08 செப்டம்பர் 2020

சீமா சத்யா கலிங்கா மகாராணியார்

இவரின் பட்டத்துப் பெயர் ஸ்ரீ மகாராணி மகிசா சூரமருதினி சத்யா புதிகேசுவரா (Sri Maharani Mahissa Suramardini Satya Putikeswara). மிக நீண்ட பெயர். சுருக்கமாக சீமா சத்யா (Queen Shima Satya).

பெயரைப் போலவே இவருடைய ஆட்சியிலும் நீண்ட வரலாறு உள்ளது. சீமா என்றால் ஜாவானிய மொழியில் (Javanese Simo means lion) சிங்கம்.

(Shima was the queen regnant of the 7th century Kalingga kingdom on the northern coast of Central Java circa 674 CE)

கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கத்துப் பேரரசின் முதலாவது பெண் தளபதி; முதலாவது பேரரசியார். போர் முனையில் கலிங்கத்துப் படைகளை வழி நடத்தியவர். 21 ஆண்டுகள் ஆட்சி.

ஆயிரம் ஆயிரம் ஆண்களைக் கொண்ட குதிரைப் படைக்கும் காலாட் படைக்கும் தளபதியாக முன் நின்று வாள் ஏந்தியவர். வீரப் பெண்மணிகள் ஜான்சி ராணி; ருத்ரமா தேவி; வேலுநாச்சியார்; அப்பக்கா சவதா; சென்னம்மா; ராணி மங்கம்மாள்; தாரா பாய் போன்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் மகாராணியார் சீமா.

இந்தோனேசிய வரலாற்றில் உச்சம் பார்த்த பேரரசு ஸ்ரீ விஜய பேரரசு. அந்தப் பேரரசில் சேவை செய்த ஒரு பண்டிதரின் மகள் தான் மகாராணியார் சீமா.

கி.பி 611-ஆம் ஆண்டு முசி பன்யுவாசின் (Musi Banyuasin) எனும் இடத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இருக்கிறார்.  

இவர் கலிங்கத்துப் பேரரசின் இளவரசர் கார்த்திகேய சிங்கா (Kartikeya Singa) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேய சிங்காவின் தந்தையார் கலிங்கப் பேரரசின் (Kalingga Kingdom) மாமன்னர் ஆகும்.

கி.பி 648-ஆம் ஆண்டில் மாமன்னர் கார்த்திகேய சிங்காவின் தந்தையார் இறந்தார். கார்த்திகேய சிங்கா அரியணை ஏறினார்.

கலிங்கத்துப் பேரரசு இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்தது. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. [#1]

[#1]. https://www.viva.co.id/berita/nasional/618022-melacak-situs-kerajaan-kalingga-yang-terlupakan

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை 200 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்து இருக்கிறது. சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைத்து இருக்கிறார்கள். [#2]

[#2]. Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52

கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியாவின் கணவர் கார்த்திகேய சிங்கா இறந்ததும், கலிங்கத்துப் பேரரரசின் தலைமைப் பதவியை சீமா சத்தியா ஏற்றுக் கொண்டார்.

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் ஆணாதிக்கத்தின் அழுத்தங்களால் மறைக்கப்பட்டு இருக்கலாம்.

சீமா மகாராணி ஒரு நேர்மையான, நியாயமான, கண்டிப்பான ராணியாக வாழ்ந்து இருக்கிறார். நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.[#3]

[#3]. She introduced a law against thievery to encourage her people to be honest and uphold truth.

"Melacak Situs Kerajaan Kalingga yang Terlupakan". Viva.co.id. 24 April 2015: Dengan ditemukannya benda purbakala bersejarah tersebut terbukti bahwa ada kerajaan Kalingga yang diperintah oleh Ratu Shim. Dugaan  kuat lokasinya di daerah Keling Jepara, bukan daerah Keling Malaya.

Kerajaan Kalingga dikenal juga dengan nama kerajaan Ho-ling oleh orang-orang Tionghoa. Menurut catatan bangsa Tionghoa, Ho-ling dipercaya muncul ketika terjadi ekspansi besar oleh dinasti Syailendra.


மிகவும் புத்திசாலித்தனமான, நீதியான ராணியார். இவரின் ஆட்சியின் போது, குடிமக்கள் சட்டத்தை மிகவும் மதித்தார்கள். தரையில் விழுந்த ஒரு ஒரு மாம்பழத்தைக் கூட உரிமையாளர் அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டார்களாம். அப்படி கண்டிப்பாக ஆட்சி செய்து இருக்கிறார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020

சான்றுகள்:

1. https://timesof.befren.com/2020/08/history-of-queen-shima-in-indonesia.html

2. https://en.wikipedia.org/wiki/Shima_(queen)

3. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக