12 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி (2021)

சிலாங்கூரில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி ரி.ம. 5 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் ரி.ம. 505,000.00 வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளுக்கு கணிசமான நிதியுதவியை சிலாங்கூர் மாநில அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

2008-ஆம் ஆண்டுக்கு முன்னர் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி கேட்டு; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, மத்திய அரசு என்று கெஞ்சி கையேந்தி பிச்சை எடுத்த காலமாக இருந்தது. வேதனையான காலம்.

ஆனால் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திக்கு பின்னர் தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.

ஆம். முதலில் சிலாங்கூரில் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் விடிவு காலம் பிறந்தது.

பல ஆண்டுகளாக நிதியிதவி இல்லாமல் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திக்கு விடிவு காலம் பிறந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 285,000.00 கொடுத்தது.

2010-ஆம் ஆண்டில் எப்பிங்காம் தமிழ்ப் பள்ளியின் யு.பி.எஸ்.ஆர். தேர்ச்சி  விகிதம் 28%. ஆனால் 2012-ஆம் ஆண்டில் 55%-ஆக உயர்வு கண்டது.

மேலும் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு 2012ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 85,000.00 நிதியுதவி செய்தது. இந்த நிதியைக் கொண்டு தான் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் கணினி வகுப்பறையில் 40 கணினிகள் பொருத்தப் பட்டன. மேலும் இந்த கணினி வகுப்பறை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் தொடர்ந்து முறையாக வழி நடத்தப் படுகிறது.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் பொது வசதி முன்னேற்றத்திலும் கல்வி முன்னேற்றத்திலும்  சிலாங்கூர் மாநில அரசின் தொண்டு அளப்பரியது.

இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக