12 பிப்ரவரி 2021

உலகின் மூத்தக் குடிமக்களின் புதிய வரலாறு

தமிழ் மலர் - 11.02.2021

அண்மையில் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் என்று சொல்லப்படும் மக்களைப் பற்றிய காணொலி. அதில் சகாரா சுலைமான் எனும் அகழ்வாய்வு ஆராய்ச்சி வல்லுநர் கருத்துரை வழங்குகிறார். அதன் தலைப்பு உலகின் இரண்டாவது பழமையான இனம். (Bangsa Kedua Tertua Dunia).

ஆப்பிரிக்க இனக் குழுவுக்கு அடுத்த படியாக; உலகின் இரண்டாவது பழமையான மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பை (Mitochondrial DNA) இரண்டாவது மூத்தக் குடிமக்கள் இனக்குழு கொண்டுள்ளது என்று கூறுகிறார்.

அந்த மூத்தக் குடிமக்களின் மரபணுக்கள் (DNA); (Mitochondrial DNA) அல்லது மரபியல் அணுக் கூறுகள் உலகத்திலேயே இரண்டாவது பழைமை வாய்ந்தது என்றும் தம் கருத்தை முன்வைக்கிறார்.

The ethnic group has the second oldest mitochondrial DNA group (mtDNA) in the world after the African ethnic group.

உலகின் முதல் இனம் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் 150,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார். அதே வேளையில் உலகின் இரண்டாவது இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சுந்தாலாந்து (Sundaland) தீவுக் கூட்டத்தில் தோன்றியதாகவும் சொல்கிறார்.

About 60,000 to 75,000 years ago, there was a migration of people from Africa to the Sundanese platform, now known as Southeast Asia.

Kira-kira 60,000 ke 75,000 tahun lalu, berlaku penghijrahan orang rendah dari Afrika ke pelantar Sunda, kini dikenali Asia Tenggara.

சுந்தாலாந்து என்பது தென்கிழக்கு ஆசியாவின் ஒரு புவியியல் பகுதி. 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டங்கள் குறைவாக இருந்த காலங்களில் அது ஒரு பெரிய நிலப்பரப்பாக இருந்தது. உலகம் பனிக்காலத்தில் இருந்து மீட்சி பெற்ற காலத்தில் உருவானது.

இந்தச் சுந்தாலாந்து நிலப்பரப்பில் மலாய் தீபகற்பம்; போர்னியோ; ஜாவா; சுமத்திரா போன்ற பெரிய தீவுகளையும்; அவற்றைச் சுற்றியுள்ள சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. சரி.

உலகின் இரண்டாவது இனத்தின் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பு (Mitochondrial DNA) 63,000 ஆண்டுகள் பழமையானது என்றும், சீனர்களின் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பு 43,000 ஆண்டுகள் பழமையானயது என்றும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன. அவர் கூறுகிறார்.

Zaharah berkata bukti sains juga menunjukkan Melayu memiliki mtDNA berusia 63,000 tahun, manakala etnik Cina hanya 43,000 tahun.

Source: https://www.projekmm.com/news/berita/2018/08/02/sejarahwan-bukan-pendatang-baka-melayu-kedua-tertua-di-dunia/1658567

கிரேக்க மக்கள் வியட்நாம் சம்பா பகுதியில் இருந்து தோன்றினார்கள். ஆனால் அவர்கள் மலாய்க்காரர்கள் அல்ல.

“Asal-usul orang Greek juga datang dari Champa tetapi mereka tidaklah menjadi Melayu pula,” jelasnya lagi.

செமாங் மற்றும் செனாய் மக்கள் வியட்நாம், கம்போடியா நாடுகளில் உள்ள சம்பா பகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்கிறார்.

Semang dan Senoi, berhijrah dari Champa yang kini terletak di bahagian Vietnam dan Kemboja.

மலாய் மொழி எனும் ரெஜாங் மொழி சமஸ்கிருத மொழியின் கிளை மொழி. அந்த மொழி சுந்தாலாந்தைப் பூர்வீகமாகக் கொண்டது. சமஸ்கிருத மொழி இந்திய துணைக் கண்டத்திற்கு கொண்டு போகப் படுவதற்கு முன்பு அந்த மொழி சுந்தாலாந்தில் தான் முதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்.

Beliau juga menyatakan bahasa Melayu, atau Rejang, satu cabang Sanskrit yang berasal dari pelantar Sunda sebelum dibawa ke benua India.

"இந்தியர்கள் பலர் சமஸ்கிருதத்தைப் படிப்பதால் அந்த மொழி இந்தியாவில் இருந்து வந்தது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் மலாய் மொழியில் இருந்துதான் சமஸ்கிருத மொழிக்குள் பல சொற்கள் கடன் வாங்கப்பட்டு உள்ளன.

“Kerana warga India banyak belajar Sanskrit, ramai terfikir bahasa itu berasal dari sana dan Melayu meminjam banyak kata Sanskrit.

"எதிர் செயல்முறை நடந்து இருக்கிறது. சமஸ்கிருதம் சுந்தாலாந்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தது," என்று அவர் கூறினார்.

“Saya percaya proses sebaliknya yang berlaku. Sanskrit masuk ke pelantar Sunda dulu sebelum ia tersebar ke India,” katanya.

இவருடைய காணொலிப் பதிவின் முதல் நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள் அவரின் கருத்துகளைப் பற்றிய முரண்பாடுகளை மட்டுமே முன்வைக்கிறேன். அடுத்த கட்டுரையில் அடுத்தடுத்த முரண்பாடுகளும் அதற்கான சரியான விளக்கங்களும் வழங்கப்படும்.

இந்தோனேசியாவில் 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெராப்பி எரிமலை வெடித்தது. அந்த வெடிப்பின் விளைவினால் எரிமலையின் உச்சியில் தோபா ஏரி உண்டானது. இந்த எரிமலை வெடிப்பிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் குறிப்பிடும் அந்த இனம் தீபகற்ப மலேசியாவில் தோன்றி விட்டதாகச் சொல்கிறார்.

இதற்கு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஓபன்ஹெய்மர் (Stephen Oppenheimer) எழுதிய Out of Sundaland எனும் நூலைச் சான்று பகிர்கிறார். இந்த நூலின் மற்றொரு பெயர் கிழக்கில் ஓர் ஏடன் (Eden in the East: the Drowned Continent of Southeast Asia (Phoenix paperback, London 1999 (1998).

அவருடைய காணொலிப் பதிவில் இந்தியர் இனம், தமிழர் இனம், சீனர் இனம், ஆங்கிலேயர் இனம், ஆப்பிரிக்கர் இனம், ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் இனம் எல்லாமே அவர்களுக்குப் பின்னர்; அந்த இனத்திற்குப் பின்னர் வந்த இனங்கள் என்று மறைமுகமாகச் சொல்லப் படுகிறது.

அந்தக் காணொலியின் கருத்துகளுக்கு எதிர்வாதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அதில் காணப்படும் கருத்துப் பிறழ்வுகளைப் பற்றி சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன். ஒருவர் தம்முடைய கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அந்தக் கருத்துகளில் தவறு இருக்கக் கூடாது. தவறு இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டியது நம் பொறுப்பு. சரி.

“Kajian Pertubuhan Genom Manusia (Hugo) yang diterbitkan pada 2013 menunjukkan moyang Melayu, yakni Semang dan Senoi, berhijrah dari Champa yang kini terletak di bahagian Vietnam dan Kemboja.

“Nenek moyang mereka asalnya suku kaum Afrika yang pertama berhijrah ke kawasan darat sekitar Arab Saudi dan Timur Tengah.

“Suku Semang dan Senoi berkembang menjadi suku-suku kaum lain termasuk orang peribumi seperti Orang Asli, Iban, Dayak dan banyak lagi.

“Malah, nenek moyang dekat suku Jakun. Jadi ahli politik, tanpa mengira parti, yang mendakwa Melayu itu pendatang, kenyataan itu tidak betul,” katanya.

1. உலகின் முதல் இனம் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் 150,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார்.

இது தவறான கருத்து. உலகின் முதல் இனம் ஹோமோ செப்பியன்ஸ் (Homo Sapiens)  ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டின் ரிப்ட் பள்ளத்தாக்கில் (Kenya Rift Valley) 300,000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது.

(Chorowicz, Jean (10 November 2005). "The East African Rift System". Journal of African Earth Sciences. 43 (1–3): 379–410.)

2. ஜிபூட்டி (Djibouti) நாட்டில் கோபாட் (Gobaad) எனும் கிராமத்தில் 100,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனித எலும்புக் கூடுகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள். அவர் சொல்வதைப் போல 150,000 ஆயிரம் ஆண்டுகள் அல்ல.
 
(Walter Raunig, Steffen Wenig (2005). Afrikas Horn. Otto Harrassowitz Verlag. p. 439.)

3. உலகின் இரண்டாவது இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார்.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தார்கள்.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

ஆக பேராக் மனிதனுக்கு முன்னால் 61,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த இனம் வாழ்ந்ததாகச் சொன்னால் மனித எலும்புக்கூடுகள் எங்கே? மண்பானைகள் எங்கே? வேட்டையாடப் பயன்படுத்திய உலோகப் பொருட்கள் எங்கே? குகை ஓவியங்கள் எங்கே?

கோபம் வரவில்லை. வேதனை. ஏன் என்றால் கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு எனும் சொல் தொடர் நினைவிற்கு வந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் இந்த நாட்டில் முதன்முதலில் குடிபுகுந்த பூர்வக் குடியினர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணுக்கள் (DNA) எல்லாம் ஒன்றுதான் என்று ஒரு முஸ்லிம் பேராசிரியர் தெரிவித்து உள்ளார். ஆக ஒரு படித்த கல்விமானே அப்படிச் சொல்லும் போது நாம் சற்று சிந்திக்க வேண்டியதாகவும் உள்ளது.

உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் எனும் காணொலியில் கருத்துப் பிறழ்வுகளுக்கான விளக்கங்கள் நாளையும் தொடரும்.

இன்று பல்லவர்கள் தமிழர்களா என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

இந்தோனேசியாவை பல்லவர்கள் ஆட்சி செய்யும் போது அவர்களுக்குள் பற்பல தகராறுகள். பலர் தீபகற்ப மலேசியாவுக்கு வந்து உள்ளார்கள். கீழ்க்காணும் அரசுகள் அனைத்தும் பல்லவர் அரசுகள். அதாவது தமிழர்களின் அரசுகள். ஏற்கனவே பல்லவர்கள் என்பவர்கள் தமிழர்கள் என்று சொல்லி இருக்கிறேன். இந்தோனேசியாவை கீழ்க்காணும் அரசுகள் ஆட்சி செய்யும் போது அங்கே இருந்து பல்லவத் தமிழர்கள் தீபகற்ப மலேசியாவுக்குள் குடிபெயர்ந்து உள்ளார்கள்.

1. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா - கி.பி. 358 - 669

2. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 500 – 600
 
3. ஜாம்பி பேரரசு - சுமத்திரா - கி.பி. 600

4. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா - கி.பி. 650 - 1377
 
5. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 650 - 1025

6. காலோ பேரரசு - மேற்கு ஜாவா - கி.பி. 669 – 1482

7. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 669 – 1579

8. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா - கி.பி. 752 – 1006

9. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா - கி.பி. 1006 – 1045

இது 1500 ஆண்டு இடைவெளி. அவர்கள் வரும் போது ஜாவா சுமத்திரா பூர்வீக மக்களையும் அழைத்து வந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள் உறவுகள் ஏற்பட்டு மலாயாவில் ஒரு புதிய சமுதாயமே உருவாகி உள்ளது.

அவர்களில் இருந்து வந்தவர்கள் இன்றும் இந்த மலைநாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உள்ளூர் மலாய்ச் சமூகத்தவருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்தத் தாக்கத்தினால் தான் மலாய்ச் சமூகத்தினர் சோறு சாப்பிடும் போது வலது கரத்தைப் பயன்படுத்துகிறார்கள். சரி.

தமிழ்நாட்டில் இருந்து பற்பல இனக் குழுக்கள் பற்பல காலக் கட்டங்களில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து உள்ளன. அப்படி புலம் பெயர்ந்த இனக் குழுக்களில் பல்லவர்கள் முக்கியமான ஒரு குழுவினர் ஆகும். அவர்களின் புலம் பெயர்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து உள்ளது.

பல்லவர்கள் ஜாவா; சுமத்திரா; மலாயா; போர்னியோ; பிலிப்பைன்ஸ்; தாய்லாந்து; மியன்மார், கம்போடியா; வியட்நாம்; கொரியா; லாவோஸ் போன்ற இடங்களில் பற்பல அரசாட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய 100-க்கும் குறைவு இல்லாத சிற்றரசுகள் பேரரசுகள்.

வணிக நோக்கத்தோடு போனவர்கள் தான். ’வணிகம் செய்வோம் வாரீர்’ என்று சொல்லக் கேள்வி. அந்த மாதிரி இவர்களும் ’வாரிசுகளை உண்டாக்குவோம் வாரீர்’ என்று சொல்லி போன இடங்களில் எல்லாம் வாரிசுகளை உருவாக்கி விட்டுச் சென்று விட்டார்கள்.  

அந்த வாரிசுகளைப் பற்றியும் சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே ஒருவருக்கு ஒருவர் அடித்துப் பிடித்து ஆங்காங்கே சின்ன சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். பெரிய பெரிய அட்டகாசம் அமர்க்களம் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். கடைசியில் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயே சேர்ந்து விட்டார்கள்.

தொட்டுக்க துடைச்சிக்க ஏதாவது வச்சிட்டு போய் இருந்தால் பரவாயில்லை. இப்போது அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்து இருக்காது. நேற்று வந்த வந்தேறிகள் எல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள்.

இதைத்தான் காலத்தின் கோலம் என்று சொல்வார்களோ. அல்லது காலத்தின் அலங்கோலம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்களோ ஊர் பொல்லாப்பு வேண்டாங்க. நம்ப விசயத்திற்கு வருவோம்.

குத்து மதிப்பாகச் சொன்னால் ஒட்டுமொத்த இந்தோனேசியா; இந்தோசீனா இரு துணைக் கண்டங்களும் பல்லவர்களின் கைகளில் இருந்து உள்ளன. வரலாற்றுப் பாரம்பரிய வழக்கத்தில் சொன்னால் தமிழர்களின் கைகளில் இருந்து உள்ளன.

இருந்தாலும் என்ன. அவர்கள் பிடித்ததே முயல். அந்த முயலுக்கு மூனே முக்கால் கால்கள். அந்தப் பிடிவாதத்தில் முரட்டுவாதம் செய்தார்கள். இருந்தவை எல்லாம் அடிபட்டுப் போய் விட்டன.

கி.மு. 290-ஆம் ஆண்டு தொடங்கி 15-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இந்தியக் கலாசாரச் செல்வாக்குகள் மேலோங்கி இருந்தன. உள்ளூர் அரசியல் கலாசாரங்களில் அழகாய் இணைந்து உச்சம் பார்த்தன.

இந்திய துணைக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த சின்னச் சின்ன அரசுகள் தென்கிழக்கு ஆசிய அரசுகளுடன் வர்த்தகம், கலாசாரம், அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அதுவே இது தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மயமாக்கலுக்கு வழிவகுத்துக் கொடுத்தன (Indianisation within Indosphere) என்றும் சொல்லலாம்.

இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மற்ற மற்ற இந்து அரசுகளைப் போல் அல்லாமல்; இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த பல்லவ ஆளுமைகள் கடலைக் கடப்பதற்குக் கலாச்சார கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.

தவிர இராஜேந்திர சோழரின் தென்கிழக்கு ஆசியா படையெடுப்பு சோழப் பேரரசின் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்று உள்ளது. இதுவே தென்கிழக்கு ஆசியாவிற்கு கடல் வழிகள் வழியாக அதிகமான பரிமாற்றங்களையும் வழிவகுத்துக் கொடுத்தது.

தென்கிழக்கு ஆசியாவின் பூர்வீக மக்கள், கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தெற்கு சீனா பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் பற்றிய கூடுதல் விளக்கங்களை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.02.2021



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக