10 அக்டோபர் 2022

சிறந்த கட்டுரையாளர் விருது

-BEST JOURNAL ARTICLE AWARD-


நம்பிக்கை குழுமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவின்; நம்பிக்கை நட்சத்திர விருதுகள் விழாவில்; ’சிறந்த பத்திரிகை கட்டுரையாளர் விருது’ மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த விழா 08 அக்டோபர் 2022 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர் உலக வணிக மையத்தில் (PWTC) நடைபெற்றது.


மலேசிய நாட்டில் மலேசிய இந்தியர்களின் அடையாளத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் சாதனையாளர்களை அங்கீகரித்து அவர்களைக் கௌரவிக்கும் ஓர் உன்னத நோக்கத்துடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


டத்தோ ஸ்ரீ இக்பால் தலைமையிலான நடுவர் குழுவினர் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். கலை, பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான விருதுகளுக்கு, மக்களின் 200,000 வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.


மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பு செய்தார்.

இந்த விழா இன்றைய மிகச் சிறந்த தலைவர்களை அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டும் என்றும் நம்பிக்கை நட்சத்திர விழாக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக