் (Liang Dynasty) ஆட்சிக் காலம். அந்தக் காலக் கட்டத்தில் போய் இருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. லியாங் வம்சாவளியினர் கி.பி. 502-ஆம் ஆண்டில் இருந்து 557-ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்தனர்.

இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவு. கி.பி. 547-ஆம் ஆண்டில் யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதிய பதிவு. இவர் மகாயான புத்தப் படைப்புகளைச் சீனமொழிக்கு மொழி பெயர்த்தவர். இவரின் பதிவுகளை யாங் சுவான்சீயின் குறிப்பு என்றும் சொல்வார்கள்.

(Yang Xuanzhi's The Record of the Buddhist Monasteries of Luoyang)

அந்தப் பதிவு சீனாவின் லுவோயாங் (Luoyang) கிராமப் பகுதியின் புத்த மடாலயங்களில் இருந்து கிடைத்த பதிவாகும். அந்தப் பதிவில் இப்படிப் பதிவாகி உள்ளன. முன்பு காலத்தில் மத்திய ஆசியாவில் இருந்து ஒரு பாரசீகத் துறவி வந்தார். அவருடைய பெயர் போதி தர்மா. அவர் காட்டு எல்லையின் வழியாகச் சீனாவை அடைந்தார். யோங்னிங் (Yongning) எனும் இடத்தில் ஒரு தூபி இருந்தது.


அந்தத் தூபியின் தங்கத் தட்டுகளைப் பார்த்ததும் மெய்மறந்து அதைப் புகழ்ந்து பாடினார். அதன் பிறகு போதி தர்மா இப்படிச் சொன்னார். இது உண்மையாகவே ஆவிகளின் வேலை. எனக்கு 150 வயதாகிறது. நான் எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்துள்ளேன். நான் போகாத இடமே இல்லை. ஆனால் இது போன்ற ஒரு தூபியை நான் பார்த்ததே இல்லை.

பிறகு தன் கரங்களையும் கூப்பினார். நாள் கணக்கில் நின்றவாறு கும்பிட்டுக் கொண்டே இருந்தார். இந்த விமர்சனம் யாங் சுவான்சீ என்பவரால் எழுதப் பட்டது. இது முதலாவது குறிப்பு.

(Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press, ISBN 0-520-21972-4)

இரண்டாவது குறிப்பு தான்லின் (Tanlin) என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய வாழ்நாள் காலம் கி.பி. 506 கி.பி. 574. இவர் ஒரு நூலுக்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அதன் பெயர் இரு வாயில்களும் நான்கு செயல்களும் (Long Scroll of the Treatise on the Two Entrances and Four Practices). அதில் போதி தர்மர் ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார். மீண்டும் நினைவு கூர்கிறேன்.

வர்மக் கலையை உருவாக்கித் தந்தவர் அகத்தியர். உருவான இடம் பொதிகை மலை. இப்போது குற்றால மலை. வர்மக் கலையில் இருந்து உருமாற்றம் கண்டதுதான் குங்பூ தற்காப்புக் கலை.


பாண்டிய மன்னர்களில் பிரசித்தி பெற்றவர் ஜடாவர்ம பாண்டியன். வர்மக் கலையை வாழ்த்தும் ஒரு ஜீவனாக வாழ்ந்து காட்டினார். இவருடைய மற்றொரு பெயர் கோச்சடையான். வர்மக் கலையை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார். இன்றைய அளவில் வர்மக் கலை மறக்க முடியாத மாற்றங்களைக் கண்டு மந்திரங்கள் பேசி வருகின்றன.

பாண்டியர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் பல்லவர்கள். வர்மக் கலையின் மகிமையை உணர்ந்த பல்லவர்கள். அதைப் பெரிதும் போற்றி ஆராதனை செய்தனர். பின்னர் காலங்களில் வர்மக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டது.

பல்லவர்களின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது. கி.பி. 350-இல் முதலாம் கந்தவர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் நந்திவர்மன். இரண்டாவது மகன் குமாரவிஷ்ணு. மூன்றாவது மகன் புத்தவர்மப் பல்லவன். இவர்களில் மூன்றாவதாகப் பிறந்த மகன்தான் புத்த வர்மப் பல்லவன் என்கிற போதி தர்மர்.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான செய்தியைப் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. போதி தர்மர் என்பவர் களப்பிரர் வம்சத்தைச் சார்ந்தவர் என்று மற்றொரு கருத்தும் இருக்கிறது. வரலாற்றில் களப்பிரர்களின் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோல போதி தர்மரின் வரலாறும் கொஞ்சம் அல்ல ரொம்பவே இருண்டு கிடக்கிறது.

போதி தர்மரைப் பற்றிய செய்திகள் மிக மிகக் குறைவாகவே வரலாற்றில் பதிவாகி உள்ளன. அதிலும் அவர் இந்தியாவில் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் அதிகம் இருக்காது.  

ஒரே ஒரு பக்கத்தில் எழுதி முடித்து விடலாம். இப்பொழுது நமக்கு கிடைத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச வரலாற்றுத் தகவல்கள்கூட சீனா நாட்டு ஜப்பானிய நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்தவையாகும். அவர்கள் இல்லை என்றால் இதுவும் கிடைத்து இருக்காது.

தமிழகத்தின் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர்களின் வரலாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து தான் தொடங்குகிறது.

மூவேந்தர்களும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நேரம். அப்படிச் செழிப்பாக போய்க் கொண்டு இருக்கும் போது தான் தென்னகத்தில் அடுத்து அடுத்து அயல்நாட்டுப் படையெடுப்புகள் நடந்தன.

பல்லவர்களின் படையெடுப்புகள் சேரர், சோழர், பாண்டியர்களின் எல்லைகளைச் சுருங்கச் செய்தன. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி வந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று புற்றீசல் போல களப்பிரர்கள் வந்தனர்.

அவர்களின் ஆதிக்கமும் விரிவு அடைந்தது. தொண்டை நாட்டின் காடுகளில் வசித்தவர்களே களப்பிரர் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். அது எல்லாம் இல்லை. களப்பிரர் என்பவர்கள் அசல் தமிழர்களே என்று மற்றொரு சாரார் சொல்கின்றனர்.

களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி வந்தனர். எது எப்படியோ களப்பிரர்களின் வருகைக்குப் பின்னர்தான் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் நமக்கு கிடைத்தன. அதற்காகவே களப்பிரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆறாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர்களின் ஆட்சியைப் பல்லவர்கள் ஒரு முடிவிற்கு கொண்டு வந்தனர். பல்லவர்கள் புத்தம் அல்லது சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். பல்லவர்களின் இரண்டாம் தலைமுறையில் வந்த முதலாம் கந்தவர்ம மன்னனின் மூன்றாம் மகன் தான் போதி தர்மர். சரி.

போதி தர்மரின் ஆரம்ப கால வரலாற்றை மூன்று சீன நூல்கள் பதிவு செய்து உள்ளன. முதலாவது ’புத்த மடப் பதிவுகள்’ எனும் ஒரு நூல். இது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதிய நூல்.

அடுத்தது ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் (Tanlin) என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்களும் நான்கு சட்டங்களும்’ (Two Entrances and Four Practices) எனும் நூல்.

(http://www.dharmadrum.org/userfiles/event/Bodhidharma's Two Entries and Four Practices.pdf)

மூன்றாவதாக வருவது ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோ சுவான் என்பவர் எழுதிய ‘பிரபல புத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூல். இவை தான் போதி தர்மரின் வரலாற்றைப் பதிவு செய்த மூன்று முக்கிய சீன நூல்கள் ஆகும். வேறு எதுவும் இல்லை.

போதி தர்மரின் வரலாற்றைப் பதிவு செய்த சீன, ஜப்பானிய வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளிலும் சில பல முரண்பாடுகள் காணப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக போதி தர்மர் தேநீர் அருந்தினார் என்கிற ஒரே ஒரு சாதாரண நிகழ்வைப் பதிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்படி பதிவு செய்து இருக்கிறார்கள்.

போதி தர்மர் தேநீர் அருந்துகிறார். அது இனிப்பானது. இல்லை கசப்பானது. அதன் நிறம் பச்சை. இல்லை அதன் நிறம் வெள்ளை. அதன் நிறம் கருப்பு. இல்லை அதன் நிறம் சிவப்பு.

அது எங்கள் வீட்டு தேநீர். நான் தான் அவருக்கு அன்பாக வழங்கினேன். போதி தர்மர் பருகும் தேநீர் தேவலோகத்தில் இருந்து வருகிறது. போதி தர்மர் போன பிறவியில் தேயிலை பயிர் செய்பவராக இருந்து இருக்கலாம். அதனால் தான் அவர் இந்தப் பிறவியில் அதிகமாகத் தேநீர் அருந்துகிறார்.

போதி தர்மர் கசப்பான தேநீரை அருந்துகிறார். அதன் பின்னணியில் ஒரு தத்துவம் இருக்கிறது. வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.


இப்படித்தான் போதி தர்மர் பற்றிய நிழ்வுகளைச் சீனர்கள் முரண்பாட்டு மூட்டைகளாகப் பதிந்து வைத்து உள்ளனர். இருந்தாலும் எழுதி வைத்து இருக்கிறார்களே. அதுவரை பாராட்டியாக வேண்டும். ஜப்பானியர்களைச் சொல்ல வேண்டாம். அதற்கும் மேலே ஒரு படி ஏறிப் போய் அழகு பார்க்கின்றனர்.

(Chang, Chung-Yuan (1967), "Ch'an Buddhism: Logical and Illogical", Philosophy East and West, Philosophy East and West, Vol. 17, No. 1/4, 17 (1/4): 37–49)

போதி தர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல ஆற்றலையும் பெறலாம். ஏன் என்றால் அவர் அதனை ஒன்பது ஆண்டுகள் தவமாய்த் தவம் இருந்து பெற்றார்.

அது ஒரு சாதாரண நிகழ்வு தான். ஆனாலும் அதை அப்படியே ஒரு புராணமாகவே பாடிக் காட்டுகிறார்கள். ஆக அவர்கள் பதிப்பு செய்ததில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் கண்டிப்பாக தலை கிறுகிறுத்துப் போகும்.

ஜான் மெக்ரீ (John McRae) என்பவர் கனடா நாட்டுக் கவிஞர். ஒரு மருத்துவரும்கூட. போதி தர்மரின் பதிவுகளைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப் பட்டவர். அதற்குத் தகுந்தபடி அந்த மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம்.

அதனால் போதி தர்மரின் வாழ்க்கையை மீட்டு எடுக்கும் முயற்சியில் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை. ரொம்பவுமே புலம்புகிறார் அந்த வரலாற்று ஆய்வாளர். அவரும் என்ன சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை.

ஜான் மெக்ரீயின் கருத்துப்படி பார்த்தால் போதி தர்மரின் வரலாற்றை எழுவது என்பது இன்றைய நேற்றைய ஆசிரியர்களின் வேதனைகள் அல்ல. பல நூற்றாண்டுக் காலமாகக் தொடர்ந்து வரும் சுனாமிச் சோதனைகள்.

ஆக இப்படி இருக்கையில் போதி தர்மர் இந்த இடத்தில்தான் பிறந்தார். இந்தக் குலத்தில்தான் பிறந்தார். இந்தத் தேதியில்தான் பிறந்தார் என்பதை எல்லாம் திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லவே முடியாது. சரி. இதை இதோடு நிறுத்திக் கொண்டு போதி தர்மரின் சீனப் பயணத்தைப் பார்ப்போம். ஒரு நிமிடம் பிளீஸ்...

இந்தத் தொடரை இரண்டு மூன்று பாகங்களில் முடித்து விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் போதி தர்மரைப் பற்றிய தகவல்கள் ஆங்கில நூல்களில் இருந்து சரம் சரமாய் வந்து கொட்டுகின்றன. அதனால் இந்தக் கட்டுரையும் நீண்டு போகலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.  மீண்டும் சந்திப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2021

சான்றுகள்:

1. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)

2. Zvelebil, Kamil V. (1987), "The Sound of the One Hand", Journal of the American Oriental Society, Journal of the American Oriental Society, Vol. 107

3. Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1

4. Shahar, Meir (2008), The Shaolin Monastery: history, religion, and the Chinese martial arts, University of Hawaii Press, ISBN 978-0-8248-3110-3.

5. Acharya, Raghu (2017), Shanon, Sidharth (ed.), Bodhidharma Retold - A Journey from Sailum to Shaolin, New Delhi: Motilal Banarsidass, ISBN 978-8120841529

6. Henning, Stanley (1994), "Ignorance, Legend and Taijiquan" (PDF), Journal of the Chenstyle Taijiquan Research Association of Hawaii, 2 (3): 1–7

7. Dumoulin, Heinrich (1993), "Early Chinese Zen Reexamined: A Supplement to Zen Buddhism: A History" (PDF), Japanese Journal of Religious Studies, 20 (1): 31–53


பேஸ்புக் பதிவுகள்


Sathya Raman: இந்த மிக நீண்ட பதிவை எத்தனை பேர் மெனக்கெட்டு படித்து இருப்பார்களோ தெரியவில்லை? போதி தர்மரை பற்றி நிறைய யூகங்களே கட்டுரையின் கடைசி வரை. அவர் தமிழர் என்பது அனுமானமாகவே தெரிகிறது.

இந்த மிக நீண்ட கட்டுரையை ஒரு தடவையே படித்து புத்தியில் ஏற்றிக் கொள்ள வாய்ப்பு இல்லை. நிறைய பெயர்கள், ஆண்டுகள் மனப்பதிவு ஆக காலம் பிடிக்கும் போல் இருக்கிறது. எத்தனைப் பேர் படிக்காமலே ’லைக்’ போட்டார்களோ?

எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் பொறுமையாக படிப்பதே என் பாலிஸி.

பள்ளியில் சலிப்பு தட்டிய சரித்தப் பாடம் தற்சமயம் தங்களின் பதிவில்தான் ஈர்ப்பு பெறுகிறது. காரணம் அவற்றில் தமிழர் வாழ்வு வற்றாத நதியாக நர்த்தனமாடுகிறது.

Muthukrishnan Ipoh >>> Sathya Raman:
போதிதர்மர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர் என்று ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பதிவுகளும் செய்து வருகிறார்கள். போதிதர்மர் அங்கே தற்காப்புக் கலை வகுப்புகள் நடத்திய பின்னர் தான் சீனாவுக்குப் போனதாகவும் சொல்கிறார்கள்.

ஆக இப்படியே விட்டுக் கொடுத்துக் கொண்டு போனால் நாளைய பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்று அடையாளம் இல்லாமல் போய்விடும். அதைக் கருத்தில் கொண்டுதான் அந்தக் கட்டுரையை எழுதினேன்.

நீண்ட கட்டுரை தான். கட்டுரையை முழுமையாகப் பதிவு செய்தால் தான் முழுமையான உண்மை தெரிய வரும். படிக்கிறார்களோ இல்லையோ படிக்க ஆர்வம் உள்ளவர்கள் படிக்கட்டும். உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளட்டும்.

ஒரு துளி சான்றும் இல்லாமல் கதை சொல்பவர்கள்... கதைகள் சொல்லிக் கொண்டு போகிறார்கள். அந்தக் கதையில் தமிழர்களின் வரலாறு அடிபட்டுப் போவதைப் பார்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?

உண்மை எது பொய் எது என்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டத்தில் பயணிக்கிறோம்.

நம்முடைய பதிவுகளில் அது தவறு இது தவறு என்று குறை காண்பவர்கள் குறை கண்டுபிடிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். தனிமனிதனாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறானே பாராட்ட வேண்டாம். குறை சொல்லாமல் இருப்போமே என்ற எண்ணம் கொஞ்சமாவது வேண்டாமா.

என்ன என்னவோ கதைகள் சொல்லி தமிழர்களின் வரலாற்றுத் தடங்களை அழித்துக் கொண்டு வருகிறார்களே அதை எதிர்த்துப் பேச முடியவில்லை. அங்கே இங்கே தேடிக் கண்டிபிடிப்பவன் மீதுதான் குறைகாணும் போக்கு. வேதனையாக உள்ளது சகோதரி.

தேவிசர சரவணக்குமார் >>> Muthukrishnan Ipoh: ஐயா... தங்கள் பணி அளப்பரியது... உண்மையை எடுத்துரைக்கும் பணியை இறைவன் தங்களுக்கு அருளி உள்ளார்... அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது... காரணம் இல்லாமல் இறைவன் தங்களுக்கு இப்பணியை கொடுத்திருக்க மாட்டார்... ஆகையால் வருத்தம் இன்றி பணியை தொடருங்கள் ஐயா... நாளைய இளையோர் உங்களை போற்றி வணங்குவார்கள் என்பது சத்தியம்.... இறைவன் உங்களுக்கு துணை புரிவார்..... நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh >>> தேவிசர சரவணக்குமார்: கருத்துகளுக்கு நன்றி மகளே. நேரப் பற்றாக்குறை. இருப்பினும் நம் மலாயா தமிழர்கள் வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுப்பதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை. காலத்தின் கட்டாயம் எனக்  கருதுவோம்.

இன்னொருவர் வருவார் என்று காத்து இருக்க முடியாது. காலம் ஓடிவிடும். அதற்குள் எவ்வளவு மீட்க முடியுமா அவ்வளவையும் மீட்டு எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அந்த இலக்கில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

Vani Yap: வணக்கம் ஐயா... காலை வேளையில் இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, மெய் சிலிர்க்கிறது... போதி தர்மர் பற்றிய தகவல் மிக அருமை... தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்... பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா...

Muthukrishnan Ipoh >>> Vani Yap:
கருத்துகள் தெரிவித்த முதல் அன்பர். மிக்க நன்றிங்க.

Murugan Pitchan: சிறப்பான பதிவு ஐய்யா. மிக்க நன்றி.

Muthukrishnan Ipoh >>> Murugan Pitchan: நன்றிங்க

Francis Arokiasamy: உலகம் முடியும் வரை வரலாறு தமிழர்களின் பெருமை பேசும்.

Muthukrishnan Ipoh >>> Francis Arokiasamy: நிலைக்கச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை

Vijay Pallava: Pallavas, Pahlavas, Parthavas, Parthians and Persians பஹ்லவி மொழி அராமைக்- மொழி கிளை மொழி இவர்கள் பல்லவர்

Karuna Karunagran: Sir appadhinah Rajah Rajah cholanagiyeh arun molzhi varman?

Muthukrishnan Ipoh >>> Karuna Karunagran: போதிதர்மர் 5-ஆம் 6-ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இராஜா ராஜா சோழன் 947 - 1014 ஆண்டுகளில் வாழ்ந்தவர். போதிதர்மருக்குப் பின்னர் 500 ஆண்டுகள்.

Maha Lingam: நன்றி ஐயா

Arojunan Veloo: சிந்தனையூட்டும் பதிவு! வாழ்த்துகள். ஐயா!

Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: மகிழ்ச்சி

Venogobaal Kuppusamy: மிக அருமை! நல்வாழ்த்துகள்

Muthukrishnan Ipoh >>> Venogobaal Kuppusamy: நன்றிங்க.

Vejayakumaran: ஓம் நமசிவாய

Vijay Pallava: ஈரான் நாட்டில் பஹ்லவி மொழி அராமைக்- மொழியின் கிளை மொழி இவர்கள் பல்லவர். அம்மா, ஈரான்.

Amma is a village in Gachi Rural District, Gachi District, Malekshahi County, Ilam Province, Iran.

Muthukrishnan Ipoh >>> Vijay Pallava: தகவலுக்கு நன்றிங்க

Arichanderan Manickavasakar

Mancula Manju

Poovamal Nantheni Devi

Sarkunavathi Panchanathan

Ganesan Nagappan

Kumar Siva

Sharma Muthusamy

Bobby Sinthuja:
தமிழர்கள் எவ்வளவு விடயங்களை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உங்களுடைய தேடல்கள் பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டும். உங்களுடைய தேடல்கள் தொடரட்டும்

Muthukrishnan Ipoh >>> Bobby Sinthuja: தங்களின் ஆதரவான சொற்களுக்கு நன்றிங்க

Nks Sateesh Lhexmi: Sir, their dynasty known as varman empires

Muthukrishnan Ipoh >>> Nks Sateesh Lhexmi: பல்லவர்களில் ஒரு பிரிவினர்தான் வர்மன் என்று தங்கள் பெயரில் இணைத்துக் கொண்டார்கள்.

Nks Sateesh Lhexmi >>> Muthukrishnan Ipoh: thank you sir

Kody Sivasubramaniam: ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம. ஒன்றை எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன் .. ஆரியர் என்பவர் யார்... பல்லவர்கள் மணிபல்லவ தீவிலிருந்து வந்து தமிழர்களாக வாழ்ந்தர்கள் என்று கூறினீர்கள் ... தமிழ்மொழியை கற்றுக் கொண்டு தமிழ் பேசினார்களா... தமிழ்மொழி பேசுகிறவர்கள் தமிழர்களா அல்லது ..... வேறு ஏதாவது உள்ளதா.... உதாரணம் பிராமணர்...

Muthukrishnan Ipoh >>> Kody Sivasubramaniam:
இந்தக் கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் கொடுத்து இருக்கிறேன். நன்றிங்க.

Banu Linda: சிறப்பு...

Vijikrish Krishnasamy: வணக்கம் ஐயா

Palaniappan Kuppusamy

Mathivanan Sellamuthu

Mohan Jegan

Shantakumar Dilip:
வணக்கம் ஐயா.

David Rajasthan

Jeyabalan Ramasamy:
அருமை ஐயா.. அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.. அதிகபடியான உழைப்பு சிரமத்திற்கிடையே நீங்கள் செய்யும் இந்த தமிழ் வரலாறுகளை மனக்கச் செய்யும் சேவையால் பெருமை கொள்கிறோம் ஐயா.. போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்தை தந்த உங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா..

Muthukrishnan Ipoh >>> Jeyabalan Ramasamy:
நிறைய படிக்க வேண்டும். நிறைய தேட வேண்டு. நிறைய நேரத்தையும் ஒதுக்க வேண்டும். தேடிப் பிடித்ததைத் தமிழில் எளிய முறையில் கொண்டு வர வேண்டும். இயன்ற வரையில் தேடிப் பிடிப்போம். மிக்க நன்றிங்க.

Sarkunavathi Panchanathan: Real hard work, paaraatukkal!

Muthukrishnan Ipoh >>> Sarkunavathi Panchanathan: அன்பான ஆதரவான சொற்கள். நன்றிங்க.

Raghavan Raman: வாழ்த்துகள்

Muthukrishnan Ipoh >>> Raghavan Raman: தங்களுக்கும் வாழ்த்துகள்

Raghawan Krishnan: Very Factual. Great.

Muthukrishnan Ipoh >>> Raghawan Krishnan: நன்றிங்க.

Vejayakumaran: ஓம் நமசிவாய

Muthukrishnan Ipoh >>> Vejayakumaran: வாழ்த்துகள்

Vincy Selvam: Very useful and deep research sir. Thank you

Muthukrishnan Ipoh >>> Vincy Selvam: மிக மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம் சகோதரரே.

Vimal Sandhanam: சிறப்பு ஐயா. உங்களின் உழைப்பு பாராட்டுக்குரியது ஐயா. வாழ்த்துகள் ஐயா.

Muthukrishnan Ipoh >>> Vimal Sandhanam: மிக்க மகிழ்ச்சி. தொடர்வோம்.

Samra Samg: அருமை ஐயா.. அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.. அதிகபடியான உழைப்பு சிரமத்திற்கு இடையே நீங்கள் செய்யும் இந்த தமிழ் வரலாறுகளை மணக்கச் செய்யும் சேவையால் பெருமை கொள்கிறோம் ஐயா.. போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்தை தந்த உங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா.. 🙏

Muthukrishnan Ipoh >>> Samra Samg: நன்றிங்க. இயன்ற வரையில் பத்திரப் படுத்த வேண்டும். நூலாகாக் கொண்டு வரும் போது நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய அன்பளிப்பாக விட்டுச் செல்வோம்.

Isham Balqis: Does anyone knows the true real story nowdays???

Muthukrishnan Ipoh >>> Isham Balqis: அரிது ஐயா.

Selvi Munisamy: போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா... 🙏

Muthukrishnan Ipoh >>> Selvi Munisamy: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க.

Poovamal Nantheni Devi: அருமையான பதிவு

Muthukrishnan Ipoh >>> Poovamal Nantheni Devi:
நன்றிங்க

Krishnavani Veni: Super sir 👍💪🙏

Muthukrishnan Ipoh >>> Krishnavani Veni:
நன்றிங்க

Kala Balasubramaniam:

Ganesan Nagappan:

Ravindran Suppiah: அன்பரே வணக்கம். தாங்கள் பதிவு செய்யும் செய்திகள் அனைத்தும் மிக மிக சிறப்பானவை. மற்றும் பாராட்டப்பட வேண்டியவை. அற்புதம். ஆனால் உங்களிடம் ஒரு குறை இருக்கிறது. ஏனென்றால் தாங்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் வந்தவர்கள் என பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள். அது தவறு. நீங்கள் தயவு செய்து, லிமோரியா கண்டம் மற்றும் குமரி கண்டம் இருந்த காலத்திற்குச் சென்றால் தமிழர்கள் வந்தவர்கள் அல்ல என்று புலப்படும்.

இதுதான் உண்மையும் கூட. மலாயா நம் தமிழர்களின் பூமி. அந்தச் சமயத்தில் ஒரு நிலப் பரப்பில் தான் விரிவு அடைந்திருந்தது. நம் பாரதம் ஆஸ்திரேலியா நியுஷிலாந்து வரை ஒரே நிலப்பரப்பு. அங்கேதான் சங்க நிதி, பதும நிதி, முத்தமிழ் சங்கம் எல்லாம் குடி கொண்டிருந்தது.

Muthukrishnan Ipoh >>> Ravindran Suppiah: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க ஐயா. தங்களின் ஆதங்கம் புரிகிறது. முதலில் ஒரு கருத்து. மலாயாவுக்கு வந்த தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வரவில்லை ஐயா. அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள்.

அப்படி இருக்கும் போது எப்படிங்க குமரிக் கண்டம்; லுமேரியா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்ல முடியும்.

தமிழர்களின் பூர்வீகம் குமரிக் கண்டம். உண்மை. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மலாயாவுக்கு வந்தவர்களை லுமேரியா கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்று எப்படிங்க சொல்வது.

Vejayakumaran: ஓம் நமசிவாய

Poovamal Nantheni Devi: அருமையான பதிவு

Krishnavani Veni: Super sir 👍💪🙏

Ganesan Nagappan:







 

23 மார்ச் 2021

மலாயா தமிழர்கள் வரலாற்றில் போதி தர்மர்

தமிழ் மலர் - 22.03.2021

ஆதித் தமிழன் கண்டுபிடித்த தமிழர்க் கலை. சீனப் பொதிகையில் சிருங்காரம் பாடிய சீனத்துக் கலை. வீரமந்திரம் பேசிய விசித்திரமான கலை. பாலைவன அரேபிய மண்ணுக்குள் படர்ந்த பவித்திரமான கலை. ஆயிரம் ஆயிரம் உறவுகளை அரவணைத்துப் போன ஆயக் கலை. அதுதான் போதி தர்மரின் புனிதக் கலை. புண்ணியம் பேசும் பொற்கலை. மலாயா தமிழர்களின் வரலாற்றில் மர்மம் பார்க்காத வர்மக் கலை.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மரா? இது சாத்தியமா? இது என்ன புதிய கதை என்று கேட்கலாம். போதி தர்மர் என்பவர் பாண்டியர்களுக்குப் பின்னர் வந்த பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர். போதி தர்மரைச் சிலர் களப்பிரர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வதும் உண்டு.

தமிழக வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டு கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்து இருக்கலாம். அதனால் அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.

போதி தர்மர் வாழ்ந்த காலம் கி.பி. 475 - கி.பி. 550. இந்தக் காலக் கட்டத்தில் மலாயா கடாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை. அதை மறந்துவிட வேண்டாம். போதி தர்மர் சீனாவுக்குப் போகும் போது கடார மண்ணில் கால் பதித்து விட்டுத் தான் போய் இருக்கிறார்.

கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் உறவாடிச் சென்று உள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கடாரத்தில் தங்கி இருக்கிறார். இதைப் பற்றி வரலாற்று ஆவணங்களில் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

உலகத்திலேயே மூத்த இனம் என்று ஓர் இனம் பெருமை பேசிக் கொண்டு இருக்கும் போது போதி தர்மர் தமிழர்கள் இனம் சார்ந்தவர் என்று சொல்வதில் என்னங்க தப்பு. இல்லாதவர்களே இருப்பதாக கற்பனை ஜோடனைகள் செய்யும் போதும் இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு.

ஒன்று மட்டும் சொல்வேன். போதிதர்மர் என்பவர் தமிழர் இனத்தைச் சார்ந்தவர் என்று நாம் இப்போதே இங்கே இந்தப் பக்கம் முன்னெடுப்பு செய்யவில்லை என்றால் போதிதர்மர் என்பவர் ’அவர்களின்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் காலத்தில் ’அவர்களே’ ஒரு கதையை உருவாக்கி போதிதர்மரை ஈர்த்துக் கொள்வார்கள்.

அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும். என் கருத்துகளில் உடன்பாடு என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை. இருகரம் கூப்புகிறேன்.

சித்தர்களில் மூத்தவர் அகத்தியர். வர்மக் கலையை உருவாக்கித் தந்தவர். அந்தக் கலை உருவான இடம் தமிழகத்தின் குற்றால மலை. அவருக்குப் பின்னர்தான் அந்தக் கலைக்கு மகத்துவம் ஏற்பட்டது. மகிமை கிடைத்து இந்த உலகமே திரும்பிப் பார்த்தது.

பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் தமிழகக் கோயில்களுக்குப் பற்பல திருப்பணிகளைச் செய்து இருக்கிறார்கள். அந்தப் பாண்டிய மன்னர்களில் ஒருவர் தான் ஜடாவர்ம பாண்டியன். இவர்தான் வர்மக் கலைக்கு வாயிதா வாங்காமல் வணங்காமுடியாக வாழ்ந்தவர். அந்தக் கலையை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தப் பெருமகனார். சிரம் தாழ்த்துகிறோம்.

ஜடாவர்ம பாண்டியன் 1251-ஆம் ஆண்டில் இருந்து 1270-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர். அழகர் கோயிலில் உள்ள சோமசந்த விமானத்திற்குத் தங்கத் தகடுகளைப் பதித்தவர்.

ஜடாவர்ம பாண்டியன் தன்னுடைய ஆட்சியின் போது பல நூறு வர்மக் கலைத் தர்பார்களை உருவாக்கினார். வர்மக் கலை ஆசான்களுக்கு நிலபுலன்களை வழங்கி ஆதரவு வழங்கினார். அந்த வகையில் அந்தக் காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கும் வர்மக் கலை சொல்லித் தரப்பட்டது.

பெண் பிள்ளைகளையும் வர்மக்கலை விட்டு வைக்கவில்லை. அவர்களையும் ஈர்த்துக் கொண்டது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் ஜடாவர்ம பாண்டியனின் காலச் சுவடுகள் பெருமைக்குரிய அத்தியாயங்களாகும்.

ரஜினிகாந்த நடித்த கோச்சடையான் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். நல்ல ஒரு திரைப் புதினம். அதில் கதாநாயகனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் கோச்சடையான். அந்தக் கோச்சடையான் தான் சாட்சாத் இந்த ஜடாவர்ம பாண்டியன். வர்மக் கலைக்கு ஆலாபனை செய்து அழகு பார்த்தவர். தெரிந்து கொள்ளுங்கள்.

வர்மக் கலையில் மட்டும் அல்ல. போர்த் திறமையிலும் ஜடாவர்ம பாண்டிய ஒரு வித்தகர். அண்டை நாட்டுச் சோழர்கள், சேரர்கள், கொங்கர்கள், கர்நாடர்கள் பலரைப் போரில் தோற்கடித்த தமிழர்.

ஆக பாண்டிய நாட்டை விரிவாக்கிய தலையாயப் பங்கு இந்தக் கோச்சடையான் மாவீரருக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இந்தக் கோச்சடையானும் ஒருவராகும்.  

ஏன் இவரைப் பற்றி அதிகமாகச் சொல்கிறேன் என்றால் இவர்தான் வர்மக் கலையையும்; அந்தக்கலை சார்ந்த தற்காப்பு முறைகளையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்தவர். இவருக்கு முன்னரே போதி தர்மர் சீனாவிற்குப் போனவர். வர்மக் கலையை அங்கே அறிமுகம் செய்தவர். சரி.

அந்தக் கலையைத் தன்னுடைய போர் வீரர்களுக்கும் கோச்சடையான் சொல்லித் தந்தார். ஆக இந்தத் தற்காப்புக் கலையின் மூலமாகத்தான் தமிழகத்தின் வீர தீர மன்னர்கள் பலரும் கோச்சடையானின் ஆளுமையின் கீழ் வந்தனர். அது வரலாறு.

இருப்பினும் இந்தக் கோச்சடையானுக்கு முன்னரே வர்மக்கலை சீனாவில் தடம் பதித்து விட்டது. அதை மறந்துவிட வேண்டாம்.

வர்மக்கலையில் நான்கு வர்மங்கள் உள்ளன. 1. தொடு வர்மம். 2. தட்டு வர்மம். 3. நோக்கு வர்மம். 4. படு வர்மம். இந்த நான்கு வர்மங்களையும் பிழியப் பிழியக் கற்றுத் தேர்ந்தவர் கோச்சடையான்.

அவருடைய திறமையைக் கண்டு எதிரிகள் அசந்து போனது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அவரின் திறமைகளைத் தளையத் தளைய ஆராதனை செய்து இருக்கிறார்களே.

அதுவே அந்தக் கோச்சடையானுக்கு கிடைத்த முதல் மரியாதை. கோச்சடையானைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. ஒரே ஒரு சின்னத் தகவலை மட்டும் சொல்லி விடுகிறேன். சோழ மன்னர்கள் சேர பாண்டிய அரசர்கள் பலரைப் பற்பல போர்களில் வென்றார்கள். விலை மதிப்பில்லா செல்வங்கள் கிடைத்தன.

ஆனால் அவற்றை அவர்களின் சொந்த நலன்களுக்காக எடுத்துக் கொள்ளவில்லை. அனைத்தையும் தென்னகத்தில் இருந்த கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டார்கள்.

அதிகம் பயன்பெற்றக் கோவில்கள் என்று பார்த்தால் முதலாவது சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசப் பெருமான் கோயில். வேள்விக்குடிச் செப்பேடுகள் சான்றுகள் சொல்கின்றன. அடுத்து திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதர் கோயில். கோடிக் கோடியாக அள்ளிக் கொடுக்கப் பட்டதாகக் கேந்தூர்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. சரி.

காலப் போக்கில் பாண்டிய இனம் சிதையத் தொடங்கியது. இந்த வர்மக் கலையும் சன்னம் சன்னமாய் மறையத் தொடங்கியது. இருந்தாலும் பாண்டியர்களுக்குப் பின்னர் வந்த பல்லவர்கள் இந்தக் கலையின் மகிமையைக் காலம் தாழ்ந்து அறிந்து கொண்டனர்.

அவர்களும் அந்தக் கலையைக் கைவிடவில்லை. ஆதரித்தனர். பின்னர் காலங்களில் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டது.

பாண்டியர்களுக்குப் பிறகு பல்லவர்கள் வந்தார்கள். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் ஆழமாக வேரூன்றியது. இவர்களுடைய காலத்தில் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் சீன யாத்ரீகர்கள் தென்னகத்திற்குப் புனிதப் பயணங்களை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் யுவாங் சுவான் (Yuan Chwang).  

அந்தச் சமயத்தில் பல்லவர்களின் தலைநகரமாக காஞ்சிபுரம் இருந்தது. முதலாம் கந்தவர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் நந்திவர்மன். இரண்டாவது மகன் குமாரவிஷ்ணு. மூன்றாவது மகன் புத்தவர்மப் பல்லவன்.

இவர்களில் மூன்றாவதாகப் பிறந்த மகன்தான் புத்தவர்மப் பல்லவன் என்கிற போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன். ஜடாவர்ம பாண்டியன் கோச்சடையான் பிறப்பதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி. அதை மறந்துவிட வேண்டாம்.

அந்தக் காலத்துப் பல்லவ வம்சத்தின் கடைசிக் குழந்தையைப் புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது வழக்கம். எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தன்னுடைய கடைசி மகன் போதிதர்மனைக் குருகுல வாழ்க்கையில் சேர்த்தார்.

அப்போது காஞ்சிபுரத்தில் பிரஜ்ன தாரா (Prajnatara) என்கிற ஒரு சமய குரு இருந்தார். அவர் புத்தச் சிந்தனைகளைப் பரப்பி வந்தார். கந்தவர்ம அரசன் அவரிடம் தன் மகன் போதி தர்மரை அனுப்பி வைத்தார்.

காலப் போக்கில் போதி தர்மரும் பல கலைகளில் கற்றுத் தேர்ந்தார். களறி, வர்மம், சிலம்பம் போன்ற பல்வேறு அதிரடிக் கலைகளையும் அசத்தலாகக் கற்றுக் கொண்டார்.

போதி தர்மரின் அபாரமான திறமைகளைப் பார்த்துப் பிரமித்துப் போனார் பிரஜ்ன தாரா. ஆக சின்ன வயதிலேயே போதி தர்மர் வர்மக் கலையில் அதிக ஈடுபாடு காட்டி இருக்கிறார் என்பது அதில் இருந்து தெரிய வருகிறது.

போதி தர்மரின் அறிவுக் கூர்மை. அவரின் அபாரமான தனித் திறமை. அவற்றினால் பிரஜ்ன தாரா கவரப் பட்டார். அந்த வகையில் போதி தர்மர் தான் தன்னுடைய அடுத்த வாரிசு என்றும் முடிவு செய்தார். கொஞ்ச நாட்களில் குருகுலத்தின் 28-ஆவது குருவாகவும் போதி தர்மர் நியமனம் செய்யப் பட்டார்.

காலம் கரைந்தது. போதி தர்மர் ஒரு புத்த மதக் குருவாக மாறினார். புத்த சிந்தனைகளை நன்கு தெரிந்து கொண்டார். காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். நாலந்தா பல்கலைக்கழகம் (Nalanda University) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ளது. உலகப் புகழ்பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப் பட்டது.

உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். புத்த மதக் கருத்துக்களைப் போதிக்கும் இடமாகவும் விளங்கியது. எத்தனையோ பேரரசுகள் இந்தியாவிடம் நீயா நானா வசனங்கள் பேசி இந்திய மண்ணில் அழிப்புகள் செய்து உள்ளன. ஆனால் நாலந்தா பல்கல்கலைக்கழகத்தில் மட்டும் அவர்களின் வசனங்கள் செல்லுபடி ஆகவில்லை. ஒன்றுமே செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

இந்தப் பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கிய காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிஞர்களும் அங்கு வந்து கல்வி கற்றனர். புத்தர் மகான் இந்த இடத்திற்கு வந்து சென்றதாகவும் சொல்லப் படுகிறது.  மிக அண்மையில் அந்தப் பல்கலைக்கழகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

நாலந்தா பல்கலைக்கழகத்தில் கொஞ்ச காலம் தங்கிய போதி தர்மர், புத்த சமயத்தின் ஆழ்க் கூற்றுகளை அதிகமாகத் தெரிந்து கொண்டார். பின்னர் அவருடைய பார்வை சீனாவின் பக்கம் திரும்பியது. புத்தச் சிந்தனைகளைச் சீனாவிற்குக் கொண்டு செல்ல ஆசைப் பட்டார். அவர் ஏன் சீனாவுக்குப் போக விரும்பினார் என்பது தான் தெரியவில்லை.

இருந்தாலும் சீன யாத்ரீகர்கள் தென்னகத்திற்கு அடிக்கடி வந்து போன தாக்கமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எந்த ஆண்டில் போதி தர்மர் சீனாவிற்குச் சென்றார் எனும் துல்லிதமான விவரங்கள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இரண்டு கருத்துகள் சொல்லப் படுகின்றன.

லியூ சோங் வம்சத்தினரின் (Liu Song Dynasty) ஆட்சிக் காலத்தில் போதி தர்மர் சீனாவிற்குப் போய் இருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த லியூ சோங் வம்சாவளியினர் சீனாவை கி.பி. 420 லிருந்து 479 வரை ஆட்சி செய்தனர்.

அடுத்து லியாங் வம்சத்தினரின் (Liang Dynasty) ஆட்சிக் காலத்தில் போய் இருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. இந்த லியாங் வம்சாவளியினர் கி.பி. 502 லிருந்து 557 வரை சீனாவை ஆட்சி செய்தனர்.

இதில் இந்த இரண்டாவது கருத்தைத் தான் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது லியாங் வம்சாவளியினர் காலத்தில் தான் போதி தர்மர் சீனாவிற்குப் போய் இருக்கலாம் எனும் கருத்து.  

அடுத்து போதி தர்மரின் சமகாலத்தவர்கள். அதாவது அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்கள். இரண்டு கூற்றுக்களை விட்டுச் சென்று உள்ளனர். ஒரு கூற்று யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதியது. இவர் கி.பி. 547 ஆம் ஆண்டில் மகாயான புத்தப் படைப்புகளைச் சீனமொழிக்கு மொழி பெயர்த்தவர். இதை யாங் சுவான்சீயின் குறிப்பு என்றும் சொல்வார்கள். அந்தக் குறிப்பு, சீனாவின் லுவோயாங் (Luoyang) கிராமப் பகுதியின் புத்த மடாலயங்களில் இருந்து கிடைத்த குறிப்பாகும். (Yang Xuanzhi's The Record of the Buddhist Monasteries of Luoyang 547 AD)

போதி தர்மர் சீனாவுக்குச் சென்ற போது மலாயா கடாரத்தில் கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார். அந்தக் கட்டத்தில் அதாவது கி.பி. 500-ஆம் ஆண்டுகளில் கடாரம் பூஜாங் சமவெளியில் தமிழர்கள் வணிகம் செய்து வந்து உள்ளனர். ஓராங் அஸ்லி மக்களுடன் ஒன்றரக் கலந்து தமிழர் சார்ந்த பண்பாடுகளைப் பரவல் செய்து உள்ளனர்.

ஓராங் அஸ்லி மக்கள் வெற்றிலை போடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்து போனதாகும். கடாரத்திற்குச் சென்ற போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களிடம் வர்மக்கலையைச் சொல்லித் தந்து உள்ளார். கடாரத்து மண்ணில் வர்மக்கலை நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.

1025-ஆம் ஆண்டு கடாரத்தைக் கடைசியாக ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் வர்மக்கலையை ஆதரித்து குருகுலங்களை உருவாக்கி உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் வர்மக்கலை மிகவும் பரவலாகி இந்தோனேசியா வரை படர்ந்து உள்ளது. சுமத்திரா ஆச்சே பகுதியில் வர்மக்கலை பள்ளிக்கூடமே இருந்து உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.03.2021

சான்றுகள்:

1. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press,

2. Taylor, Nora A. (2000), Studies on Southeast Asia (Studies on Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor), 29, Southeast Asia Program Publications)

3. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: Indian Historical Research Institute

4. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)

5. Taishō Shinshū Daizōkyō, Vol. 85, No. 2837 Archived 2008-06-05 at the Wayback Machine, p. 1285b 17(05)
 

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Francis Arokiasamy: அக்காலத்தில் கி.பி. 500-ஆம் ஆண்டில் கடாரத்தில் வாழ்ந்த தமிழர்கள் எங்கு சென்றார்கள். என்ன ஆனார்கள். அவர்கள் சந்ததி அழிந்ததா? எப்படி? கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா. உங்களது தொடர் தமிழர் வரலாற்றை புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது

Muthukrishnan Ipoh >>> Francis Arokiasamy: வந்தவரகள் வணிகர்கள். திரும்பிப் போனவர்கள் பலர். இங்கேயே தங்கியவர்கள் சிலர். உள்ளூர் மக்களுடன் ஒன்றாய்க் கலந்தவர்கள் சிலர்.

இனக் கலப்பு ஏற்பட்டு தமிழர்கள் கட்டமைப்பு மறைந்து போய் இருக்கலாம். நிறைய பின்விளைவுகள் உள்ளன.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இன்றைய உள்ளூர் மக்கள் பலரின் இரத்தத்தில் கலப்பு இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இது போல மனிதப் புலம் பெயர்வுகளில் எல்லா இடங்களிலும் நடந்து உள்ளது. கடாரப் படையெடுப்பில் கரைந்து போய் இருக்கலாம்.

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: மனித மரப்பணுக்களில் (Homo Sapiens DNA RNA) 97 விழுக்காடு ஒரே சாயல் கொண்ட அணுக்கள் தான். ஒரே வடிவங்கள் தான். ஏறக்குறைய 3 விழுக்காடுதான் மாற்றம் அடைந்து கறுப்புத் தோல் வெள்ளைத் தோல் என்று திரிபுநிலை அடைந்து உள்ளன. அந்த மூன்று விழுக்காட்டுக்குள் தான்... மதவாதம் இனவாதம் எல்லாம் வந்து சேர்கின்றன.

உலக இனங்களில் தமிழர் இனம் மூத்த இனங்களில் ஒன்றாகும். கற்பனை அல்ல. உண்மை. இதை ஆரியர்கள் மறைத்து ஆரியத்தை முன்னிலைப் படுத்த பல்வேறு வரலாற்றுச் சிதைவுகளை மெற்கொண்டு உள்ளனர். அந்தச் சிதைவுகளினால் தான் தமிழர் இனம் பாதிப்பு அடைந்து உள்ளது. அந்தப் பாதிப்புகளில் இருந்து வெளிவரும் போதுதான் தமிழரின் உண்மையான தொனமை அவர்களுக்கே தெரியவரும். கருத்துகளுக்கு நன்றிங்க.

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: அக்கா, முன்னோர்கள் சதிநாச வலையில் சிக்கி மூச்சடைத்துப் போனார்கள். அன்றைய வாழ்க்கை நிலையில் கற்றுத் தெளிந்த மக்கள் இருந்தாலும் மக்களை ஒன்றாய் சேர்த்திட தடைகள் பல இருந்தன. இன்று நமக்கிருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து இருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையிலும் எதையும் கண்டு கொள்ளமல் "மர" மண்டைகளாய் சிலதுகள் சுற்றிக் கொண்டு இருக்கிறதே.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உங்களின் கூற்று உண்மை என்றால் இந்த உலக தமிழர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளும் நம் முன்னோர்களின் மரபணு உயிரணுக்களாக ஓடிக் கொண்டிக்கும் வாய்ப்பு இருக்குமே?

அதனால்தான் நாமும் இளகிய மனதோடு எல்லாவற்றையும் தாரை வார்த்து ஏமாந்து நிற்கிறோமோ? என்னமோ? இன்னும் எத்தனை,எத்தனை மோ, மோ, மோ வோ?????? 🤔🤦

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உங்கள் வரலாற்று பதிப்போடு அவ்வப்போது அறிவியலிலும் தெளிவு பெறுகிறோம். அன்று ஆரியர்களின் ஊடுருவலை அறிவுபூர்வமாக எதிர்க் கொள்ள எம் முன்னோர்களுக்கு திறன் இல்லாமல் போனதே அதை என்னவென்பது சார்?

Vani Yap:
தமிழர்களின் தடங்களை தெரிந்து கொள்ள தங்களின் பதிவுகள் மிக சிறப்புங்க ஐயா... நன்றி

Sathya Raman >>> பெ.சா. சூரிய மூர்த்தி: அத சொல்லுங்க. எல்லா உரிமைகளும் நம்மை விட்டு விடுதலை வாங்கி கொண்டிருக்கிற போதும் எவ்வித உறுத்தலும், உணர்வும் இன்றி உலா வரும் உதவாக் கரைகளாகவே இன்றும் இயலாமைகளின் மொத்த உருவமாய் நாம்.

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: நாம் அல்ல அக்கா. சிலர்.

Sathya Raman >>> பெ.சா. சூரிய மூர்த்தி: அந்தச் சிலரைக் கூட சிறைப் படுத்த நம்மால் முடியவில்லையே. அதுவே ஒருவித உறுத்தல் தானே சூர்யா?

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: அவர்கள் எல்லாம் பிறந்தோம் தின்றோம் சாவோம் என்று இருப்பவர்கள். நவீன அடிமைத் தனத்தில் இன்பம் கண்டு மொழி பற்றும் இல்லாமல் இனப் பற்றும் இல்லாமல் தங்களுக்கானதை மட்டுமே தேடிக் கொள்பவர்கள்.

Kala Balasubramaniam: Super sir

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam:
நன்றிங்க

Velan Mahadevan: Bodhitharmaudin aaga maarividumo 🤔

Muthukrishnan Ipoh >>> Velan Mahadevan: நிச்சயமாக விட மாட்டோம்.

Velan Mahadevan:
Yes Namathu kadamai sar 👍

Sundaram Natarajan: Arumai Anna. Thanks For Sharing

Maha Lingam: நன்றி வாழ்த்துகள்

மோஹன் Mohan: அருமை ஐயா

Malini Rangasamy: சூப்பர்

பெ.சா. சூரிய மூர்த்தி:
சொல்வார்கள் ஐயா. அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்து வளர்ந்த இரத்த அணுக்களின் பிறப்புகள்.

Vijaya Sri: நற்தகவல் ... நன்றி ஐயா

Darshini Priya: Super

Rama Bathma:

Palaniappan Kuppusamy:


Shanmugasundaram D: போதி தருமர் பற்றி இரண்டு புத்தகங்கள் படித்துள்ளேன். இரண்டிலும் காஞ்சியை ஆண்ட சிற்றரசரின் மகன் என்றும் வாரிசு உரிமை போட்டியில் இளையவரான போதி தருமரை மன்னராக நியமிக்க அவர் தந்தை விரும்பிய போது அதை மன்னரின் முத்த மகன் ஏற்காததால் போதி தருமர் விட்டுக் கொடுத்து புத்தமத துறவியாகி தலைமையின் கட்டளை ஏற்று சீனாவிற்கு சென்றார் என்று உள்ளது. இருப்பினும் நீங்கள் கூறுவது புது தகவல். ஆதலால் தகுந்த ஆதாரங்கள் திரட்ட வேண்டி இருக்கும் இல்லையேல் மக்கள் நம்ப மாட்டார்கள்

Muthukrishnan Ipoh >>> Shanmugasundaram D: வணக்கம் சகோதரரே. நீங்கள் படித்த நூல்களில் வேறு மாதிரியாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தான் நான் எழுதி இருக்கிறேன். நம்மிடம் சான்றுகள் உள்ளன. இல்லாமல் எழுத முடியாதுங்க. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Muthukrishnan Ipoh: போதி த்ர்மரின் புத்திசாலித்தனம்; அறிவுக்கூர்மை அவரின் அண்ணன்மார்களுக்கு பொறாமை ஏற்படுத்தி இருக்கலாம். உண்மை. அதை செவிலியர்கள் மூலமாக போதிதர்மர் அறிந்து கொண்டதும் உண்மை. விட்டுக் கொடுத்துச் சென்றதாகத் தாங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் அவர் புத்த மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு விட்டதால் அரச பதவியை அவர் நிராகரித்து இருக்கலாம் அல்லவா. அத்துடன் மூதத அண்ணன்கள் இருக்கும் போது ஆக இளையவரான தம்பிக்கு அரசர் பதவியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்குமா என்பதும் ஒரு கேள்விக் குறியே.

MP Tarah: நானும் போதி தர்மர் கட்டுரையை படித்தேன் நிறைய தெரிந்து கொண்டேன் ஆச்சரியமாகவும் இருக்கிறது

Muthukrishnan Ipoh >>> MP Tarah: நன்றிங்க ... 🌺

Sathya Raman: வணக்கம் சார். சமீபத்தில் தான் போதி தர்மர் பற்றி முக நூலில் வேறொரு பதிவை படித்திருந்ததேன். போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சூர்யா நடித்த "ஏழாம் அறிவு" திரைப் படத்திற்கு பிறகே நன்கு அறியப் பட்டதாக தெரிகிறது. போதி தர்மரை பற்றி நம் நினைவுக்கு வருவது இந்தியா, சீனா என்ற இரு நாடுகள் மட்டுமே.

ஆனால் உங்களுடைய இந்தப் பதிவில் அவர் கடாரம் வரை கால் பதித்து உள்ளார் என்பது புதிய தகவலாக இருக்கிறதே? கூடவே அவர் தமிழர் என்பதும் பிரமிப்பாக இருக்கிறது.

ஒரு தமிழரின் மரபணுவில் ஊறிய வர்ம கலையின் மறு வடிவமே குங்பூ, காராத்தே, தெக்குவண்டோ என்பதாக எடுத்து கொள்ளலாமோ? உலகம் தோன்றிய போது ஒரு இனம் முதன்மையாக தோன்றி அந்த அற்புதங்களை ஆவணப் படுத்தாமல் அறியாமையால் எல்லாவற்றையும் தொலைத்து, துவசம் பண்ணிய பின் காலங் கடந்து நமது அருமைகளில் ஆவல் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

உலகக் கண்டு பிடிப்புகளில் எல்லாம் நம்மவர்கள் உருவாய் இருந்திருக்கிறார்கள் ஆனால் எதிர்கால சந்ததினரின் உயர்வுக்கு, வாழ்வுக்கு அவற்றை எல்லாம் முன்னெடுப்புகளுக்கான முயற்சியைத் தான் எவரும் செய்யவில்லை. எதையும் ஆதாரமாக்கவில்லை.

அவசரத்தில் அள்ளி தெளித்த கோலங்கலாய் அன்றைய நம் முன்னோர்களின் உழைப்பு இன்று நமக்கு எந்த வகையிலும் உதவாமல் போய் விட்டதே?

இன்று தீ பந்தம் ஏந்தி கஷ்டபட்டு தேன் எடுக்காமலே "எல்லாமே எங்களுடையது " என்று முழங்கும் முயற்சியற்ற முட்டாள்களுக்கு நம் நிலையை நிறுத்தி, இப்படிபட்ட பதிவுகள் மூலமே பறைசாற்ற வேண்டிருக்கிறது.

புத்தரைப் போல், போதி தர்மரையும் புறக்கணித்த பெருமை இந்தியாவையே சாரும். இனப்பற்று மொழிபற்று தேசபற்று இல்லாத இந்தியாவில் வெறும் ஜாதி பற்றை வைத்துக் கொண்டு இந்த ஜென்மம் அழியும் வரை வாய்ச் சவடால் பேசும் வரை நம் வரலாறுகளும், சரித்திரங்களும் சாகவரம் பெறப் போவதில்லை என்பதே சத்தியமான உண்மை என்பேன்.

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: ஆங்கிலத்தில் ஒரு பதிவு உள்ளது. அதை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.

According to Southeast Asian folklore, Bodhidharma travelled from Jambudvipa by sea to Palembang, Indonesia. Passing through Sumatra, Java, Bali, and Malaysia, he eventually entered China through Nanyue. In his travels through the region, Bodhidharma is said to have transmitted his knowledge of the Mahayana doctrine and the martial arts. Malay legend holds that he introduced forms to silat.

தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளின்படி, போதி தர்மர் ஜம்புதிவிபாவில் இருந்து கடல் வழியாக இந்தோனேசியாவின் பலேம்பாங் வரை பயணம் செய்தார். சுமத்திரா, ஜாவா, பாலி மற்றும் மலேசியா வழியாகச் சென்று, இறுதியில் நான்யூ (சீனாவில் உள்ள மலைப்பகுதி) வழியாக சீனாவுக்குள் நுழைந்தார்.

இப்பகுதி வழியாக அவர் மேற்கொண்ட பயணங்களில், போதிதர்மா மகாயான கோட்பாடு மற்றும் தற்காப்புக் கலைகள் குறித்து தன் அறிவைப் பரப்பியதாகக் கூறப் படுகிறது. அவர் சீலாட் தற்காப்புக் கலையை அறிமுகப் படுத்தியதாக மலாய் புராணக் கதைகளும் கூறுகின்றன.

ஜம்புதிவிபா (Jambudvipa) என்பது இந்தியர்களின் புராணக் காப்பியங்களில் சொல்லப்படும் புராண உலகம். அந்தப் புராண உலகத்தில் இருந்து போதி தர்மர் வந்து இருக்கலாம் என்று தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப் படுகின்றன.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மலாய் மக்களின் சீலாட் தற்காப்புக் கலையைப் போதி தர்மர் அறிமுகப் படுத்தியதாக 2006-ஆம் ஆண்டில் சீலாட் துவா - வாழ்க்கையின் மலாய் நடனம் (Silat Tua - The Malay Dance of Life) எனும் சொல்லில் எழுதப்பட்டு உள்ளது. ஜைனல் ஆபிடின் ஷேக் அவாப் மற்றும் நைகல் சுட்டன் (Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton) ஆகிய இருவர் எழுதிய நூல்.

கடாரத்திற்கு வடக்கே தாய்லாந்து நாட்டுப் பகுதியில் அமைந்து இருந்த பட்டாணி எனும் இடத்தில் போதி தர்மர் சீலாட் கலையைச் சொல்லிக் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கலை நீண்ட காலமாக பினாங்கில் இரகசியமாக இருந்ததாகவும் பின்னர் சுமத்திராவிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது அந்தக் காலத்தில் (கி.பி. 500) கடாரத்தில் வாழ்ந்த மக்களிடம் போதி தர்மர் வர்மக் கலையைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம் அல்லவா? தவிர போதி தர்மர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்.

பல்லவர்கள் தமிழ்நாட்டை 550 ஆண்டுகளாக ஆட்சி செய்து உள்ளார்கள். மாமல்லபுரம் கற்கோயில்களைக் கட்டியவர்கள். பல்லவர்கள் தமிழர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது என்னுடைய முன்னெடுப்பு.

போதிதர்மர் வட மலாயாவில் சீலாட் கலையைப் பரப்பியதால் அவர் அந்தக் கலையின் தந்தை என்றும் அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

Silat Tua - The Malay Dance of Life is a 120 page book published by Living Tradition Sdn Bhd in 2007 in English. Written by Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton, Silat Tua expounds on the philosophies, maxims and techniques of this ancient northern silat style.

Originally from Patani, Silat Tua has spread silently throughout the peninsula, especially in Pulau Pinang where guru Zainal, the author, now resides. Information kept secret for many years including practical meditation methods, animal and elemental (Fire, Air, Water, Earth) style silat and more are described in detail for the first time ever in this book.

நூலின் பெயர்: Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1

சான்று: https://en.wikipedia.org/wiki/Bodhidharma...

இதைப் பற்றி போதிதர்மர் கட்டுரையின் 4-ஆம் கட்டுரையில் (26.03.2021) விளக்கமாக எழுதுகிறேன். அருமையான கருத்துகளைப் பதிவு செய்து உள்ளீர்கள். கருத்துகளுக்கு நன்றிங்க சகோதரி.

Aathi Pogan >>> Sathya Raman: முன்பு எல்லாத்துக்கும் ஆவணங்கள் இருந்தது தொடர் படையெடுப்பு, இன அழிப்பு, ஆக்ரமிப்பு, ஆங்கிலேய ஆட்சியின் திருட்டு என்று பல வழிகளில் பல ஆவண ரகசியங்கள் அழிந்து விட்டன. எல்லாமும் தமிழர்கள் DNA மரபணுவில் மறைந்து உள்ளன அதை யாரும் வெளி கொண்டுவர முயற்சிப்பது இல்லை.

Sathya Raman >>> Aathi Pogan:
ஆனால் எவ்வித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமலே அடுத்தவர் உழைப்பை, கண்டுபிடிப்பை ஒரு கூட்டம் மட்டும் எல்லாம் "எங்களுடையது " என்று எப்படி கூப்பாடு போட முடியும்?

நீங்கள் முன் வைத்த காரணங்களால் எல்லாம் அழிந்தது என்றால் இவர்கள் மட்டும் எந்த தைரியத்தில் எல்லாவற்றையும் உரிமை கோரி கொண்டாடுகிறார்கள்? அப்படி என்றால் அவர்களுக்கு எவ்வித ஆதாரப் பூர்வமான ஆவணங்கள் தேவை இல்லையோ? இஷ்டத்துக்கு, இட்டுக்கட்டி அடுத்தவர் உழைப்பை திருட முடியுமோ?

Aathi Pogan >>> Sathya Raman: திருட்டு என்பதும் ஆளுமையை பொருத்தது. ஆளுமை அற்ற, சொந்த நாடு அல்லாத நாதி அற்ற மக்கள் என்ன செய்வது. வேடிக்கைதான் பார்க்க முடியும்.😢

Aananthi Pooja: மிக அருமை .

Muthukrishnan Ipoh >>> Aananthi Pooja:
நன்றிங்க ...

Anika Morthi: Very good morning ayya entha patiuve enaku irutha Santhagam tinthu nandree Valga valarga ugal sevai Nandree ayya

Muthukrishnan Ipoh >>> Anika Morthi:
வாழ்த்துகள். கருத்துகளுக்கு மிக்க நன்றி.

மோஹன் Mohan:

Muthukrishnan Ipoh >>> மோஹன் Mohan:
மிக்க நன்றி.

Sarkunavathi Panchanathan:

Manimala Tamil

Ganesan Nagappan

Parimala Muniyandy

Kala Balasubramaniam

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam:
மிக்க நன்றி.

Kumar Siva

Sharma Muthusamy

Vejayakumaran: 💯

Alex Mark II


Krisnakumar Narayanasamy: Iya naan ungal nesan.taangal elutiya padivangalai semittum vaittullen.taangal kuuruvatum unmai.boti tarmarai velicchattirku kondu varuvom

Muthukrishnan Ipoh >>> Krisnakumar Narayanasamy:
நன்றிங்க. போதிதர்மர் பல்லவ இனத்தைச் சார்ந்தவர். பல்லவர்கள் தமிழர்களே என்று வரலாற்று ஆசிரியர்களில் ஒரு சாரார் உறுதியாக உள்ளார்கள்.

Nagarajah Nagarajah:

Sara Subramaniam: இல்லாதவர்களே இருப்பதாகக் கற்பனை ஜோடனைகள் செய்யும் போதும் இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு. 😄😄😄👌👌👌

Muthukrishnan Ipoh >>> Sara Subramaniam: உண்மைதானுங்க...😀 ஒன்னுமே இல்லாமல் என்ன என்னவோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் துணிந்து இறங்குவோம்ல... 😀

Srimurugan Munusamy

Sureshdamotaran Suresh

Sureshdamotaran Suresh

Nagarajah Nagarajah: Aiya super tagaval taarunggal Naamum. Varalaattrai puratti poduvom Namakku pinne varubavar Nammmai nesippargal

Muthukrishnan Ipoh >>> Nagarajah Nagarajah: தங்களின் ஆர்வம் மலைக்கச் செய்கிறது

Kavitha Vitha

Ganes Gani

Murugaiah Muthusamy

Mathivanan Sellamuthu

Palaniappan Kuppusamy

Raman Roman


Banu Linda: ஆவண திருடர்களை கட்டுப்படுத்த உலக அளவில் ஏதும் பொது இயக்கம் உள்ளதா ஐயா...

Muthukrishnan Ipoh >>> Banu Linda:
இருக்கிறது. ஆனால் சுடுகிறவர்கள் சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்னும் செய்ய முடியாது.😀

Sathya Raman: திருடர்களே உலகமாய் இருந்தால் யாரிடம் நாம் போய் முறையிட முடியும் ஐ,நா சபையிலா? அல்லது உலக மகா திருடனிடமா? யாருன்னு பானுவுக்கு இந்நேரம் புரிந்திருக்குமே. சமத்து.

Rammesh Muniandy: இடைக் காலத்தில் நான் போதி தர்மர் மலாய் இனத்தைச் சார்ந்தவர் என்பதைக் கேள்விப் பட்டது உண்டு. நாளை கூறுவர் என்பதல்ல. இன்றே ஆரம்பித்து விட்டனர்.

Muthukrishnan Ipoh >>> Rammesh Muniandy: போதி தர்மர் தமிழகத்தில் இருந்து மலாயாவுக்கு வந்த போது மலாயா கிழக்கு கரையில் பட்டாணி எனும் இடத்தில் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்து இருக்கிறார். அதை சீலாட் என்று சொல்லுகிறார்கள். அதற்காக போதி தர்மர் அவர்களின் இனத்தைச் சார்ந்தவர் என்று கதை சொல்லக் கூடாது. தப்பு.

Rony Murugan >>> Muthukrishnan Ipoh: Silambattam = Silat

Veloo Muniandy:
Arumai Paghilvilku Nanri. Vaalgha Tamil 🙏

Muthukrishnan Ipoh >>> Veloo Muniandy: கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Manialagan Alagan

Manikam Sockalingam: valthukal ayaa

Muthukrishnan Ipoh >>> Manikam Sockalingam:
மிக்க நன்றி.

Jee Jee

Ganes Gani:
Valka Tamil inam

Muthukrishnan Ipoh >>> Ganes Gani: கருத்துகளுக்கு நன்றி.

Arushothy Veerasamy: Super

Mohan Jegan: மிக அருமை .💚

Thangaraju Perumal: Greet information

Muthukrishnan Ipoh >>> Thangaraju Perumal: கருத்துகளுக்கு நன்றி.

Muthukrishnan Ipoh: அனைவருக்கும் வணக்கம். இங்கு பதிவு செய்யப்பட்ட அன்பர்கள் அனைவரின் பதிவுகளும் வலைத்தளத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பேஸ்புக் ஊடகத்தின் பதிவுகள் தற்காலிகமானவையே. ஆனால் வலைத்தள இணையத்தின் பதிவுகள் நிரந்தரமாகி விடும். நமக்குப் பிறகு நம் சந்ததியினரும் அந்தப் பதிவுகளைப் பார்ப்பார்கள் படிப்பார்கள். அதற்காகத் தான் இந்த முன்னேற்பாடுகள். நன்றி.

https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_23.html

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Muthukrishnan Ipoh: நல்லது ஐயா. தங்களின் முயற்சி வீண் போகாது. உண்மை நிலையை இப்படி எல்லாம் பதித்து வைக்க வாய்ப்பு இல்லாமல் போனதினால் தான் வரலாற்றிலும் திருட்டு தொடர்கிறது. வாழ்த்துகள்
ஐயா.

Parameswari Doraisamy >>> Muthukrishnan Ipoh: மிக்க நன்றி ஐயா.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நமது வரலாறுகளை ஆதாரத்தோடு ஆவணப் படுத்தும் முயற்சியை, முன்னெடுத்து நமது வருங்கால சந்ததியினருக்குச் சகல சௌகரியங்களை முறைபடுத்த ஒரு முத்து கிருஷ்ணனாவது முன் நின்று பல ஆய்வுகளைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பழுது இல்லாமல் பதிவேற்றம் பண்ண பாடுப்பட்ட உழைப்புக்கு பெரும் உள்ளதோடு உவகை கொண்டு நன்றி மலர்களை தூவிகின்றேன்.

இந்த தலைமுறைகளை தவித்த தவிப்புகளை நம் வருங்காலத்தினர் அறவே வருந்திப்படக்கூடாது.

அவர்களாவது இந்நாட்டில் நாம் யார் என்பதை உங்களின் அரும் பெரும் ஆவணப் பதிவுகளை படித்து உணர்ந்து அறிவுபூர்வமான சிந்தனையாளர்களாக உருமாற்றம் பெறட்டும்.

இவ்வேளையில் தங்களின் அயராத, அளப்பரிய முயற்சிக்கு முக நூல் அன்பர்கள் சார்பாக தலைவணங்கி வாழ்த்துகிறோம் சார் 🙏🌷

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: தங்களின் அன்பான ஆதரவான சொற்கள் மென்மேலும் உற்சாகத்தை வழங்குகின்றன. தங்களைப் போன்று ஒரு சிலர் பக்க பலமாக இருந்தால் போதுங்க. நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து தேடல்களைத் தொடரலாம்.

தமிழக வரலாற்ரைப் பொறுத்த வரையில் அங்கே நிறைய வரலாற்று ஆசிரியர்கள் உள்ளார்கள். அங்கே இங்கே தேடிப் பிடித்து நூல்களாகக் கொண்டு வருகிறார்கள்.
இங்கே வேறு கதை.

நம்முடைய பழைய சான்றுகள் சாட்சிகள் எல்லாவற்றையும் ஒரு சிலர் புதைத்து விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் மடைமாற்றம் செய்து வருகிறார்கள்.

அவற்றைத் தேடிப் பிடித்து மொழிபெயர்த்து எளிய முறையில் உயிர் கொடுத்து பத்திரிகையில் எழுதுவதற்குள் பாதி வயது ஓடிவிடும் போல உள்ளது.
இன்னொரு தமிழர் வரலாம்.

மலாயா தமிழர்களைப் பற்றிய வரலாறுகளைத் தோண்டி எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அது எப்போது. அதற்குள் இருப்பவை எல்லாம் கரைந்து காணாமல் போய் விடலாம். காலத்தை விரட்டிக் கொண்டு போக வேண்டிய கட்டத்தில் வாழ்கிறோம்.

Darshini Priya: Super

Vijaya Sri: நற்தகவல் ... நன்றி ஐயா

Palaniappan Kuppusamy:

Rama Bathma:

Malathi Nair: Endru thaniyum intha sutahtira taagam. (
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்)

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: என்று தணியும் இந்த சுதந்திர தாகம்... என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்... என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்... என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்


இராமசாமி கவுண்டர்: அந்த போதிதருமர் பிறந்த தமிழ் மண்ணைக் காணத் தான் சீனப் பிரதமர் சென்ற ஆண்டு சென்னை மகாபலிபுரம் வந்தார். இங்கிருந்து கலங்கள் நேரடியாக சீனா சென்றதை தமிழ் இலக்கிய நூல்கள் பலவும் கூறுகின்றன. சீனநாட்டு அறிஞர்களும் இதை உறுதி படுத்திய சான்றுகள் பலவுண்டு.

Muthukrishnan Ipoh >>> இராமசாமி கவுண்டர்: உண்மையை சீனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் ஐயா. ஒரு சில நாடுகளில் உண்மையை ஏற்க துணிவு இல்லாமல் மூடி மறைக்கிறார்கள்.

Malathi Nair: I still believe it wont b as how u are writting with proof anna.

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: தேடிப் பிடிக்க வேண்டும். தேடியதைப் படிக்க வேண்டும். மற்ற மற்ற வரலாற்றுச் சான்றுகளுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். உண்மை என்று 100 விழுக்காடு உறுதியானால் வெளியே சொல்லலாம். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவது பாவச் செயல்.

Arojunan Veloo: வாழ்த்துகள் ஐயா!

Alagumani Mathivanan: தங்களின் அரிய முயற்சி தொடர வேண்டும்

Muthukrishnan Ipoh >>> Alagumani Mathivanan: மிக்க நன்றிங்க. தொடர்வோம். நம் வரலாற்றை மீட்டு எடுப்போம்.

பெ.சா. சூரிய மூர்த்தி: சொல்வார்கள் ஐயா. அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்து வளர்ந்த இரத்த அணுக்களின் பிறப்புகள்.

Muthukrishnan Ipoh >>> பெ.சா. சூரிய மூர்த்தி:
ஒரு சோம்பேறிக் கூட்டம் உருவாகி விட்டது. எதிர்காலத்தில் பேர் போடுவது சிரமம்.

Veera Ranta: .💚