02 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு 1867

1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள். இதுவும் ஓர் அபூர்வமான புகைப்படம். 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டார்கள். சொல்லி இருக்கிறேன். பாய்மரக் கப்பல்களில் தான் வந்து இருக்கிறார்கள்.

நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.


கிறிஸ்தவப் பரப்புரைகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தப் பரப்புரையை பிரான்சிஸ் ஹப் (Father Francois Habb) என்பவர் செய்து உள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து 1857-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்தார். 33 ஆண்டுகள் சேவை செய்தார். இவர் திறந்த வெளியில் பரப்புரை செய்வதைக் காணலாம்.

இந்தப் பரப்புரை நிகழ்ச்சி இல்லை என்றால் இந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்து இருக்காது. ஆக மதங்களுக்கு அப்பால்பட்டு ஒரு வரலாற்றுப் பதிவாகப் பார்ப்போம்.

(View of Rev. Habb conducting an open-air sermon to a large group of Indian settlers in Pinang, Malaysia.Father Francois Hab was a French MEP priest based at St Francis Xavier Church, Penang from 1857 to 1879. He died in Penang in 1890.)

இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). இந்தப் புகைப்படம் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது.

This Photograph is part of the Archaeological Survey of India Collection and was exhibited in the 1867 Paris Exhibition. Kristen Feilberg Born in Denmark, on 26 August 1839, is best known for his images captured in Sumatra, Singapore, and Penang.

After giving up his dream of becoming a painter, Feilberg followed his sister to Singapore in 1862 where he worked partly as a tobacco agent and partly as a photographer. In 1867, he set up his own studio in Penang and, the same year, exhibited 15 views of Penang and Ceylon at the Paris World Exposition.

The earliest photographs of eastern Sumatra were taken by Feilberg in 1869. Considered to be of excellent quality, they include integrated group portraits of workers on tobacco plantations. They are presented in three albums entitled "Views" at the Royal Tropical Institute.

இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாக அமையும்.

அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைச் சமயத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்காமல் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகப் பார்க்க வேண்டும். அதுதான் அறிவார்ந்த சிந்தனை. அறிவார்ந்த பார்வை.

இந்தப் படத்தில் உள்ள தமிழர்கள் மதம் மாறினார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு இது ஓர் அபூர்வமான படம் கிடைத்து இருக்கிறதே. அதற்காக அந்தப் பாதிரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். 1844-ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள்.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு மரியாதை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2020

சான்றுகள்:

1. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229

2. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

3. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

4. http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/t/019pho001000s42u04336000.html

5. https://www.unitedphotopressworld.org/2012/08/remembering-danish-photographer-kristen.html?m=0
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக