02 செப்டம்பர் 2020

பரமேஸ்வரா பலேம்பாங் நினைவுச் சின்னம்

பரமேஸ்வராவிற்கு இந்தோனேசியாவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமத்திரா, பலேம்பாங் நகரில் அந்தச் சின்னம் உள்ளது. பலருக்கும் புதிய தகவலாக இருக்கலாம். ஆனால் 2004-ஆம் ஆண்டிலேயே அந்தப் பரமேஸ்வரா பலேம்பாங் நினைவுச் சின்னம் (Palembang Parameswara Monument) கட்டப்பட்டு விட்டது.

Palembang Jakabaring Sport City

இந்தோனேசியா வரலாற்றில் பலேம்பாங் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்றுத் தடமாகும். ஸ்ரீ விஜயம் (Srivijaya); மஜபாகித் (Majapahit); சைலேந்திரா (Sailendra); பலேம்பாங் சுல்தானகம் (Palembang Sultanate) போன்ற மாபெரும் பேரரசுகளின்  அந்தக் காலத்துத் தலைநகரம் ஆகும்.

பரமேஸ்வராவின் மூதாதையர்கள் ஸ்ரீ ஜெயனாசா (Sri Jayanasa); தர்மசேது (Dharmasetu); சமரதுங்கா (Samaratungga); பாலபுத்ரா (Balaputra); சூடாமணி வர்மதேவன் (Cudamani Warmadewa); நீல உத்தமன் போன்றவர்கள் கோலோச்சி வாழ்ந்த இடம் பலேம்பாங்.

மாபெரும் மஜபாகித் மாமன்னர்கள் பலர் மகுடம் சூட்டிய இடம். அந்த மாமனிதர்களுக்கும்; அந்த மகத்துவமான பேரரசுகளுக்கும் மதிப்பு மரியாதை செய்யும் வகையில் அந்த நினைவுச் சின்னம் எழுப்பப் பட்டது.

இந்தப் பரமேஸ்வரா நினைவுச் சின்னம் ஜக்கா பாரிங் (Jakabaring) எனும் இடத்தில் அமைந்து உள்ளது. இங்கேதான் இந்தோனேசியாவின் மிக நவீனமான கொலோரா ஸ்ரீவிஜயா விளையாட்டு அரங்கம் (Gelora Sriwijaya Stadium) உள்ளது. பலேம்பாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசியாவில் உள்ள புக்கிட் ஜாலில் விளையாட்டு நகரம் போல அங்கேயும் ஜக்கா பாரிங் விளையாட்டு நகரம் (Jakabaring Sport City) உள்ளது. அந்தக் குட்டி நகரத்தின் நுழைவாயிலில் பரமேஸ்வரா நினைவுச் சின்னம் கம்பீரமாகத் தோற்றம் அளிக்கிறது.

ஐந்து வாழை இலைகள் கொண்ட ஒரு வாழை மரத்தின் வடிவத்தில் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டது. அதற்கு ரீத்தா விடாகோ (Rita Widagdo) எனும் இந்தோனேசியப் புகழ் கட்டிடக் கலைக் கலைஞர் வடிவம் கொடுத்து உள்ளார்.

இந்தோனேசியாவின் அழகிய கட்டிடக் கலை வடிவங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முன்பு 24 மணி நேர நீரூற்று (fountain) நீர்க்கோலம் இருந்தது. இப்போது விஷேசமான நாட்களில் மட்டும் அந்த நீரூற்று செயல்படுகிறது.

பரமேஸ்வரா மறைந்து போனாலும்; அவருடைய புகழ் மறையாமல் நிலைத்து நிற்கிறது. அதற்கு இந்தப் பலேம்பாங் நினைவுச் சின்னம் நல்ல ஒரு சான்று. பரமேஸ்வராவின் புகழ் நிலைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.08.2020

அமைவிடம்: Tugu Parameswara. Jl. Gub H Bastari, 15 Ulu, Kecamatan Seberang Ulu I, Kota Palembang, Sumatera Selatan 30257, Indonesia.

Parameswara Monument is indeed a famous landmark in Palembang. Apart from its majestic architecture, the monument becomes a place for gathering. Many tourists come here to simply relax and enjoy an afternoon. It is free to get close to the monument. One thing, they shouldn’t ruin the park and stain the pool. Most of the visitors love to take some pictures near to the monument. It is because Parameswara has a unique shape. Not to mention it is quite big.

In the past, the monument features a 24-hour fountain attraction. Today, it usually appears in the evening. The fountain is the greatest feature of the monument. It also combines beautiful lights in the evening.

சான்றுகள்:

1. https://www.palembang.indonesia-tourism.com/parameswara.html

2. http://wikimapia.org/15033665/id/Tugu-Parameswara

3. http://dx.doi.org/10.36982/jsdb.v4i3.787



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக