20 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 61

(20.6.2010 ஞாயிற்றுக்கிழமை மலேசியா நண்பன் நாளிதழில் வெளியான கேள்வி பதில் அங்கம்)
கணினியும் நீங்களும் - பகுதி 61
ராஜ் சுதன்  
கே: Facebookல் ஒரு நச்சு அழிவி வேகமாகப் பரவி வருகிறதாம். அதை எப்படி தடுப்பது சார்?

ப:
Facebook என்பது ஒரு சமூகச் சேவைத் தளம். இணையத்தில் உலா வரும் கோடிக் கணக்கான பேர் அந்தச் சேவையில் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அதில் பல இலட்சம் பேர் Like எனும் நச்சு அழிவி Virus ஆல் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாசகங்களைப் படியுங்கள்.


'ஒரு பெண் உங்களுக்காக காத்து இருக்கிறாள்';
'ஒருவன் தன்னைத் தானே 8 வருடங்கள் படம் பிடித்துக் கொள்கிறான்';
'ஒரு மாணவி குட்டைப் பாவாடை அணிந்ததால் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டாள்';
'இந்தப் பெண் வாழைப் பழத்தைச் சாப்பிடும் விதமே அலாதியானது'


எனும் ஆசையைத் தூண்டும் அறிவிப்புச் செய்திகள் வரும்.

தயவு செய்து அவற்றைச் சொடுக்க வேண்டாம். Click Here to Continue என்பதைச் சொடுக்கினால் போதும். அவ்வளவுதான். நாசம் செய்யும் நச்சு அழிவிகளுக்கு வெண் சாமரம் வீசியது போல ஆகி விடும். கரும்புக் கொல்லையில் காட்டு மாடுகள் நுழைந்த மாதிரி உங்கள் கணக்கு நொறுங்கிப் போகும். அந்த மாதிரியான வாசகங்கள் வந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா விட்டு விடுங்கள். ஆபத்து வராது.

இரா.செல்வகணேஷ், லோபாக், சிரம்பான்

கே: பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் கைப்பேசி நிறுவனங்களுக்கு 33 மில்லியன் ரிங்கிட்டை பரிசுகளாக வழங்க முன் வந்து இருக்கிறது. பரிசு விவரங்களைத் தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

ப:
உலகக் கணினி வித்துவான் பில் கேட்ஸ். இவர் சம்பாதித்த கோடிக் கோடியான பணத்தில் ஒரு பகுதியை ஓர் அற நிறுவனத்திற்கு எழுதி வைத்தார். அந்த அற நிறுவனத்தின் பெயர் பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம். பல கோடி டாலர்கள் ஆப்ரிக்க நாடுகளில் ஏயிட்ஸ் நோயைக் கட்டுப் படுத்த வழங்கப் பட்டுள்ளன. இன்னும் பல வகைகளில் உதவிகள் செய்யப் பட்டும் உள்ளன.

சரி. உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹாயித்தி தீவை ஒரு பயங்கரமான நில நடுக்கம் உலுக்கியது. அதனால் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. மக்களுக்கு சரியான வகையில் உதவிகள் போய்ச் சேரவில்லை. இதைக் கவனித்த பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தது.

அங்குள்ள மக்கள் தங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் கிடைக்கவும் செய்ய ஒரு திட்டத்தை யாராவது உருவாக்க வேண்டும். அந்த மாதிரியான மென்பொருள் திட்டத்தை யார் முதலில் உருவாக்கிக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சன்மானமாக 80 இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இரண்டாவதாகச் செய்து கொடுப்பவருக்கு 50 இலட்சம். மூன்றாவதாக வருபவருக்கு 20 இலட்சம் கொடுக்கப் படும். சரியா.

சில உலக நிறுவனங்கள் தீவிரம் காட்டி உள்ளன. செய்து முடிக்க சில மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் தனி மனிதராகப் பங்கு கொள்ள ஆசைப் படுகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக ஹாயித்தி தீவிற்குப் போய் ஆக வேண்டும்.

இல்லை என்றால் இந்தத் திட்டத்தில் இடம் பிடிப்பது கஷ்டம். இப்போதைக்கு அந்த நாட்டில் விமான வசதிகள் எதுவும் இல்லை. கப்பல் வசதிகளும் இல்லை. ஒன்று செய்யலாம். அந்தத் தீவிற்கு வேண்டும் என்றால் நீச்சல் அடித்துப் போகலாம். உங்கள் வசதி எப்படி?

கா.மஞ்சரி, சாலாக் செலாத்தான், கோலாலம்பூர்
கே: குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி வந்து விட்டதாமே. அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள்  பெரிய பெரிய குங்குமப் பொட்டுகளை வைத்து இருந்தால் சந்தேகப் படுகிறார்களாம். இந்தியாவில் உள்ள நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் கதை?

ப:
கைக்கணினி என்றால் PDA. அதாவது Portable Digital Assistant. அதே போல I Phone என்றால் Internet Phone. இணையத்துடன் தொடர்பு கொள்ளும் கைப்பேசி. இதற்கு இணையக் கைப்பேசி என்று பெயர்.

குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி அல்லது இணையக் கணினி இன்னும் வரவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் வந்து விடலாம்.

பெரிய பெரிய பொட்டுகளை வைத்துக் கொண்டு வரும் பெண்களைச் சந்தேகப் படும் அளவிற்கு நிலைமை இன்னும் மோசம் ஆகவில்லை.

குங்குமப் பொட்டின் தடிப்பு ரொம்பவும் மொத்தமாக இருந்தால் விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் வருவது இயல்பது தான்.

அதில் கொஞ்சம் கஞ்சா அல்லது கொஞ்சம் போதைப் பொருள் மறைக்கப் பட்டு இருக்கலாம் இல்லையா. அது எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு வகையான சந்தேகம் தான். பத்து காசு பொட்டாக இருந்தால் பரவாயில்லை. அதற்காக ஐம்பது காசு பொட்டை ஒட்டிக் கொண்டு போனால் எப்படி ஐயா? நீங்களே சொல்லுங்கள்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவர்களுடைய வேலைகளை அவர்கள் பாட்டிற்குச் செய்கிறார்கள்.அவர்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும். ஒன்று உங்களுக்குத் தெரியுமா. உலகத்திலேயே மிகவும் கெட்டிக்கார போலீஸ்காரர்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள். அதே போல அவர்களுக்குத் தண்ணி காட்டும் படு மோசமான தாதாக்களும் அங்கே தான் இருக்கிறார்கள். இதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்னும் ஒரு விஷயம். ரகசியக் காமிராக்கள் குங்குமப் பொட்டு அளவிற்கு வந்து விட்டன. அந்த மாதிரியான காமிராக்கள் மேலை நாடுகளில் சர்வ சாதாரணம். மலேசியாவிலும் கிடைக்கிறது. அதன் விலை RM1620. இந்தக் காமிராக்கள் கம்பித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் இயங்கும் கம்பியில்லா காமிராக்கள். காமிராவை நெற்றியில் பொட்டு மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

நீங்கள் பார்ப்பதைக் காமிராவும் பார்க்கும். பார்த்ததைப் படம் பிடித்துக் கொள்ளும். அல்லது வீடியோ ஒளி அலையாகவும் மாற்றிக் கொள்ளும். இந்தக் காமிரா கடுகு அளவுள்ள ஒரு மின்கலத்தால் இயங்குகிறது. பிடித்தப் படங்களை உங்களுடைய கைப்பையில் இருக்கும் சேமிப்புத் தட்டுக்கு அனுப்பி விடும்.

தவிர நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உங்கள் வீட்டிற்கும் அனுப்பிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் குங்குமப் பொட்டு ரகசியக் காமிராக்கள் எல்லா வீடுகளுக்கும் வந்துவிடலாம். அதனால் அதிகமான பிரச்னைகள் வரலாம். கணினித் தொழில் நுட்பத்தால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.


குலேபகாவலி கல்யாணம், தஞ்சோங் சிப்பாட், சிலாங்கூர்
கே: UPS என்பதற்கும் AVR என்பதற்கும் என்ன என்ன வேறுபாடுகள்?
ப:
உங்கள் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பழைய ஞாபகங்களை நினைவு படுத்துகிறது. சரி. UPS என்றால் Uninterrupted Power Supply. இதைத் 'தடையற்ற மின்சார வழங்கி' என்பார்கள். விலை RM150 க்குள் இருக்கும். இதை வாங்கி உங்கள் கணினியுடன் பொருத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வரும் மின்சாரம் திடீரென்று நின்று போனால் இந்தச் சாதனம் உடனே உயிர் பெற்று உங்கள் கணினிக்கும் உயிர் கொடுக்கும். கணினியில் செய்து கொண்டு இருந்த வேலைகள் அழிந்து போகாது. பாதுகாப்பாக இருக்கும். சரி.

AVR என்றால் Automatic Voltage Regulator. இந்தச் சாதனம் கணினிக்கு எவ்வளவு மின்சாரத்தைக் கொடுக்கலாம் என்பதை நிர்ணயம் செய்யும். விலை RM68 லிருந்து RM90 வரை இருக்கும்.

கணினியும் நீங்களும் - பகுதி 60

(மலேசிய நண்பன் 16.6.2010 ஞாயிறு இதழில் பிரசுரம் ஆனது)

கணினியும் நீங்களும் - பகுதி 60


அர்ஜுனன் செல்வராஜா  arjunanselvaraja@ymail.com
கே: சார், எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால், தமிழ் எழுதத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுவேன். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு மாற்றும் மென்பொருள் இருக்கிறதா?

ப:
தமிழ் மொழியின் மீது உள்ள உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்து கள். கணினி உலகம் எங்கோ போய் விட்டது. நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுக்கும் நிரலி வந்துவிட்டது. அந்த நிரலி உலகில் உள்ள 19 மொழிகளை ஒரே ஒரு விநாடி நேரத்தில் மாற்றிக் கொடுத்து விடுகிறது. http://www.google.co.in/transliterate/indic/Tamil எனும் இடத்தில் அந்த நிரலியின் பயன் பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி மொழி மாற்றம் செய்வதை ஆங்கிலத்தில் Transliteration என்று சொல்வார்கள். தொடக்கத்தில் சற்று குழப்பம் வரலாம். கொஞ்ச நேரம் போராடினால் எல்லாம் சரியாகி விடும்.


நா.பார்த்திபன், செலாயாங், கோலாலம்பூர்
கே: இணையத்தில் நீங்கள் அண்மையில் ரசித்த வலைப் பதிவர்கள் ஜோக் ஏதாவது சொல்ல முடியுமா?

ப:
ஒரு செய்தி படித்தேன். தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர் ஒருவர். இவர் சிங்கையில் இருந்து வாரா வாரம் மளிகை சாமான்கள் வாங்க ஜொகூர் பாருக்கு வருவாராம். அவருடைய கடப்பிதழில் ஏதோ பிரச்னை. மலேசிய குடி நுழைவு அதிகாரிகள் அவரை மலேசியாவுக்குள் விட வில்லை. உடனே அவர் தன்னுடைய பான் அட்டையைக் காட்டி இருக்கிறார். PAN Card என்றால் இந்தியாவின் வருமான வரி இலாகா கொடுக்கும் Permanent Account Number.

அதைப் பார்த்ததும் மலேசிய அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்ததாக எழுதி இருக்கிறார். நல்ல ஜோக். http://krpsenthil.blogspot.com எனும் இடத்தில் இருக்கிறது. போய்ப் படித்து பாருங்கள்.


தனபால் 
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?
ப:
.exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால் அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும்.

நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும். இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.


ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: சார், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அங்கு 28 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. சம்பளப் பட்டுவாடா கணக்கை மைக்ராசாப்ட் Excel நிரலியில் செய்து வருகிறேன். அதன் படியே சம்பளமும் கொடுத்து வந்தேன். யாரென்று தெரியவில்லை. திடீரென்று அந்த கணக்கு கோப்பை Folder ஐ பூட்டி வைத்து விட்டார்கள். ஒரு கடவுச்சொல் Password கொடுத்து கடைசி வரை திறக்க முடியாமல் செய்தும் விட்டார்கள். போன மாதம் சம்பளம் கொடுத்து விட்டேன். என் முதலாளி என்னை ஏசிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு கணக்கைப் பாது காக்க முடியாத நான் நிறுவன ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் என் வேலைக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது. அந்தக் கணக்குக் கோப்பை மீட்டு எடுக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். வேதனையுடன் எழுதுகிறேன்.

ப:
நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருக்கிறீர்கள். நிறுவனத்தின் ஆவணங்களை எப்போதும் Backup எனும் பின்னாதரவு செய்து நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது யார் வேண்டுமானாலும் அந்தக் கணினியைப் பயன் படுத்தி இருக்கலாம். இல்லையா.

வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட வேண்டும்.  உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது தொல்லை கொடுக்க விரும்பலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தொலைவில் இருந்து ரசித்து மகிழலாம்.

இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அடுத்தவர் வேதனைப் படுவதைப் பார்த்து சந்தோஷப் படும் இரண்டு கால் ஜ“வன்கள் வாழ்கின்ற காலம்.  ஆக அவர்கள் வெட்கப் படும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி?
  http://rs93.rapidshare.com/files/394833431/Office.Password.Unlocker.v4.0.1.6.WinALL.Cracked-YPOGEiOS.rar எனும் இடத்திற்குப் போய் நான் சொல்லும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணினியில் பதிப்பு செய்யுங்கள். அதில் எக்செல் ஆவணத்தின் இடத்தைச் சொல்லுங்கள். ஒரு சில விநாடிகளில் அவர்கள் போட்ட கடவுச் சொல்லைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தச் சொல்லைப் பயன் படுத்தி ஆவணத்தை மீட்டுக் கொள்ளுங்கள். இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெ.செல்லக்கண்ணு, கோத்தா கெமுனிங், கிள்ளான்
கே: நீங்கள் இவ்வளவு கணினியைப் பற்றி பேசுகிறீர்கள் சொல்கிறீர்கள். சின்ன கேள்வி. உங்களுடைய மடிக்கணினி இன்னும் எத்தனை நாளைக்கு வேலை செய்து தாக்குப் பிடிக்கும்  என்பதைப் பற்றி கணித்துச் சொல்ல முடியுமா?

ப:
கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த அறிவுப் பேழை. மடியில் தவழும் மனைவியைப் போன்ற ஒரு மகா காவியம். அப்படிப் பட்ட கலா ஓவியத்தைப் போய்  எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும்  என்று வாசிக்கலாமா?


பச்சையப்பன் ராஜகோபால், ஸ்ரீ மூடா, ஷா ஆலம்
கே: நம்முடைய CD எனும் குறும் தட்டில் கீறல்கள் விழுந்து விட்டால் அதைப் பயன் படுத்த முடியாமல் போகிறது. அத்துடன் அதனுள் இருக்கும் தகவல்களும் கிடைக்காமல் போகின்றன. முக்கிய தகவல்கள் இருந்தால் கெட்டுப் போன சிடி யிலிருந்து மீட்க முடியுமா?

ப:
முடியும். ஓர் இலவசமான நிரலி இருக்கிறது. கீறல்கள் விழுந்த குறுந்தட்டுகளில் இருந்து தகவல்களை மீட்டுத் தருகிறது.
http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html எனும் இடத்தில் சிடி ரோலர் எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதைப் பயன் படுத்தி காணாமல் போன கோப்புகள், படங்கள் போன்றவற்றை மீட்டுக் கொள்ளுங்கள்.


மா.செல்வக்குமாரி, தாமான் பிஸ்தாரி, தஞ்சோங் ரம்புத்தான்
கே: என்னுடைய மகளுக்கு வயது ஐந்து. அவருக்கு அடிப்படை பியானோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். கணினியின் தட்டச்சுப் பலகை மூலமாகச் சொல்லித் தர ஏதாவது நிரலி இருந்தால் சொல்லுங்கள் ஐயா. உண்மையிலேயே நீங்கள் மலேசிய இந்தியர்களுக்கு நல்ல கணினிச் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். இந்தப் பகுதியின் மூலமாக நாங்கள் எவ்வளவோ பயன் அடைந்து வருகிறோம். மலேசிய நணபன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.

ப:
ஈப்போவில் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது. அதனால் ரொம்ப பேருக்கு சளி இருமல். உங்களுடைய நீண்ட பாராட்டு மடலைப் படித்த எனக்கும் எக்கச் சக்கமாக சளி பிடித்து விட்டது. சமாளித்து விட்டேன். பியானோ பற்றி கேட்டு இருந்தீர்கள். உங்களுக்கு என்றே உருவாக்கின மாதிரி ஒரு நிரலி இருக்கிறது. மிக மிக அற்புதமான நிரலி. http://www.4shared.com/file/PqSiZeqi/FxKeyboard.html எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


சுகுமாறன் நாயர் 
கே: தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். விண்டோஸ் 7ல் பயன் படுத்துவது எப்படி?

ப:
யூனிகோடு முறையை அனைத்து கணினிகளிலும் பயன் படுத்தும் வகையில் இப்போது முரசு அஞ்சல் நிரலியை உருவாக்கம் செய்துள்ளார்கள். அதை நீங்கள் http://anjal.net/ எனும் இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விலை மலேசிய ரிங்கிட் 99. அதில் நிறைய பயன் பாடுகள் உள்ளன. அருமையான நிரலி. கொடுக்கின்ற காசிற்கு வஞ்சகம் இல்லாமல் செயல் பாடுகளும் அமைகின்றன.

தவிர நியூ ஹாரிசான் எனும் நிறுவனமும் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியைக் கொடுக் கிறார்கள். ஆனால், முரசு அஞ்சலைப் போல சகல வசதிகளும் இல்லை. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதைக் கணினிக்குள் பதிப்பு செய்ததும் ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள்.  Settings  என்று வரும். அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விடுங்கள். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.

தட்டச்சு பலகையில் Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளை நிற மணியின் சின்னம் தங்க நிறமாக மாறும். அப்படி என்றால் தமிழுக்கு மாறி விட்டது என்று அர்த்தம். அதே பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால் சின்னம் வெள்ளை நிறமாக மாறும். ஆங்கிலத்திற்குப் போய்விட்டது என்று அர்த்தம். தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்.

06 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 59

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 06.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

கார்த்திகேயன், கோம்பாக், சிலாங்கூர்
கே: நாம் வாங்கிய கைப்பேசி அசலானதா அல்லது போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது. ஏன் என்றால் குறைந்த விலைக்கு நிறைய வசதிகளுடன் சீனாவிலிருந்து கைப்பேசிகள் வருகின்றன.

ப:
உலகத்தில் உள்ள எல்லா கைப் பேசிகளுக்கும் IMEI எனும் தனிப்பட்ட அசல் தர இலக்கங்களைக் கொடுத்து இருப்பார்கள். International Mobile Equipment Identification. அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்கள் கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். உடனே 15 எண்களைக் கொண்ட IMEI திரையில் வரும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த எண்களை உள் புகுத்துங்கள். உங்கள் கைப்பேசி அசலா போலியா என்பது தெரிந்து விடும். தவிர, உங்கள் கைப்பேசியைப் பற்றிய எல்லா தகவல்களும் கிடைத்து விடும்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.  Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

மேலும் சில தகவல்களைச் சொல்கிறேன்.

1. டிஜிட்டல் காமிரா மூலம் எடுத்த படங்களை நேரடியாக Wallpaper ஆக்க வேண்டாம். ஏன் என்றால் இந்தப் படங்கள் கணினியில் அதிகப் படியான மெமரி எனும் நினைவாற்றலை எடுத்துக் கொள்ளும்.

2. ஒரு நிரலியை மூடிய பிறகு Desktop எனும் மேசைத் திரையில் வைத்து Refresh எனும் புத்தாக்கம் செய்யுங்கள்.

3. கணினி முழுமையாக Boot ஆகி செயல் படுவதற்கு முன்னால் எந்த நிரலியையும் உடனடியாகத் திறக்க வேண்டாம்.

4. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய நிரலிகளைத் தயவு
செய்து C Drive ல் உள்ள இயங்குதளத்தில் பதிக்க வேண்டாம். வேறு ஒரு Partition எனும் வன் தட்டுப் பிரிவில் பதியுங்கள். கணினி வேகமாக இயங்கும்.

5. மேசை திரையில் அதிகமான Shortcut களை உருவாக்கி வைக்க வேண்டாம். பெரிய அளவிலான கோப்புகளைச் சேர்த்து வைக்க வேண்டாம்.

6. அடிக்கடி Recycle Bin ஐ சுத்தப் படுத்தி விடுங்கள்.

01 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 58

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 31.05.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

காஞ்சனா, தம்பின்  
கே: அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் செம்மொழி நாட்டில் தமிழ் மொழியின் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்யப் போகிறார்களாம்.  அதன்படி
இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்கப் போகிறார்களாம்.  உண்மையா? உங்கள் கருத்து என்ன?

ப:
மொத்தத்தில்  தமிழில் உள்ள 246 எழுத்துகளையும்  எடுத்து விட்டு 72 எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் 72 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.

அந்த 72 உயிர்மெய் எழுத்துகளையும் அப்படியே மாற்ற வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.

சி, சீ, சு, சூ, தி, தீ, து, தூ, பி, பீ, பு, பூ போன்ற எழுத்துக்கள் எதிர்காலத்தில் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்னை கொடுக்கப் போகிறதாம். அதனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை. நான்கு புதிய எழுத்துக்களையும் கொண்டு வருகிறார்கள்.

அவை மத்திய கிழக்கு நாடுகளின் புழக்கத்திற்கு கொண்டு போகின்றன. அந்தப் புதிய எழுத்துகள் ஜிலேபி வடிவத்தில் ரொம்ப அழகாக இனிப்பாகவும்  இருக்கின்றன.

குழந்தைகளுக்கு மிட்டாய் ஜிலேபி என்றால் பிடிக்கும் இல்லையா. அதனால் அந்த எழுத்துகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே படிப்பாரகள் என்று அப்படி  வடிவம் அமைத்து இருக்கிறார்கள்.

சீர்திருத்தம் செய்யப் படும் தமிழின் உகர எழுத்துகளை இடமிருந்து வலது புறமாக அராபிய ஜாவி எழுத்துகளைப் போல எழுத வேண்டி வரும். சொல்லப் போனால் தமிழின் 246 எழுத்துகளை புதிய வடிவத்தில் 72 எழுத்துகளுக்குள் அடக்கி விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாயிரம் எழுத்துகளை வைத்து இருக்கும் சீனர்களே அமைதியாக இருக்கிறார்கள். 246 எழுத்துகளை வைத்து இருக்கும் நாம் ஏன் அய்யா இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். புரியவில்லை. தமிழ் எழுத்துகள் செய்த பாவம் என்ன என்றும் தெரியவில்லை.

ஒரே அடியாக 246 எனும் எண்களின்  நடுவில் இருக்கும் 4ஐ பிடுங்கி விட்டால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சீர்திருத்தமும் செம்மையாக இருக்கும் இல்லையா.

அதைவிட 26 ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்து அம்மா என்று எழுதுவதற்குப் பதில் AMMA என்று ரோமானிய வடிவத்தில் எழுதி விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.  தமிழ் எழுத்துகளே தேவை இல்லை. ரொம்ப சிம்பளாகப் போய் விடும். செத்துப் போன நீரோ திரும்பி வந்து பிடில் வாசிக்கட்டுமே.

ஆக, அந்தத் திட்டத்தை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப் போகிறார்கள். சபாஷ் சரியான போட்டி! மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு மலேசியாவில் இருந்தும் சிலர் போகிறார்கள். பாவம், அவர்களைக் குறைச் சொல்லக் கூடாது.

அவர்களில் சிலர்  கஷ்டப் பட்டு எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் எல்லாம் எதிர்காலத்தில் யாராலும் படிக்க முடியாமல் போகப் போகிறது. ஏன் என்றால் புதிய தமிழ் எழுத்துகள்தான் செல்லுபடி ஆகும். அப்புறம் எழுதியதை எல்லாம் புதிதாக மாற்ற வேண்டி இருக்கும்.

புதிய புத்தகங்களை அச்சிடுபவர்களின் இல்லங்களில் குபேர சாமியாரின் சொல் வாக்குதான் செல்வாக்காக இருக்கும். வாழ்க செம்மொழி மாநாட்டின் செம்மலகள்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும்.

நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம்.

இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரி, எப்படி இருந்தாலும் உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம். 

Control Panel க்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள்.

உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.