13 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: பத்தாக் ராபிட் தோட்டம் தெலுக் இந்தான் - 1898

பத்தாக் ராபிட் தோட்டம் தெலுக் இந்தான் நகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது. இன்னும் இருக்கிறது. மலாயாவில் மிகப் பழைமையான தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 1890-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டது. (Batak Rabbit Estate Teluk Intan - 1898). தெலுக் இந்தான் இரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை மைல் தொலைவு.

Batak Rabbit Estate is located three miles from the town of Teluk Intan. This is also one of the oldest estates in Malaya. Created in the 1890s. (Batak Rabbit Estate Teluk Intan - 1898). One and a half miles from Telugu Indan Railway Station.

இந்தத் தோட்டத்தின் அப்போதைய பரப்பளவு 1098 ஏக்கர். 1906-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக ரப்பர் பயிர் செய்யப்பட்டது. 200 ஏக்கர் பச்சைக் காடுகள் அழிக்கப்பட்டு ரப்பர் பயிரிடப்பட்டது.

The area of the estate at that time was 1098 acres. The first rubber crop was planted in February 1906. 200 acres of green forests were cleared and rubber was planted.

அதற்கு முன்னர் 1890-ஆம் ஆண்டுகளில் அங்கு மணிலா நிலக்கடலை பயிர் செய்து இருக்கிறார்கள். அப்போதே அந்தக் காலக் கட்டத்திலேயே நிலக்கடலை வேர்க்கடலை பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

Prior to that, Manila groundnut was cultivated there in the 1890s. At that time, Tamil people migrated there to cultivate groundnuts.

இந்தத் தோட்டம் ஆற்று வண்டல் மண் நிறைந்த பகுதியாகும். அதனால் நிறைய கால்வாய்களை வெட்டி இருக்கிறார்கள். 1906-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 100,000 ரப்பர் கன்றுகளை தமிழர்கள் நட்டு இருக்கிறார்கள்.

The estate was covered with river sediments. As that a lot of canals were cut. In 1906; the Tamil people planted about 100,000 rubber saplings.

ரப்பரைத் தவிர மரவள்ளி; நிலக்கடலை பயிர் செய்து இருக்கிறார்கள். அகலான மண்சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். பேராக் ஆற்று ஓரத்தில் இந்தத் தோட்டம் அமைந்து இருந்ததால் அறுவடைப் பொருள்களை எளிதாகக் கொண்டு செல்ல முடிந்து உள்ளது.

Apart from rubber, they cultivated cassava and groundnuts. They had set up wide ditches. The estate was located on the banks of the Perak River, which made it easy to transport produce.

பத்தாக் ராபிட் தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டில், 35 ஒப்பந்தக் கூலி தமிழர்களும் (Indentured Tamils); ஒப்பந்தம் கையெழுத்துப் போடாத கட்டுப்பாடற்ற 70 தமிழர்களும்; வேலை செய்து இருக்கிறார்கள்.

In 1906 the labour force employed consists of thirty-five Indentured and seventy free Tamils.

இந்தத் தோட்டத்தில் மலேரியா நோயின் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. ஆகவே குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும் முறையைத் தோட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. அப்போது அதன் நிர்வாகியாக வில்லியம் டன்கன் (William Duncan)  இருந்தார். இவர் ரூபானா தோட்டத்தில் நிர்வாகியாக இருந்தவர். தோட்டத்தின் உரிமையாளர்கள் பினாங்கைச் சேர்ந்த மோரிசன் அலன் நிறுவனம் (Morison Allan of Messrs. Adams & Allan Pinang) ஆகும்.

The incidence of malaria was high in this estate. Therefore, the management of the estate implemented a system of boiling the water before drinking. Its administrator at the time was William Duncan. He was the administrator of the Rubana estate. The estate wass owned by the Morison Allan of Messrs. Adams & Allan in Penang.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.03.2021

Sources:

1.http://archiveweb.cumbria.gov.uk/calmview/Record.aspx?src=CalmView.Catalog&id=DPEN%2F301%2F2%2F15I

2. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 8, No. 1 (109), EREDIA'S DESCRIPTION OF MALACA, MERIDIONAL INDIA, AND CATHAY (April, 1930), pp. 1-288 (295 pages) Published By: Malaysian Branch of the Royal Asiatic Society

3. 1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 405 - 406. Britain Publishing Company, 1908,

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

 


10 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: சிலாங்கூர் காஜாங் செமினி தோட்டம் 1880

காஜாங் செமினி தோட்டம் (Semenyih Estate Kajang) 1896-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த ஆண்டில் 350 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். அதற்கு முன்னர் அது ஒரு காபி தோட்டம். ஏற்கனவே 1880-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டத்தில் 20 தமிழர் குடும்பங்கள் இருந்தன. 140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

1898-ஆம் ஆண்டில் ரப்பர் கன்றுகள் நடப்பட்டன. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1904-ஆம் ஆண்டில் முதல் ரப்பர் மரம் சீவப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள். 1896.

இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 709 ஏக்கர். 1898-ஆம் ஆண்டில் 54 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டது. 1905-ஆம் ஆண்டில் 38 ஏக்கர். 1906-ஆம் ஆண்டில் 200 ஏக்கர். 1907-ஆம் ஆண்டில் 329 ஏக்கர்.

மேலும் 90 ஏக்கர் காடுகள் அழிக்கப் பட்டன. காஜாங் செமினி தோட்டத்திற்கு வந்த மூத்த தமிழர்கள் தான் செமினி பாசா காடுகளை அழித்தார்கள். செம்மண் சாலைகளை அமைத்தார்கள். செமினி ரப்பர் தோட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் தோட்டத்தில் 1907-ஆம் ஆண்டில் மொத்தம் 81,162 மரங்கள் இருந்தன.

1906 ஜூன் மாதத்தில் 4,635 பவுண்டு ரப்பர் அறுவடை செய்யப்பட்டது. இந்த ரப்பர் இலங்கையில் விற்கப்பட்டது. அதே 1906-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் 400 பீக்கள் காபி உற்பத்தி செய்யப்பட்டது.

இந்தத் தோட்டம் இலங்கையில் இருந்த ஆசிய ரப்பர் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது (Asiatic Rubber Produce Company, Ltd., of Ceylon).

அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள்: ஜி. எச். ஆல்ஸ்டன் (G. H. Alston); ஈ.எம். ஷாட்பாக் (E. M. Shatfock); ஆர்.எப்.எஸ். ஹார்டி (R. F. S. Hardy); சி. டி. ரோட்ச் (C. D. Rotch); செமினி தோட்ட நிர்வாகி: மிட்சல் (C. Mitchell).

முதலில் இந்தத் தோட்டம் லா பூன் டிட் (Lau Boon Tit) என்பவருக்குச் சொந்தமானது. அவரிடம் இருந்து 1906 ஜனவரியில் வாங்கப்பட்டது.

இந்தத் தோட்டம் காஜாங் இரயில் நிலையத்தில் இருந்து ஏழு மைல் தொலைவிலும்;  செமினி கிராமத்தில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் அமைந்து இருந்தது. இதற்கு இருபத்தி இரண்டாம் கட்டை தோட்டம் என்றும் உள்ளது. தோட்டத்திற்குள் மாட்டு வண்டிகளில் தான் செல்ல முடியும்.

1920-ஆம் ஆண்டில் 120 குடும்பங்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டன. 30 குடும்பங்கள் பக்கத்துத் தோட்டங்களுக்குப் புலம் பெயர்ந்தன. ஒரு கேள்வி. 140 ஆண்டுகளுக்கு முன்னால் செமினி காட்டை அழித்துச் செப்பனிட்டவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா? அப்படி அழைப்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா?

மலாயா தமிழர்கள் இங்கு வந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்கத்து நாட்டில் இருந்து கப்பலேறி வந்த பட்டி தொட்டி மட்டும் ஒரு நாட்டின் பெரிதான மந்திரி பதவியை எல்லாம் வகிக்க முடியும். மண்ணின் மைண்டர் ஆக முடியும்.

ஆனால் இவர்களுக்கு முன்னால் வந்த தமிழர்களுக்கு எல்லாம் வந்தேறிகள் எனும் பட்டயம். மனசாட்சி இல்லாதவர்களைப் பார்த்து மனம் மௌனமாய் அழுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.03.2021

சான்றுகள்:
Source:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908.

3. Sandhu. K.S (2010). Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786 - 1957), Mexico City: Cambridge University Press.

4. Table - 3.2 Indian Labour Immigration to Malaysia (1844-1941)




08 மார்ச் 2021

மகளிர் தின வாழ்த்துகள் 2021

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது. மரம் சத்தத்தோடு முறிகிறது. இந்த நாட்டில் தமிழர் இனம், சத்தம் இல்லாத விதைகளாய் வாழ்ந்தார்கள். வாழ்கின்றார்கள். இனி வரும் காலங்களில் மாற்றத்தை எதிர்ப் பார்க்கின்றார்கள். அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் படுகிறார்கள்.

நாட்டின் வளப்பத்திற்காகத் தமிழர்கள் பட்ட அவலங்கள் சொல்லில் மாளா. அந்தத் தியாகச் சீலர்களின் அடிப்படை உரிமைகள் மீது அக்கறைக் காட்டாமல் இருப்பது நியாயம் அல்ல. எத்தனை இன்னல்கள் வந்தாலும் பொறுமையோடும்; சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

மலாயா தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். அவர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள்.

தங்களுகாக யோசிக்கத் தெரியாமல்; நாட்டுக்காக தங்களின் ஆசா பாச விழுமியங்களை இழந்த தமிழர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு? வந்தேறிகள் என்று அழைப்பது தான் தப்பு. படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயிலாக இருக்கக் கூடாது.

அவர்கள் உழைச்சுப் போட்ட சுகத்தில் தான்; இப்போது பலரும் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனவாதச் சவடால் பேகின்றார்கள். மலாயா தமிழர்கள் இல்லை என்றால் மொழிவாதச் செருக்குகளும் இல்லை. இனவாத மிடுக்குகளும் இல்லை. பிழைப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி தான்.

வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மை வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். செத்துப் போகாது. சமாதி காணாது. சத்தியமான உண்மை.

மலையூர் மண்ணில் மண்ணாய்க் கலந்து; கித்தா மரங்களோடு கித்தா மரங்களாய்க் கலந்து; தகரக் கொட்டாய்களில் கித்தா பூக்களாய்க் காய்ந்து கறுகிப் போனவர்கள் மலாயா தமிழர்கள். அவர்களை நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.03.2021



05 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: பந்திங் ஜூக்ரா பெர்மாத்தாங் தோட்டம் 1882

மலாயாவின் கட்டமைப்புப் பணிகளில் மலாயா தமிழர்களின் அர்ப்பணிப்பு அன்பளிப்புகள்; சமர்ப்பணக் காணிக்கைகள்; ஆக்கல் அறுவடைகள் காலத்தால் மறக்க முடியாத வரலாற்றுத் தடங்கள். 1882-ஆம் ஆண்டில் இந்தத் தோட்டத்தில் குடியேறிய தமிழர்கள் அந்தப் பகுதியின் காண்டா காடுகளையும் சதுப்பு நிலங்களையும் செப்பனிட்டுக் காபி தென்னைத் தோட்டமாக மாற்றி இருக்கிறார்கள்.

1882-ஆம் ஆண்டில் சிலாங்கூர் பந்திங், ஜூக்ரா, பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. வருடத்தைக் கவனியுங்கள். 1882. அதற்கு முன்னதாகவே தமிழர்கள் குடியேறி இருக்கலாம். ஏன் என்றால் அது முன்பு ஓர் ஆமணக்கு தோட்டம்.

மலாயாவில் 1840-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். அப்படிக் குடியேறிய தமிழர்கள் இந்த பெர்மாத்தாங் தோட்டத்திற்கும் வந்து இருக்கலாம். ஆமணக்கு தோட்டத்தில் வேலை செய்து இருக்கலாம்.

Selangor, Banting, Jugra Permatang Estate was established in 1882. At first it was a banana plantation. Then castor; Coffee plantation. It then became a coconut plantation. Tamil people were brought in from India as indentured labourers to this estate. A picture speaks more than 1000 words

மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா தமிழர்கள் மலாயாவிற்கு வந்து விட்டார்கள். இதை மலாயா வாழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வந்தேறிக்கு முன்னர் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது தப்பு.

ஒரு நாட்டில் மிக உயர்ந்த அரசியல் பதவி வகித்த ஒருவரின் குடும்பம் கப்பலேறி வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் இங்கே வந்து குடியேறி விட்டார்கள். அந்தத் தமிழர்களுக்குப் பின்னர் வந்த சிலர், மஞ்சள் துணி போட்டு மசாலா தோசை சுட்டுச் சாப்பிட்டு இருக்கிறார்கள். ரொட்டி சானாய் போட்டு வயிறு வளர்த்து இருக்கிறார்கள்.

அந்தக் கதையை எல்லாம் தமிழர்களுக்குப் பின்னர் வந்த வந்தேறிகள் மறந்து விட்டார்கள். காலம் செய்த கோலம். மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். ஆக யார் வந்தேறிகள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பந்திங் பெர்மாத்தாங் தோட்டம் முதலில் இது ஒரு வாழைத் தோட்டம். பின்னர் ஆமணக்கு (castor) தோட்டம். பின்னர் காபி தோட்டம். அடுத்து தென்னைத் தோட்டம். அதற்கு அடுத்து ரப்பர் தோட்டம்.

இந்தத் தோட்டம் ஜுக்ரா நகரத்தில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது. இந்தத் தோட்டத்தில் ஓர் அதிசயம் என்னவென்றால் அந்தத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழர்கள் சொந்தமாகவே தங்களின் வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவி இருந்தன.

The Permatang coconut estate, situated seven miles from Jugra town, has several interesting and distinctive features. The coolies are not housed in "lines," as is usual on estates in the Federated Malay States, but in houses built by themselves to their own design and scattered over the property.

ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்தமாகக் காய்கறித் தோட்டம். தோட்டப் பால் பண்ணையை நிர்வாகி அறிமுகம் செய்தார். தோட்டத்தில் 35 பசுமாடுகள். பால் மற்றும் வெண்ணெய் விற்பனை நல்ல லாபத்தை அளித்தது. இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 785 ஏக்கர். இதில் 300 ஏக்கர் தென்னை மரங்கள்.

Each house has its own patch of garden. The manager has introduced dairy farming, and the sale of milk and butter from his thirty-five head of cattle yields a profit after paying all expenses. The estate is 785 acres in extent, 300 acres of which have been planted with coconuts.

1906-ஆம் ஆண்டில் 17,000 தென்னை மரங்கள். 7335 தேங்காய்கள். 1907-ஆம் ஆண்டில் 150,000 தேங்காய்கள் கிடைத்தன.

There are altogether 17,000 coconut-trees, and the produce from those in bearing in 1906 was 7,335 nuts; the estimated yield for 1907 was 150,000 nuts. The nuts are made into copra on the estate, and the product is sold in Singapore.

1900-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் நிர்வாகி மன்ரோ (R. W. Munro). 1864-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். 1895-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். இவர் வருவதற்கு முன்னர் பல நிர்வாகிகள் பணி செய்து உள்ளனர். நிர்வாகி மன்ரோ, சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காபி பயிர்த் தொழில் ஈடுபட்டார். இந்தத் தோட்டம் Morib Coconut Estates Syndicate நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.

Mr. R. W. Munro, the manager, was born in 1864, came to the Federated Malay States in 1895, and spent years in coffee-planting in Negeri Sambilan and Selangor. Many managers have worked before he came. R. W. Munro has managed the Permatang estate since 1900s. The proprietary company, the Morib Coconut Estates Syndicate.

இதை எல்லாம் பார்த்த பிறகு மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்ல முடியுமா. மீண்டும் சொல்ல வேண்டிய நிலை. வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.03.2021

https://ksmuthukrishnan.blogspot.com/2021/03/1882.html

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 492.

2. http://www.biship.com/fleetlists/fleet1880-1889.htm

3. http://seasiavisions.library.cornell.edu/catalog/

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

 

மலாயா தமிழர்கள்: கெமுனிங் தோட்டம் சுங்கை சிப்புட் - 1870

கெமுனிங் தோட்டம் சுங்கை சிப்புட் நகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது. இன்னும் இருக்கிறது. மலாயாவில் மிகப் பழைமையான தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 1870-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டது. (Kemuning Estate, Sungai Siput, Perak - 1870)

Kemuning Estate, three miles from Sungai Siput, Perak. It is one of the oldest estates in Malaya. Developed in 1870s. In several respects Kemuning Estate is unique among rubber properties. It stands in the enviable position of being absolutely free from government rent, having been granted in 1870s, in perpetuity to D.H. Hill by the Perak Government in recognition of his pioneering work in the country.


பேராக் அரசாங்கம் டி.எச்.ஹில் என்பவருக்கு அந்தத் தோட்டத்தை அன்பளிப்பாக வழங்கியது. இவர் பேராக் மாநிலத்தில் பல கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அதனால் நிலவரி இல்லாமல் அவருக்கு அந்தத் தோட்டம் வழங்கப்பட்டது.

1900-ஆம் ஆண்டுகளில் A.D.Machado என்பவர் நிர்வாகியாகப் பணிபுரிந்தார். 6000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

Under the management of A.D. Machado it has been the scene of many experiments and at the time has at once the oldest rubber estate in the district.


முதலில் 1870-ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு நடப்பட்டது. பின்னர் அராபிக்கா காபி நடப்பட்டது. அதன் பின்னர் 1897-ஆம் ஆண்டில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. கெமுனிங் தோட்டம் திறக்கப்பட்ட போது 60 தமிழர்கள் வேலை செய்தார்கள்.

Cassava was first planted in this estate in the 1870s. Then Arabica coffee was planted. Subsequently, in 1897, rubber was cultivated. 60 Tamils were employed when the Kemuning estate was first opened for cultivation.

ஆள் சேர்ப்பு செய்வதற்காக ஓர் ஐரோப்பியத் துணை நிர்வாகி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். கங்காணி எவரும் அனுப்பபடவில்லை. ஏன் என்றால் கங்காணி முறை அந்தக் கட்டத்தில் மலாயாவில் அமல்படுத்தப் படவில்லை.

An European assistant was sent to India for laborers recruitment. No Kangani was sent. Because the Kangani system was not implemented in Malaya at that time.

ஆரம்பக் காலங்களில் தோட்டத்தில் அதிக வருமானம் இல்லை. இருப்பினும் இந்தத் தோட்டத்தில் ஈய்ச் சுரங்கங்கள் இருந்தன. அவற்றைச் சீனர்களுக்கு வாடகைக்கு விட்டார்கள். அதன் மூலம் வருமானம் கிடைத்தது. அதன் பின்னர் தமிழர்கள் 380 பேர் வரவழைக்கப் பட்டார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சுங்கை சிப்புட் பகுதியில் மிகப் பெரிய தோட்டமாக விளங்கியது.

In the early days Kemuning estate had also a distinction that, although it is a rubber estate, the bulk of its revenue so far had been derived from rubber source, but from tin-mining, the estate having many strips of rich tin - land within its boundaries. These mines are worked by Chinese in tribute, and yield a very handsome profit.

தோட்டத்தில் வேலை செய்த தமிழர்களுக்காக ஒரு மருத்துவமனையையே கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அந்தத் தோட்டம் எவ்வளவு பெரிய தோட்டமாக இருந்து இருக்க வேண்டும். அத்தாப்பு கூரைகள் வேய்ந்த மருத்துவமனை.

An atap roofed hospital was built for the Tamils who worked in the estate. Just imagine how big the estate must have been.


இங்கு பப்பாளி சாறு செய்வதற்கு 300 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி மரங்களும் நடப்பட்டன. ரப்பர் வருவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

கொஞ்ச காலம் எலுமிச்சை புல் செடிகள், மிளகு எல்லாம் பயிர் செய்து இருக்கிறார்கள். மலாயா வரலாற்றில் கெமுனிங் தோட்டம் தலையாய மிளகுத் தோட்டமாகும். இப்போதுகூட அதற்கு மிளகுத் தோட்டம் என்று செல்லப் பெயர் உண்டு.

In addition to rubber and tin, the property produced papaya juice, lemon-grass oil, coffee, and a little pepper for export.

ஆக 1840-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயாவுக்கு வந்து இந்த நாட்டை வளப்படுத்திய இந்தியர்கள் (தமிழர்கள்) வந்தேறிகளா? அப்படிச் சொல்லும் பொது கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
05.03.2021

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 412 - 413. Britain Publishing Company, 1908, p

2. http://www.biship.com/fleetlists/fleet1879-1889.htm

3. http://seasiavisions.library.cornell.edu/catalog/

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)