06 செப்டம்பர் 2020

பிரேமதா வர்த்தனி மகாராணியார்

இந்தோனேசியா வரலாற்றில் 16 பேரரசுகள். கி.பி. 130 தொடங்கி கி.பி. 1500 வரையில் 1370 ஆண்டுகளுக்கு ஆளுமை செய்து உள்ளன. இந்து மதமும் பௌத்த மதமும் கலந்த பேரரசுகள். முதலாவது பேரரசு போர்னியோ கலிமந்தான் காடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. சாலகநகரப் பேரரசு. கடைசியாக வந்தது மஜபாகித் பேரரசு.

1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


இந்தப் பேரரசுகளில் ஒரு முக்கியமான பேரரசு சைலேந்திரப் பேரரசு (Shailendra Kingdom). மத்திய ஜாவாவில் கி.பி. 650 தொடங்கி கி.பி. 1025 வரை ஆட்சி செய்த அரசு. இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறிச் சென்ற அரசு. இந்த அரசைச் சார்ந்தவர்கள் இரு பெண்கள். இரு மகாராணியார்கள்.

ஒருவர் சீமா மகாராணியார். கலிங்கா (Kalingga) பேரரசைச் சேர்ந்தவர். இவர் சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்தவர். இவருடைய ஆட்சிக் காலம் கி.பி. 703.

இன்னொருவர் பிரேமதா வர்த்தனி மகாராணியார் (Pramodhawardani). இவருடைய மற்றொரு பெயர் ஸ்ரீ சஞ்சிவனம் (Sri Sanjiwana). ஆட்சிக் காலம் கி.பி. 833 - கி.பி. 856. [#1]

[#1]. Pramodhawardhani was the queen consort of king Rakai Pikatan (838 - 850) of Medang Kingdom in 9th century Central Java. She was the daughter of Sailendran king Samaratungga (812 — 833). Her royal marriage to Pikatan, the prince of Sanjaya dynasty, was believed as the political reconciliation between Buddhist Sailendra with Hindu Sanjaya dynasties.

Source: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Susan Brown Cowing. University of Hawaii Press.

பிரேமதா வர்த்தனி மகாராணியார்; சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்த சமரதுங்காவின் (Samaratungga) மகள். பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.

பிரேமதா வர்த்தனி மகாராணியார் ஆட்சி செய்த போது பக்கத்தில் ஒரு பேரரசு. அதன் பெயர் மேடாங் (Medang Kingdom). அந்தப் பேரரசை ராக்காய் பிகத்தான் (Rakai Pikatan) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார்.

அவரைப் பிரேமதா வர்த்தனி மகாராணியார் மணம் செய்து கொண்டார். அரசியல் சமரசத்திற்காக இந்தத் திருமணம் நடைபெற்றது.

ராக்காய் பிகத்தான் என்பவர் சஞ்சாயா (Sanjaya dynasty) வம்சாவழியைச் சேர்ந்தவர். இந்து மதத்தவர். பிரேமதா வர்த்தனி என்பவர் சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்தவர். பௌத்த மதத்தவர்.

பிரேமதா வர்த்தனி இரு மதங்களுக்கு இடையில் சைலேந்திரா பேரரசை ஆட்சி செய்து வந்தார். அது இரு மதங்கள் சமரசமாக ஆட்சி செய்த காலம்.

பிரேமதா வர்த்தனி மகாராணியார் தான் உலகப் புகழ் போரோபுதூர் (Borobudur) ஆலயத்தைக் கட்டி முடித்தவர். இவருக்கு முன்னரே கட்டுமான வேலைகள் தொடங்கப் பட்டாலும் இவருடைய காலத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.

மனைவி பிரேமதா வர்த்தனி கட்டிய போரோபுதூர் ஆலயத்திற்குகுப் போட்டியாகக் கணவர் ராக்காய் பிகத்தான் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார். அதுதான் உலகப் புகழ் பிரம்பனான் (Prambanan) கோயில். [#2]

[#2]. Rakai Pikatan was a king of the Sanjaya dynasty Medang Kingdom in Central Java who built the Prambanan temple, dedicated to Shiva, which was completed in 856 AD.

Source: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Susan Brown Cowing. University of Hawaii Press.

கரங்கா தெங்கா கல்வெட்டு (Karangtengah); திரி தெபுசன் கல்வெட்டு (Tri Tepusan inscription); மற்றும் ருகாம் கல்வெட்டு (Rukam inscription) போன்ற பல கல்வெட்டுகளில் பிரேமதா வர்த்தனி  பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. [#3].

[#3]. Her name was mentioned in several inscriptions, such as Karangtengah inscription, Tri Tepusan inscription and Rukam inscription.

Source: Drs. R. Soekmono, (1988). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: p. 46.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.09.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக