07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 37

(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை நடத்தி வருகிறேன். அந்தப் பகுதியின் பழைய கேள்வி பதில்களைக் கட்டம் கட்டமாக இந்த வலைப்பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும்.பயன் அடைய வேண்டும்.நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். இந்த வலைப்பூவைப் படித்த கோவையைச் சேர்ந்த துரை.வேலுமணி, குவாயித்திலிருந்து விஷ்ணு என்பவர்கள் கேள்வி கேட்டார்கள்.மின்னஞ்சல் வழி பதில் வருகிறது.)

ஜேம்ஸ் வசந்தன் jamesvasanthan@gmail.com

கே: நான் Acer
மடிக்கணினியைப் பயன் படுத்துகிறேன். அதனுடைய திரையில் அழுக்கு படிகிறது. எப்படி சுத்தம் செய்வது. ஷாம்பு போட்டு துடைக்கலாம் என்று என் நண்பர் சொல்கிறார்?

ப:
மனிதர்கள் குளிக்கத் தலைக்குப் ஷாம்பு போடுகிறார்கள். அதைப் போட்டு கணினியைக் கழுவலாம் என்று உங்கள் நண்பர் சொல்கிறார். கொஞ்சம் வித்தியாசமான புரட்சிகரமான சிந்தனை. முடிந்தால் துணி துவைக்கிற மிஷ’னில் போட்டு துவைத்து எடுங்கள். வெளியே இருக்கும் கொடிக் கம்பியில் காயப் போடுங்கள் என்று சொன்னாலும் சொல்வார். அப்படியே நீங்கள் செய்தாலும் செய்வீர்.

கணினியின் LED திரை மிக மிக நுட்பமானது. அதைச் சுத்தம் செய்ய சவர்க்காரம் ஷாம்பு எல்லாம் பயன் படுத்தக் கூடாது. வெது வெதுப்பான நீர் போதும். லேசான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரைப் பயன் படுத்தக் கூடாது. தினசரி செய்தாலும் நல்லதுதான்.

கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த ஒரு நுட்பமான பொருள். பாவம் அது. கஞ்சிக் குடிக்க காசு கேட்பதும் இல்லை. வெளியே போய் வியர்வை சிந்தி வெட்டி முறிக்கிற வேலை செய்வதும் இல்லை. சரியா. அதனால் அதற்குச் சவர்க்காரம் போட்டு குளிப்பாட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண சுடுநீரே போதும்.


கிருஷ்ணமூர்த்தி krishnacsb@gmail.com
கே: நம்முடைய 'சிடி' யில் கீறல்கள் விழுந்து பழுதடைந்து போனால் அதிலுள்ள தகவல்களை மீட்க முடியுமா?

ப:
முடியும். CDDVD Recovery, Badcopypro, CD Check  போன்ற நிரலிகள் உள்ளன. 'சிடி' களில் கீறல் விழுந்தால் அதைப் பயன் படுத்த முடியாதே என்ற அச்சம் வேண்டாம். நான் பயன் படுத்தியதில் ஓரளவுக்குத் திருப்தி. எல்லாத் தகவல்களையும் மீட்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ரொம்ப மோசமாகக் கீறல்கள் இருந்தால் கொஞ்சம் சிரமம் தான். கீழே காணும் இணையத் தளங்களுக்குப் போய் அந்த நிரலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கெட்டுப் போன சிடி களிலிருந்து உங்களுடைய தகவல்பொக்கிஷங்களை மீட்டுக் கொள்ளுங்கள்.
 http://diskinternals.com/cddvdrecoverry/
 www.jusoft.com/badcopy/ udfrecover.asp
 www.softwarepatch.com/software/cdrecovery.html


எஸ்.கிருஷ்ணன்  krishnan.singai@gmail.com
கே: Tarzan கணினி விளையாட்டு கிடைக்குமா. நம்முடைய குழந்தைகள் ஆசைப் படுகிறார்கள். ஓர் இடத்தைச் சொல்லுங்கள்?

ப: பிள்ளைகளுக்கு டார்சன் விளையாட்டுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இடத்தைச் சொல்கிறேன். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அருமையான விளையாட்டு. முன்பு 30 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க வேண்டும். இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. மலேசியாவிலிருந்து ஒரே சமயத்தில் இருபது பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். இடம் கிடைக்கவில்லை என்றால் ஒரு மணி நேரம் பொறுத்து மறுபடி முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாகக் கிடைக்கும். பதிவிறக்கம் செய்தவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

http://rapidshare.com/files/229652768/Pc_Games-Tarzan_Game.zip  அல்லது
http://files-express.com/download.php?file=Tarazan.rar


சுகுமாறன் நாயர்   ncsukumaran@yahoo.com
கே: என்னுடைய கைப்பேசியில் சில Ringtone களைப் போட்டு இருக்கிறேன். சாதாரண எம்.பி3 பாடல்களை ரிங் டோன்களாக மாற்ற விரும்புகிறேன். அதற்குப் பொருத்தமான இலவசமான நிரலி கிடைக்குமா?

ப:
MP3 பாடல்களைக் கைப்பேசியில் அழைப்பு மணிகளாக மாற்ற நிரலிகள் உள்ளன. எல்லா இளைஞர்களூக்கும் உள்ள ஆசைதான் உங்களுக்கும்.
http://rapidshare.com/files/47456944/MAGIX.Ringtone.Maker.2.0.1.3.Silver.rar
அல்லது
http://rs296.rapidshare.com/files/318151880/Ace.Mobile.Software.Ringtones.Maker.v1.2.0.0.rar
எனும் இடத்தில் கிடைக்கும். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வாசகர்கள் பல விதமான கணினிப் பிரச்னைகளைக் கொண்டு வருகிறார்கள். பலவகையான இலவச நிரலிகள், உதவிகளைக் கேட்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் வரும். ஒரு வாரத்தில் கணினி தொடர்பாக நாற்பது ஐம்பது அவசர அழைப்புகள் வரும். சந்தோஷம். இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல ஆசைப் படுகிறேன்.

உதவி பெற்றவர்கள் நன்றி சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். உதவி கிடைத்த பிறகு நீ யாரோ நான் யாரோ எனும் போக்கை மாற்ற வேண்டும். மனித நேயம் மறையவில்லை என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக