02 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 2

 தமிழ் மலர் - 02.08.2020

தமிழ்நாட்டின் வரலாற்றில் சேரர், சோழர், பாண்டியர் மன்னர்களுக்கு இணையான மற்ற மற்ற பேரரசர்களைப் பற்றிய தகவல்கள் மறுக்கப் படுகின்றன. தவிர்க்கப் படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை. வேண்டாத மனையாள் கை பட்டாலும் குற்றம். கால் பட்டாலும் குற்றம் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான். பல்லவர்களைப் பற்றி அதிகமாய் விமர்சிப்பதும் இல்லை.

பல்லவர்களின் ஆட்சி மாட்சி, கட்டிடக் கலை, இலக்கியக் கலை, விவசாய மேலாண்மை போன்ற கலைகள் எல்லாமே தமிழர் மரபு சார்ந்தவை. அதை மறுக்க முடியுமா. முடியாது.

வின்சென்ட் ஸ்மித் (Vincent Arthur Smith) என்னும் ஆங்கில வரலாற்று ஆசிரியர் அவருடைய நூலில்  பல்லவர்கள் தென்னிந்தியர்கள் என்று வரையறுத்து உள்ளார்.

(Smith, Vincent Arthur (1919). The Oxford history of India : from the earliest times to the end of 1911, Oxford : Clarendon Press - https://archive.org/details/TheOxfordHistoryOfIndia)

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் 1843–ஆம் ஆண்டு இங்கிலாந்து டப்லின் நகரில் பிறந்தவர். இந்தியவியலாளர், வரலாற்று ஆசிரியர்.

பல்லவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கி.பி. 275 முதல் கி.பி. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதனால் தான் பல்லவர்களைத் தமிழர் சார்ந்த இனத்தவர் என்றும் பலரும் சொல்கிறார்கள்.

சிற்பக் கலை, ஓவியக் கலை, ஆடல் கலை. இந்தக் கலைகளைத் தமிழகத்தில் ஓங்கி வளரச் செய்தது பல்லவர்கள் தான். அதை மறைக்க முடியுமா. ஏன் என்றால் அது தான் உண்மை. தமிழர் இனத்திற்குப் பல்லவர்கள் நிறையவே செய்து இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு கிடைக்காத சிற்பங்களை எல்லாம் பல்லவர்கள் வடித்துச் சென்று இருக்கிறார்கள். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள். தெரியும் தானே. சாட்சி சொல்ல அது ஒன்றே போதும். எப்படி செதுக்கி இருப்பார்கள். எப்படிக் குடைந்து இருப்பார்கள். கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சரி.

கம்போடியாவில் சென்லா பேரரசு; கெமர் பேரரசு; சாம்பா பேரரசு போன்றவை ஆட்சி செய்து உள்ளன. இவை தமிழர் அரசுகளா? உண்மையில் அங்கோர்வாட் கோயிலைக் கட்டிய சூர்யவர்மன் தமிழ் மன்னனா? இப்படி எல்லாம் கேள்விகள் அடிக்கடி கேட்கப் படுகின்றன.

தமிழகத் தமிழாய்வாளர் தெய்வேந்திரன் கந்தையா அவர்கள் அதற்கும் பதில் சொல்கிறார். https://ta.quora.com/ இணையத் தளத்தில் அந்தப் பதிவுகள் உள்ளன. அந்தப் பதிவில் இருந்து ஒரு பகுதியை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.

’ஒரு பெயரில் வர்மன் என்று வந்தாலே அது பல்லவர்களைக் குறிக்கும் பெயராகும். அந்தப் பெயர்களைப் பயன்படுத்திய பல்லவ மன்னர்கள் பெரும்பாலோர் காஞ்சிபுரத்தில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.’

’இருப்பினும் இவர்கள் முதன்முதலாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தமிழகம் வந்ததாக இருக்க வேண்டும்’ என்று சொல்கிறார்.

இந்தப் பல்லவர்கள் ஆந்திர நாடு; காஞ்சிபுரம்; மலாயா கடாரம்; இலங்காசுகம்; மாயிருண்டகம்; ஸ்ரீ விஜயம்; மஜபாகித்; சயாம்; காம்போஜம்; லாவோஸ்; பர்மா; சம்பா; அன்னாம்; போன்ற இடங்களில் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் ’வர்மன்’ என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் சமஸ்கிருத மொழியையும்; இவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியையும் கலந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

8-ஆம் நூற்றாண்டில் பரமேஸ்வர வர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்து வந்தார். அவருக்கு சந்ததிகள் எதுவும் இல்லாமல் போய் விட்டது. ஆட்சி செய்ய ஒரு பல்லவ வாரிசு தேவைப் பட்டது.

ஆக பரமேஸ்வர வர்மன் இந்தியாவின் வடக்கே ஓரிசா பக்கமாய்ப் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை. அல்லது ஆப்கானிஸ்தான் பக்கம் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை. அல்லது ஆந்திர தேசம் பக்கமாகப் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை.

பேசி வைத்தால் போல நேராக கம்போடியா நாட்டிற்குப் போய் இருக்கிறார். அங்கே போய் ஒரு பல்லவ வாரிசைத் தேடிப் பார்த்து இருக்கிறார். சரியாக அமையவில்லை. அப்படியே சம்பா (Champa) தீவுக்குப் போய் இருக்கிறார். சம்பா அரச சபையில் ஒரு பல்லவச் சிறுவனைத் தேடி இருக்கிறார்கள்.

சம்பா தீவை ஆட்சி செய்த மன்னன் தன்னுடைய நான்கு பிள்ளைகளில் யாரை வேண்டும் என்றாலும் அழைத்துச் செல்லலாம். ஆனால் அவர்கள் சம்மதம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மூத்த மூவரும் மறுத்து விட்டார்கள்.

கடைசி மகன் நந்திவர்மன். விவரம் தெரியாத நான்கு வயது. அவனைச் சம்பா தீவில் இருந்து அழைத்து வந்து காஞ்சிபுர அரசனாக முடிசூட்டினார்கள்.

சம்பா நாட்டு நந்திவர்மன் தஞ்சாவூருக்கு வந்த போது தஞ்சைத் தமிழ் மொழி தெரியாமல் தடுமாறிப் போய் இருக்கலாம். அதனால் அவனுக்கு உதவியாக நந்திக் கலம்பகம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வாளர் தெய்வேந்திரன் கந்தையா சொல்கிறார்.

ஆக ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இந்தப் பல்லவர்கள் தங்களின் இனத்தையும்; இனப் பாரம்பரியத்தையும் மிகக் கவனமாகவும்; பத்திரமாகவும் பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டை ஆட்சி செய்த காலத்திலேயே பல்லவ இனப் பாதுகாப்பு உறுதியாகவும் கனமாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் வர்மன்கள் என்று அழைத்துக் கொண்ட அந்தப் பல்லவ அரச மரபினர்; ஒற்றுமையுடன் வாழவில்லை. அவர்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள். ஆயிரம் போர் முழக்கங்கள். மறுப்பதற்கு இல்லை. நட்பு கொண்டால் அதை எளிதில் விட்டு விலகுவதும் இல்லை.

சூரியவர்மன் (Suryavarman I) காம்போடியாவை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர். பலருக்கும் தெரியும். இவரின் மற்றொரு பெயர் நிர்வாணபாதா (Nirvanapada). இவர் கம்போடியாவின் மன்னனாக இருந்த போது முதலாம் இராஜேந்திர சோழனின் நண்பராக இருந்தார். இருவரும் நல்ல நண்பர்கள்.

இவர்கள் இருவரும் தமிழ் பேசினார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால் சூரியவர்மனுக்கு தமிழ் தெரியுமா என்று நமக்குத் தெரியவில்லை. கம்போடிய கல்வெட்டுகளில் சமஸ்கிருத மொழியும்; கிரந்த மொழியும்; கலந்து வருகின்றன.

இடை இடையே தமிழி எழுத்துகளும் வந்து போகின்றன. ஆக சூரியவர்மனுக்கு  கம்போஜ மொழி மட்டுமே தெரிந்து இருக்க வேண்டும். இது ஒரு கணிப்பு. இராஜேந்திரனும் சூரியவர்மனும் இருவருமே சைவ மன்னர்கள்.

இருப்பினும் பூஜாங் கடாரத்தை ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் என்பவரும் கம்போடியாவை ஆட்சி செய்த சூரியவர்மன்; இருவருமே பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.  

ஸ்ரீ விஜயம் ஆட்சி செய்த கடாரத்தை இராஜேந்திர சோழன் தோற்கடித்தார்.
அதற்கு காரணமாக இருந்தவர் கம்போடிய மன்னர் சூரியவர்மன் (I) என்பவர் தான். தெரிந்து கொள்ளுங்கள்.

Suryavarman I (1006 – 1050) gained the throne. Suryavarman I established diplomatic relations with the Chola dynasty of south India. Suryavarman I sent a chariot as a present to the Chola Emperor Rajaraja Chola I. His rule was marked by repeated attempts by his opponents to overthrow him and by military conquests.

Suryavarman was successful in taking control of the Khmer capital city of Angkor Wat. At the same time, Angkor Wat came into conflict with the Tambralinga kingdom of the Malay peninsula.

https://en.wikipedia.org/wiki/Khmer_Empire#Yasodharapura_%E2%80%93_the_first_city_of_Angkor

In other words, there was a three-way conflict in mainland Southeast Asia. After surviving several invasions from his enemies, Suryavarman requested aid from the powerful Chola Emperor Rajendra Chola I of the Chola dynasty against the Tambralinga kingdom.

After learning of Suryavarman's alliance with Rajendra Chola, the Tambralinga kingdom requested aid from the Srivijaya King Sangrama Vijayatungavarman.

This eventually led to the Chola Empire coming into conflict with the Srivijaya Empire. The war ended with a victory for the Chola dynasty and of the Khmer Empire, and major losses for the Srivijaya Empire and the Tambralinga kingdom.

This alliance also had religious nuance, since both Chola and Khmer empire were Hindu Shaivite, while Tambralinga and Srivijaya were Mahayana Buddhist.

There is some indication that before or after these incidents Suryavarman I sent a gift, a chariot, to Rajendra Chola I to possibly facilitate trade or an alliance. Suryavarman I's wife was Viralakshmi, and following his death in 1050, he was succeeded by Udayadityavarman II.

சயாம் மலாயா பகுதிகளை ஆட்சி செய்த தாம்பரலிங்கா அரசு என்பது கடாரத்திற்கு வடக்கே உள்ளது. இந்தப் பல்லவ அரசு கம்போடியா அரசிற்கு ஓர் எதிரி அரசாகவே இருந்தது. மூன்று முறை தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால் கடார அரசிற்கு தோழமை அரசாக இருந்தது.

தாம்பரலிங்கா அரசை விட்டு வைத்தால் கம்போடிய அரசிற்கு ஆபத்து. அதனால் சூரியவர்மன் ஒரு நல்ல நாள் பார்த்து இராஜேந்திர சோழனுக்குச் செய்தி அனுப்பினார். ’நண்பேண்டா வந்தேண்டா’ என்று சொல்லி இராஜேந்திர சோழன் படை எடுத்து வந்தார்.

கடாரத்தைத் துவம்சம் செய்த கையோடு தாம்பரலிங்கா அரசையும் துவைத்துப் போட்டு விட்டுச் சென்றார். ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழன் படை எடுத்ததற்கு கம்போடிய மன்னர் சூரியவர்மனும் ஒரு காரணம்.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

இந்த கவுண்டினியன் வாரிசுகளில் அஜினாதா கவுண்டினியன் (Ajnata Kaundinya) என்பவர்தான் கம்போடிய அரசை முதன்முதலில் தோற்றுவித்தவர் என்றும் சொல்லப் படுகிறது. ஜெயவர்மன் அல்ல.

உடைந்து சிதறிப் போய்க் கிடந்த கம்போடியாவை ஒருங்கிணைத்தவர் ஜெயவர்மன்.

இவருக்குப் பின்னர் கம்போடியா வரலாறு சீரும் சிறப்புடன் மலர்ச்சி பெற்றது. அதனால் தான் ஜெயவர்மன் கம்போடியாவின் தந்தை என்று கொண்டாடப் படுகிறார்.

உண்மையில் பார்க்கப் போனால் கவுண்டினியன் என்பது ஒரு குலப் பெயர். பல கவுண்டினியர்கள் தமிழகத்தில் சங்கப் புலவர்களாக இருந்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு விசயம். இந்தக் கவுண்டினியர் பரம்பரையில் தோன்றியவர் தான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். சரி.

கம்போடியாவை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். இருந்தாலும் ஆரம்பக் காலத்தில் அவர்கள் தங்களைக் கவுண்டினியன் எனும் குலப் பெயர் சொல்லியே அழைத்துக் கொண்டார்கள். இந்தக் கவுண்டினியர்கள் பல்லவர்கள் அல்ல என்றும் சிலர் சொல்வது உண்டு.

கம்போடியாவை மொத்தம் 36 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் கவுண்டினியன் எனும் குலப் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட கம்போடியாவின் பல்லவ மன்னர்கள் மூன்று பேர்.

1. ஜெயவர்மன் (Jayavarman II) (802 – 850)

2. சூரியவர்மன் (Suryavarman II) (1113 – 1150)

3. ஜெயவர்மன் (Jayavarman VII) (1181 – 1218)

ஓர் இடைச் செருகல். மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுத்து கம்போடியாவிற்குப் போய் விட்டதாக நினைக்க வேண்டாம்.

மலாயா தீபகற்பத்தில் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களுக்கும்; கம்போடியாவை ஆட்சி செய்த பல்லவ மன்னர்களுக்கும்; நெருங்கிய தொடர்புகள் உள்ளன. ஆக இந்தப் பல்லவர்கள் யார் என்பதைச் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். அதனால் தான் சுற்றிவர வேண்டி இருக்கிறது.

கம்போடியா அங்கோர் வாட் வரலாற்றுப் புகழ் ஆலயங்களுக்குப் போய் இருக்கிறீர்களா? அங்கே உள்ள சிற்பங்களை உருவாக்கிய மன்னர்களின் உருவச் சிலைகளைப் பார்த்து இருக்கிறீர்களா?

தமிழ் நாட்டில் இருந்து போன ஒரு தமிழ் முகம் மாதிரி தெரியாதே. மங்கோலிய முகம் மாதிரி இருக்கும். வடக்கே சீனாவில் இருந்து வந்த ஒரு சீனரைப் போல இருக்கும். அல்லது தெற்கே தாய்லாந்தில் இருந்து காட்டு வழியாக வந்த ஒரு சயாம்காரரைப் போல இருக்கும். ஏன் தெரியுங்களா? இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.09.2020

சான்றுகள்:

1.  Iyengar, B. K. S. (1966). Light on Yoga. Harper Collins. pp. 276, 330–335. "Dwi Pada Koundinyasana Twenty-two"

2. Vickery, Michael, The Reign of Suryavarman I and Royal Factionalism at Angkor. Journal of Southeast Asian Studies, 16 (1985) 2: 226-244.

3. Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press.

4. https://en.wikipedia.org/wiki/Khmer_Empire#Yasodharapura_%E2%80%93_the_first_city_of_Angkor

5. Higham, C. (2014). Early Mainland Southeast Asia. Bangkok: River Books Co., Ltd.

6. Rooney, Dawn (16 April 2011). Angkor, Cambodia's Wondrous Khmer Temples. www.bookdepository.com. Hong Kong: Odyssey Publications.

7. https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodia





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக