01 ஜூன் 2017

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம்

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியைத் தாயாக மதிக்க வேண்டும். தரணி போற்றும் மொழியாகத் தமிழை உயர்த்த வேண்டும்.


ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் பயின்று இப்போது அமெரிக்கா புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியில் மூலக்கூற்றுத் தொற்று நோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணி புரியும் டாக்டர் கலைமதியின் அறைகூவல்.

தமிழ்க்குயிலார் கா.கலியபெருமாள் அறக்கட்டளையின் சார்பில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் *தமிழ்ப்பள்ளி மாணவர்களும் முன்னேற்றப் பாதையும்* எனும் தலைப்பில் நடைபெற்ற  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்த அறைகூவலை விடுக்கப்பட்டது.

தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல முக்கியப் பதவிகளில் சேவை செய்கின்றனர் என்பதற்கு டாக்டர் கலைமதி ஓர் எடுத்துக்காட்டு.

25 மே 2017

பெண் புத்தி பின் புத்தி

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். 


கல்வி ஆகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு பின்விளைவுகளைத் தரும் என்பதை நன்கு யோசித்து விட்டு அதற்குத் தகுந்த முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.

இதை நாம் எந்த இலட்சணத்தில் புரிந்து கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே தெரியும். பெண் இல்லாமல் எந்த ஓர் ஆணும் பேர் முடியாது.

உண்மையிலேயே பெண் புத்தி முன் புத்தி என்று தான் சொல்ல வேண்டும். அதற்காகப் பெண்களுக்குத் தலைக்கனம் பிடிக்காமல் இருந்தால் சரி.

24 மே 2017

சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் + ஐ = சேலை. சேல் என்றால் கண். அகட்டல் என்றால் அகற்றுதல் (திருப்புதல்). அதாவது அடிக்கடி கண்களை அங்கும் இங்கும் அலையவிடும் 



பெண்களை நம்பாதே என்பது தான் அந்தக் காலத்துத் தமிழர்கள் சொன்னது.

ஒரேடியாக சேலை கட்டிய மாதர்களை நம்பக் கூடாது என்பது தவறான வியாக்கியானம்.

அப்படி என்றால் அம்மா, அத்தை, அக்கா, தங்கச்சி, மகள், பேத்தி அனைவரையுமே நம்பக் கூடாது என்று பொருள் படுமா.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

இந்தப் பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆறிலும் சாவு வரும். நூறிலும் சாவு வரும் என்று அனைவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இந்தப் பழமொழியை இரு வகையாகப் பிரித்து பார்க்கலாம். ஆறு (6) என்பது ஓர் எண்.

அதே போல நூறு (100) என்பதும் ஓர் எண். அந்த வகையில் இறப்பு என்பது ஆறு வயதிலும் வரலாம் நூறு வயதிலும் வரலாம் என்று பொருள் படுகிறது.


அடுத்து இந்த ஆறு என்பதில் இன்னொரு நெருடல். நதி அல்லது அருவி என்பதையும் ஆறு என்று சொல்கிறோம். அப்படி என்றால் ஆற்றில்கூட இறப்பு வரலாம் என்று பொருள் படுகிறது. சரி தானே. உண்மையான பொருள் அது அல்ல.

இந்தப் பழமொழி மகாபாரதத்திற்குப் போகிறது. குருசேத்திரப் போர். கேள்விப் பட்டு இருப்பீர்கள். மகாபாரதத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

அத்தினாபுரம் அரியணைக்காகக் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்கிற இடத்தில் நடைபெற்ற போர். கௌரவர்களும் பாண்டவர்களும் பங்காளிகள்.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். சரி. அது மகாபாரதம். அது தொடர்பான விளக்கம்.


குருசேத்திரப் போருக்கு முன்னதாகக் குந்தி தேவி தன்னுடைய மூத்த மகன் கர்ணனைச் சந்திக்கிறாள். பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து கொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறாள்.

அப்போது கர்ணன் கூறுகிறான்: நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி; கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூற்று ஒருவராகப் போர் செய்தாலும் சரி; இறப்பது உறுதி. அது எனக்குத் தெரியும் .

ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு. அபப்டி இருக்கும் போது எப்படி செத்தால் என்ன? செய்நன்றி கடனைக் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து உயிரை விடுகிறேன்' என்கிறான்.

இங்கே கர்ணன் கூறிய *ஆறிலும் சாவு நூறிலும் சாவு* எனும் முதுமொழிதான் பின்னர் காலத்தில் பழமொழியாக மாறியது.

குருசேத்திரப் போரைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பற்பல கருத்துகளைச் சொல்கின்றனர். துவாரகை என்பது பழங்காலத்து நகர். கடலில் மூழ்கிய நகரம்.

அந்த நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், குருசேத்திரப் போர் கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் நடைபெற்று இருக்கலாம் என்று  சொல்கின்றனர். போர் நடந்த இடம் இப்போது இந்தியா, ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020





கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி


விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். அதுவே இன்று கல் தோன்றா



மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று சொல்லப் படுகிறது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே அதாவது பூமி உருவாவதற்கு முன்பே தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது. தவறு.