31 ஆகஸ்ட் 2020

மலாக்காவில் பரமேஸ்வரா உணவகங்கள்

பரமேஸ்வராவின் பெயரில் மலாக்காவில் சில உணவகங்கள் உள்ளன. மலாக்கா கடலில் பிடிக்கப்படும் கடல்வகை மீன்கள் நேரடியாக இந்த உணவகங்களுக்குக் கொண்டு வரப் படுகின்றன.

நல்ல தரமான சுத்தமான கடல் மீன் வகைகள். உணவகங்களிலேயே வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான மீன் வகைகளைத் தேர்வு செய்யலாம். உடனடியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள்.

மலாக்கா மாநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உம்பை (Umbai) எனும் மீன்பிடி கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் தான் பரமேஸ்வராவின் பெயரில் சில உணவகங்கள் உள்ளன. தவிர மலாக்கா பண்டார் ஹீலீர் ஜாலான் பரமேஸ்வரா சாலையிலும் பரமேஸ்வரா பெயரில் இரு உணவகங்கள் உள்ளன.

1. Ikan Bakar Klasik Parameswara Terapung, Umbai

2. Ikan Bakar Parameswara, Umbai

3. Ikan Bakar Parameswara Restaurant, Umbai

4. Parameswara Grilled Fish Restaurant, Umbai

5. Medan Ikan Bakar Parameswara, Pengkalan Pernu, Umbai, Melaka

6. Medan Ikan Bakar Muara Sungai Duyung, Duyung

7. Restoran Baba Ang, Jalan Parameswara, Malacca City,

பரமேஸ்வரா உணவகங்கள் பட்டியல் நீண்டு போகிறது. ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் (பெயர் வேண்டாமே) ஒரு நாளைக்கு 60 - 70 ஆயிரம் ரிங்கிட் வரை வியாபாரம் நடைபெறுவதாகச் சொல்லக் கேள்வி.

மலாக்காவில் பரமேஸ்வரா பெயர் கொண்ட உணவகங்களில் மிகவும் புகழ் பெற்றது Jalaludin bin Said Ikan Bakar Parameswara. இதன் மற்றொரு பெயர் Ikan Bakar Umbai Melaka. உம்பாய் கடற்கரையில் உள்ளது.

புலாவ் பெசார் தீவிற்குப் பயணம் செல்பவர்கள் இந்த உணவகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். சிங்கப்பூரில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து போகிறார்கள்.

ஈக்கான் பாக்கார் பரமேஸ்வரா உணவகத்தின் வியாபாரம் மாலை 5.00 மணி முதல் இரவு 12 மணி வரையில். ஆறு சமையல்காரர்கள். 70 வேலைக்காரர்கள். இந்த உணவகத்தில் மட்டும் ஏறக்குறைய 75 - 80 பேர் வேலை செய்கிறார்கள்.

சிரம்பான், தைப்பிங், பினாங்கு, பெட்டாலிங் ஜெயா, தெலுக் இந்தான், ஜொகூர் பாரு, மூவார், பத்து பகாட் போன்ற இடங்களிலும் பரமேஸ்வராவின் பெயரில் உணவகங்கள் உள்ளன. மலாக்காவிற்கு வந்தால் உம்பாய் பெர்னு உணவகங்களுக்குச் சென்று பாருங்கள். ஆதரவு வழங்குவது நல்ல ஒரு செயல்.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி. இது அந்தக் காலத்துப் பழமொழி. ஆனால் பரமேஸ்வரா மறைந்தும் உணவகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். இது இந்தக் காலத்து புது மொழி. பரமேஸ்வராவின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக