09 செப்டம்பர் 2020

தர்மநகரா பல்கலைக்கழகம் இந்தோனேசியா

இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசுகளில் மிக முக்கியமானது தர்மநகரா பேரரசு (Tarumanagara Kingdom). 5-ஆம் நூற்றாண்டில் ஜாவா தீவில் ஜகார்த்தா நகரை மையமாகக் கொண்ட அரசு. இந்த அரசை தோற்றுவித்தவர் பூர்ணவர்மன் (Purnawarman). ஆட்சிக்காலம் கி.பி. 358 - 669. இந்தோனேசியாவில் தோன்றிய மூன்றாவது பேரரசு.

இந்தப் பேரரசின் நினைவாக இந்தோனேசியாவில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் தர்மநகரா பல்கலைக்கழகம் (Tarumanagara University - Universitas Tarumanagara (UNTAR). 2017-ஆம் ஆண்டு மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.

In 2017 UNTAR received an accreditation A (Excellent) from the Government's National Accreditation Board (BAN-PT).

தர்மநகரா பல்கலைக்கழகம் (Tarumanagara University), இந்தோனேசியாவில் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 2014-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 14,785 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகிறார்கள்.

தர்மநகரா பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களைக் கொண்டு உள்ளது. வளாகம் I (பிரதான வளாகம்); வளாகம் II; இவை இரண்டும் மேற்கு ஜகார்த்தா பெருநகரப் பகுதியில் உள்ளது. மூன்றாம் வளாகம் தெற்கு ஜகார்த்தாவில் உள்ளது.

தற்போது கட்டுமானத்தில் வளாகம் IV உள்ளது. 130 ஹெக்டேர் பரப்பளவு. இதற்காக ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு நகரத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் தர்மநகரா நகரம் (Tarumanagara City).

ஜகார்த்தாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், கரவாச்சி எனும் இடத்தில் அந்தச் செயற்கை நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தர்மநகரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பூர்ண ஈரவான் (Prof. Dr. Ir. Agustinus Purna Irawan).

There are eight faculties and a post-graduate program in the university.

Faculty of Economics
Faculty of Law
Faculty of Engineering
Faculty of Medicine
Faculty of Psychology
Faculty of Arts and Design
Faculty of Information Technology
Faculty of Communications Science

தர்மநகரா பேரரசின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஜகார்த்தா மாநகரை மையமாகக் கொண்டது. அதனால் அதே இடத்தில் இந்தப் பல்கலைகழகத்தையும் கட்டி இருக்கிறார்கள்.

இனவாதமும் மதவாதமும் பிடிவாதமாக இருந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடும். இதை ஒவ்வோர் அரசாங்கமும் தெரிந்து கொள்ள வேண்டும். தனிநபர் பெருமைக்காகவும்; தனிநபர் குடும்பச் சுகத்திற்காகவும் நாட்டு ஒற்றுமையைச் சீர்குலைப்பதால் ஒரு நாடு முன்னேற்றம் அடையாது.

இந்தோனேசியர்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கிறார்கள். அந்த  வரலாற்றில் உள்ள இந்திய ஆளுமைகளைப் போற்றுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். வாழ்க தர்மநகரா பேரரசு. வளர்க தர்மநகரா பல்கலைக்கழகம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.09.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Tarumanagara_University

2. http://untar.ac.id/pages/index

3. http://untar.ac.id/pages/sambutanrektor



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக